மேலும் அறிய

எனக்கு சைதன்யா எப்போதுமே ஸ்பெஷல் ! - விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா!

என் வாழ்க்கையில் வந்த எல்லோருமே சமந்தா ஒரு சிறந்த வெற்றிகரமான நடிகை என்பதை மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நாக சைதன்யா மட்டும்தான் இது எதுவுமே இல்லாத சமந்தாவை பார்த்தார்.

நண்பர்களாக இருந்து, காதலர்களாக மாறி பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்ட  காதல் தம்பதிகள்தான் சமந்தா - நாக சைதன்யா. இந்த ஜோடிகளுக்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் சமந்தாவும் நாக சைத்தன்யாவும் ஒருமனதாக விவாகரத்து செய்துக்கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்திற்கு பிறகு சமந்தா தான் எதிர்க்கொண்ட சவால்களையும் , நாக சைத்தன்யா குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

 


எனக்கு சைதன்யா எப்போதுமே ஸ்பெஷல் ! - விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா!

சமந்தா பகிர்ந்ததாவது :

"நாம் ஒரு அழுத்தம் மிகுந்த , அதிகம் உற்றுநோக்கக்கூடிய சமுதாயத்தில் இருக்கின்றோம் என நம்புகின்றேன். சமூக வலைத்தளங்களில் சிறப்பான வாழ்க்கை என்றால் என்ன என்பதற்காக முன் நிறுத்தப்படுகிறோம்.  அதிகம் உற்றுநோக்கப்படுவதால் நான் என்னுடைய பலவீனங்கள் , பதற்றம் , வலி என அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பேசுவதற்கு முடியாது. ஏனென்றால் நான் சமூக வலைத்தளங்களில் அதீத ஆக்டிவாக இருக்கும் பொழுது , என் மீதான ஃபோக்கஸும் அதிகமாக இருக்கிறது. யாருடைய வாழ்க்கையும் சிறப்பான ஒன்று கிடையாது! அடித்து சொல்லுவேன் யாருடைய வாழ்க்கையும் பர்ஃபெக்ட் கிடையாது. எங்களை போன்றவர்கள் , என்னை போன்றவர்கள் சினிமாவின் ஜொலிப்பு , கிளாமர் என அனைத்தையும் பேசுவது போல உங்களது வலி , கடினமான சூழல் , தாழ்வுகள் என அனைத்தை பற்றியும் அதிகமாக பேசுங்கள். அதுவும் சாதாரணமனாதுதான்.  நாம் எல்லோருமே கடினமான சூழல்களை கடந்து வருவதும், அது குறித்து பேசுவதும் சாதாரண ஒன்றுதான். அதேபோல மற்றவர்களிடம் அதிலிருந்து வெளியே வருவதற்கான உதவியை கோருவதும் சாதாரண ஒன்றுதான். நான் எனது வாழ்க்கையில் கடினமான நேரத்தை கடந்து வந்திருக்கிறேன். நான்  உதவி கேட்டேன்.  என் நண்பர்கள் , ஆலோசகர்கள் எல்லோரும் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார்கள். நான் எனது வாழ்க்கையில் அடுத்த பகுதிக்கு தயாராகிவிட்டேன். அது நான் மனவலிமை கொண்ட பெண் என்பதால் அல்ல , என்னை சுற்றி இருந்த பல பேர் என்னை அப்படியாக மாற உதவி செய்தார்கள். இதுதான் நமக்கான தாழ்வுகளை , சாதாரணமாக கடப்பதற்கும் , உதவிகளை கேட்பதற்கும் சரியான  நேரம் என நினைக்கிறேன். நாம் எலும்புகள் உடைந்திருந்தால் , மருத்துவரை நாடி அவர்களிடம் உதவி கேட்போம் அல்லவா! அதைப்போலத்தான் நம் இதயம் உடைந்திருந்தாலும் மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டும்.  உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்கள் எப்போதும் கால் பண்ணுங்க, கால் பண்ணுங்க என சொல்வதில்லை. அது போலத்தான் நமது நண்பர்களும்  குடும்பமும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்.  ஆனால் இப்போது அப்படியாக சொல்ல வேண்டிய நேரம். உனக்காக நாங்கள் இருப்போம், என்ன உதவி வேண்டுமோ கேள் என குடும்பமும் நண்பர்களும் சொல்ல வேண்டும்.. எனக்கு ரசிகர்கள் , பணம் , வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் என எதுவுமே  என்னிடம் இருந்தது கிடையாது. என் வாழ்க்கையில் வந்த எல்லோருமே சம்ந்தா ஒரு சிறந்த வெற்றிகரமான நடிகை என்பதை மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நாக சைதன்யா மட்டும்தான் இது எதுவுமே இல்லாத சமந்தாவை பார்த்தார். chai எனக்கு எப்போதுமே ரொம்ப ஸ்பெஷலான மனிதர்தான். ஏனென்றால் அவர் என்னுடைய பெஸ்ட் ஃபிரண்டாக இருந்திருக்கிறார். எங்களுக்கு இடையில் இருக்கும் நட்பு  9 வருடங்கள். நாங்கள் ஒருவரை ஒருவோர் புரிந்துக்கொண்டதால்தான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறோம் . அந்த நட்பு எப்போதும் முடிவுக்கு வராது." என்றார் சமந்தா.

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Embed widget