மேலும் அறிய

எனக்கு சைதன்யா எப்போதுமே ஸ்பெஷல் ! - விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா!

என் வாழ்க்கையில் வந்த எல்லோருமே சமந்தா ஒரு சிறந்த வெற்றிகரமான நடிகை என்பதை மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நாக சைதன்யா மட்டும்தான் இது எதுவுமே இல்லாத சமந்தாவை பார்த்தார்.

நண்பர்களாக இருந்து, காதலர்களாக மாறி பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்ட  காதல் தம்பதிகள்தான் சமந்தா - நாக சைதன்யா. இந்த ஜோடிகளுக்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் சமந்தாவும் நாக சைத்தன்யாவும் ஒருமனதாக விவாகரத்து செய்துக்கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்திற்கு பிறகு சமந்தா தான் எதிர்க்கொண்ட சவால்களையும் , நாக சைத்தன்யா குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

 


எனக்கு சைதன்யா எப்போதுமே ஸ்பெஷல் ! - விவாகரத்திற்கு பிறகு மனம் திறந்த சமந்தா!

சமந்தா பகிர்ந்ததாவது :

"நாம் ஒரு அழுத்தம் மிகுந்த , அதிகம் உற்றுநோக்கக்கூடிய சமுதாயத்தில் இருக்கின்றோம் என நம்புகின்றேன். சமூக வலைத்தளங்களில் சிறப்பான வாழ்க்கை என்றால் என்ன என்பதற்காக முன் நிறுத்தப்படுகிறோம்.  அதிகம் உற்றுநோக்கப்படுவதால் நான் என்னுடைய பலவீனங்கள் , பதற்றம் , வலி என அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பேசுவதற்கு முடியாது. ஏனென்றால் நான் சமூக வலைத்தளங்களில் அதீத ஆக்டிவாக இருக்கும் பொழுது , என் மீதான ஃபோக்கஸும் அதிகமாக இருக்கிறது. யாருடைய வாழ்க்கையும் சிறப்பான ஒன்று கிடையாது! அடித்து சொல்லுவேன் யாருடைய வாழ்க்கையும் பர்ஃபெக்ட் கிடையாது. எங்களை போன்றவர்கள் , என்னை போன்றவர்கள் சினிமாவின் ஜொலிப்பு , கிளாமர் என அனைத்தையும் பேசுவது போல உங்களது வலி , கடினமான சூழல் , தாழ்வுகள் என அனைத்தை பற்றியும் அதிகமாக பேசுங்கள். அதுவும் சாதாரணமனாதுதான்.  நாம் எல்லோருமே கடினமான சூழல்களை கடந்து வருவதும், அது குறித்து பேசுவதும் சாதாரண ஒன்றுதான். அதேபோல மற்றவர்களிடம் அதிலிருந்து வெளியே வருவதற்கான உதவியை கோருவதும் சாதாரண ஒன்றுதான். நான் எனது வாழ்க்கையில் கடினமான நேரத்தை கடந்து வந்திருக்கிறேன். நான்  உதவி கேட்டேன்.  என் நண்பர்கள் , ஆலோசகர்கள் எல்லோரும் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார்கள். நான் எனது வாழ்க்கையில் அடுத்த பகுதிக்கு தயாராகிவிட்டேன். அது நான் மனவலிமை கொண்ட பெண் என்பதால் அல்ல , என்னை சுற்றி இருந்த பல பேர் என்னை அப்படியாக மாற உதவி செய்தார்கள். இதுதான் நமக்கான தாழ்வுகளை , சாதாரணமாக கடப்பதற்கும் , உதவிகளை கேட்பதற்கும் சரியான  நேரம் என நினைக்கிறேன். நாம் எலும்புகள் உடைந்திருந்தால் , மருத்துவரை நாடி அவர்களிடம் உதவி கேட்போம் அல்லவா! அதைப்போலத்தான் நம் இதயம் உடைந்திருந்தாலும் மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டும்.  உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்கள் எப்போதும் கால் பண்ணுங்க, கால் பண்ணுங்க என சொல்வதில்லை. அது போலத்தான் நமது நண்பர்களும்  குடும்பமும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்.  ஆனால் இப்போது அப்படியாக சொல்ல வேண்டிய நேரம். உனக்காக நாங்கள் இருப்போம், என்ன உதவி வேண்டுமோ கேள் என குடும்பமும் நண்பர்களும் சொல்ல வேண்டும்.. எனக்கு ரசிகர்கள் , பணம் , வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் என எதுவுமே  என்னிடம் இருந்தது கிடையாது. என் வாழ்க்கையில் வந்த எல்லோருமே சம்ந்தா ஒரு சிறந்த வெற்றிகரமான நடிகை என்பதை மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நாக சைதன்யா மட்டும்தான் இது எதுவுமே இல்லாத சமந்தாவை பார்த்தார். chai எனக்கு எப்போதுமே ரொம்ப ஸ்பெஷலான மனிதர்தான். ஏனென்றால் அவர் என்னுடைய பெஸ்ட் ஃபிரண்டாக இருந்திருக்கிறார். எங்களுக்கு இடையில் இருக்கும் நட்பு  9 வருடங்கள். நாங்கள் ஒருவரை ஒருவோர் புரிந்துக்கொண்டதால்தான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறோம் . அந்த நட்பு எப்போதும் முடிவுக்கு வராது." என்றார் சமந்தா.

தலைப்பு செய்திகள்

விஜயகாந்த் - எஸ்ஏ சந்திரசேகர் கூட்டணியில் உருவான படங்கள் இத்தனையா? எத்தனை ஹிட்?
விஜயகாந்த் - எஸ்ஏ சந்திரசேகர் கூட்டணியில் உருவான படங்கள் இத்தனையா? எத்தனை ஹிட்?
திடீர் திருமணமா? விளம்பரமா ? ஜான்வி கபூரின் வைரல் திருமண வீடியோ பின்னணி என்ன?
திடீர் திருமணமா? விளம்பரமா ? ஜான்வி கபூரின் வைரல் திருமண வீடியோ பின்னணி என்ன?
Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் - திமுகவின் மாற்றத்துடன் ஸ்டாலின் நம்பிக்கை
திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் - திமுகவின் மாற்றத்துடன் ஸ்டாலின் நம்பிக்கை
MK Stalin: தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
அறிமுகமாகியது Jawa All Stars 42 FJ பைக்.. சும்மா அசத்தலா இருக்குது! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Jawa All Stars 42 FJ பைக்.. சும்மா அசத்தலா இருக்குது! விலை எவ்ளோ?
CM Vijay: மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் கோரிக்கை
மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய் கோரிக்கை
பட்ஜெட் உரை மரபுகளை மாற்ற வேண்டும்: நிதி அமைச்சர் எழுதவில்லை... - PTR பழனிவேல் தியாகராஜன் !
பட்ஜெட் உரை மரபுகளை மாற்ற வேண்டும்: நிதி அமைச்சர் எழுதவில்லை... - PTR பழனிவேல் தியாகராஜன் !
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
Embed widget