மேலும் அறிய

23 Years of Rhythm: ஒரு உறவின் பிரிவு.. இன்னொரு உறவின் தொடக்கம்...23 வருடங்களை நிறைவு செய்யும் ரிதம்..!

23 Years of Rhythm: அர்ஜுன், மீனா,ஜோதிகா நடித்து வசந்த் இயக்கிய ரிதம் திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைகின்றன

இயக்குநர் வசந்த் இயக்கிய ரிதம் திரைப்படம் வெளியாகி 23 வருடங்கள் ஆகின்றன. அர்ஜுன், மீனா, ஜோதிகா, நாகேஷ், ரமேஷ் அரவிந்த், லக்ஷ்மி , மனிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடித்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். இந்தப் படத்திற்கு இன்றுவரை நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை ரிதம் படத்தை நீங்கள் திரும்பப் பார்க்க நினைத்தால் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து பார்க்கலாம்

ரிதம்

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்

தண்ணீர் கரையில் முடிக்கிறோம்

என்கிற வரிகளில் இருந்து ஆரம்பிக்கிறது படம். வாழ்க்கை தொடங்குவது, வாழ்க்கை முடிவது என்பதைப் பற்றியது தான் இந்தப் படத்தின் கதை. ஆனால்  நாம் நேசித்தவர்களின் வாழ்க்கையோடு சேர்த்து அவர்களுடனான உறவும் இறந்துவிட்டதை  நினைத்து நமது வாழ்க்கையையும் தேக்கி வைத்துவிடுகிறோம். அதை மறுபடியும் புதிதாக ஆரம்பிக்க முடியும் என்பதே ரிதம் படத்தின் கதையின் சாரமாக இருக்கிறது.

கதை

இந்தியன் எக்ஸ்பிரஸில் ஃபோட்டோ எடிட்டராக வேலை செய்பவர் கார்த்திகேயன் (அர்ஜுன்). வேலை மாற்றலாகி புதிதாக மும்பைக்கு  குடிவருகிறார். ஒரு புதிய வங்கி கணக்கு வேலையாக சித்ரா (மீனா) வேலை செய்யும் வங்கிக்கு செல்கிறார் அர்ஜுன். சித்ராவின் டேபிளில் வைத்திருக்கும் புத்தகத்தைப் பார்த்து அவர் தமிழ்க்காரர் என்று கண்டுபிடிக்கிறார் கார்த்திக். தொடர்ந்து ஒரு சில இடங்களில் அவரை பார்க்கும் கார்த்திக் அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்.

முன்பின் தெரியாது ஒரு ஆண் தன்னிடம் பேச முயற்சிப்பதை நினைத்து சந்தேகம் படுகிறார். தன்னை தப்பாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக சித்ராவிடம் பேசுகிறார் கார்த்திக். போகப் போக கார்த்திக் மற்றும் சித்ராவிற்கு நல்ல நட்பு ஏற்பட அவருடைய பெற்றோர்களைப் பார்க்க கார்த்திக்கின் வீட்டிற்கு செல்கிறார் சித்ரா. கார்த்திக் மற்றும் சித்ரா ஒரே ரயில் விபத்தில் தங்களது வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்கிறார்கள்.

அவர்களின் நட்பை திருமணமாக மாற்ற கார்த்திக்கின் பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்கிறார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

வசந்த் ஃபார்முலா

ஒரு நிஜக் கதையே தன்னை இந்தப் படத்தை இயக்கத் தூண்டியதாக இயக்குநர் வசந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ஒரு உறவின் பிரிவையும் ஒரு புதிய உறவிற்கான தொடங்குவதற்கான சாத்தியங்களை கொடுக்கும் வாழ்க்கையின் ஒரு அழகானத் தன்மையை வசந்த் மிக அழகாக தனது கதையில் கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இந்தப்  படத்தில் ஒரு சின்ன பயணம் இருக்கிறது.

கார்த்திக்கின் பெற்றோர்களாக நடித்த நாகேஷ் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான உரையாடல்கள் படத்தில் கார்த்திக் அவர்களை சொல்வதுபோல் “ அவங்க ரெண்டுபேரும் கெளண்டமனி செந்தில் மாதிரிதான் என்ன ஒதச்சிக்க மாட்டாங்க” என்பதுபோல் தான். தனது சம்மதம் இல்லாமல் சித்ராவை திருமணம் செய்துகொள்கிறார் ஸ்ரீகாந்த் (ரமேஷ் அரவிந்த்). இதனால் தனது மகனை ஆசீர்வதிக்காமல் வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறார் லக்ஷ்மி. தனது மகன் இறந்ததற்கு காரணம் தான் தான்  என்று குற்றவுணர்ச்சியில் இருக்கும் சித்ராவை தன்னுடன் அழைத்துக் கொள்கிறார்.

ஆனால் கடைசியில் “ சித்ராக்கு என்ன வேணும்னு யோசிக்காம எனக்கு என்ன வேணும்னு யோசிச்சுட்டேன் “ அவரது கதாபாத்திரத்தின் மனமாற்றத்தை மிகச் சரியாக உணர்த்துவதாக இருக்கும். இப்படி படத்தில் தனித்தனியாக காட்சிகளை பேசலாம்.

இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரிதம் திரைப்படம் இயக்குநர் வசந்தின் சிறந்தப் படங்களில் ஒன்று.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget