மேலும் அறிய

Vijay Milton On Vijay : ”நடிப்பையே நிறுத்தப்போறேன்னு விஜய் சொன்னார்..” விஜய் மில்டன் சொன்ன புதுத்தகவல்!

நடிகர் விஜய்யை வைத்து இயக்க வேண்டிய படத்தை விக்ரமை வைத்துப் பண்ணேன் என்று இயக்குநர் விஜய் மில்டன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யை வைத்து இயக்க வேண்டிய படத்தை விக்ரமை வைத்துப் பண்ணேன் என்று இயக்குநர் விஜய் மில்டன் கூறியுள்ளார். இந்தப் பெயரைச் சொன்னவுடன் சட்டென நினைவுக்கு வருவது என்னவோ கோலி சோடா படம் தான். ஆனால் அவர் அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, பத்து எண்றதுக்குள்ள என நிறைய படங்களை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய்யின்  ஆரம்பகால படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் இயக்குனர் விஜய் மில்டன். பல்வேறு படங்களில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியதால் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மில்டன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை வைத்து இயக்க வேண்டிய படத்தை விக்ரமை வைத்துப் பண்ணேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல், தளபதி விஜய் எனக்கு நடிப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லை. 2000 ஆண்டுக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்குனராக போகிறேன் என கூறியதாக சொல்லியுள்ளார். ஆனால் விஜய் இன்று அதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உச்ச நடிகராக வளர்ந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

பத்து எண்றதுக்குள்ள..

நான் விஜய் படங்களில் கேமரா மேனாக இருக்கும்போதே அவருக்கு நிறைய கதை சொல்வேன். ஏன்னா நான் டைரக்டராக வேண்டும் என்று தான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்தேன். அதனால் யாரைப் பார்த்தாலும் ஒரு கதை இருக்குதுன்னு ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் நான் ஒர்க் பண்ற படங்களிலும் எனக்கு ஏதாவது கருத்து சொல்ல வாய்ப்பிருக்கா என்று தான் பார்ப்பேன். நீ கேமரா மேன் வேலையை மட்டும் பாருன்னு சொல்றவங்க படத்தில் வேலை செய்ய மாட்டேன். விஜய்யையிடம் நான் தொடர்ந்து கதை சொல்லிக்கிட்டே தான் இருந்தேன்.

பிரியமுடன் படத்தின் சூட்டிங்கின் போதே நான் விஜய்யிடம் ஒரு கதை சொன்னேன். தோழன் என்று அதற்குப் பெயர். அவரும் கதையை கேட்டுவிட்டு ஃபர்ஸ்ட் ஹாஃப் எக்ஸலன்ட் மில்டன். க்ளைமாக்ஸ் கொஞ்சம் சரியில்லை. நீங்கள் கதையை முழுசா ரெடி பண்ணிட்டு வாங்க என்று சொன்னார்.

பிரியமுடன் 100வது நாள் விழாவில், என்னை அவர் மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்தினார். அதன் பின்னர் ஒரு கேப் விழுந்தது. அதன் பின்னர் நான் சேரன் சார் புரொடக்‌ஷனில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படம் பண்ணினேன். விஜய் அதை கேள்விப்பட்டு தனது மேனேஜர் மூலம் படம் பார்க்க விருப்பம் தெரிவித்தார்.

ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. விஜய், சங்கீதா மேடம், அவர்களின் சிறு குழந்தை என மூவரும் வந்து படத்தைப் பார்த்தனர். படம் விஜய்க்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இதைப் பார்த்தால் எனக்கு மீண்டும் லவ் பண்ணனும் போல் இருக்கிறது என்று கூறினார். ஆனால் படம் ஓடவில்லை.  விஜய் என்னை கூப்பிட்டு ஏதாவது கதை வச்சிருக்கீங்களா என்று கேட்டார்.

அப்போ தான் நான் அவரிடம் பத்து எண்றதுக்குள்ள கதையைச் சொன்னேன். கதை ஓகே கிளம்புங்க என்றார். எனக்கு செம்ம சந்தோஷம். முதலில் அதை லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தது. அப்புறம் பிரகாஷ் ராஜ் கதையை கேட்டுவிட்டு அவரே விஜய்யிடம் சென்று நான் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். டூயட் மூவிஸும் இந்த பெரிய பட்ஜெட் படத்தைப் பண்ண முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. ஏவிஎம் சரவணன் விஜய்யை வைத்து வேட்டைக்காரன் தயாரிக்கிறார்.

இப்படியே நான் விஜய்யை வைத்து படம் செய்வது பல காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. 5 வருஷமா டேக் ஆஃப் ஆகவே இல்லை. அதற்கிடையே அயன் படம் வந்தது. அதில் நான் யோசிச்சிருந்த நிறைய சீன் வந்திடுச்சி. எனக்கு ரொம்பவே அப்செட்டாகிவிட்டது. அப்போதுதான் நான் கோலி சோடா பண்ணேன். அது செம்ம ஹிட். விஜய்க்கு அப்போ கத்தி சூட் நடக்குது. அப்போ விஜய் என்னைப் பார்த்து கோலி சோடா படத்தைப் பாராட்டினார். அப்போது நான் அவரிடம் பத்து எண்றதுக்குள்ள படத்தை விக்ரமை வைத்து பண்ணுவதாக சொன்னேன். உடனே விஜய் அது என் கிட்ட சொன்ன கதை தானே சூப்பரா பண்ணுங்க அண்ணா என்றார். அதுதான் நான் விஜய்யை நேரடியாக கடைசியாக சந்தித்த தருணம். இவ்வாறு விஜய் மில்டன் கூறினார்.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget