மேலும் அறிய

Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் உருவாக காரணமான புத்தகம்.. ரகசியத்தை சொன்ன ராஜ்குமார் பெரியசாமி!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அமரன்”. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.

அமரன் படத்தை தான் இயக்க என்ன காரணம் என்பதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அமரன்”. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. 

இதனிடையே அமரன் படம் உருவானது எப்படி என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், “ரங்கூன் படத்துக்கு பிறகு நான் வேறொரு கதை பண்ணியிருந்தேன். எதாவது இங்கு நடந்தால் தான் நிச்சயம். அது கதை வகையில் மிகப்பெரிய படம். கிட்டதட்ட முன்னேற்பாடு பணிகள் எல்லாம் முடிந்து ஷூட்டிங் போகும் சமயத்தில் நடிப்பவர்களிடையே தேதி பிரச்சினை என்பது வந்தது. அதனால் அந்த நேரம் எடுக்க முடியவில்லை. கொரோனா ஊரடங்கு முன்னால் மற்றும் பின்னால் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் வீணாகி விட்டது.

ரங்கூன் படம் ரிலீசாகி கிட்டதட்ட அடுத்த 3 மாதத்திற்குள் அப்படம் கமிட்டானேன். மிகப்பெரிய பட்ஜெட் என்ற போதிலும் விரைவில் அந்த படம் உருவாகும். அதைப்பற்றி ஆரம்பத்தில் செய்திகள் வந்தது. அந்த படத்தால் தான் இவ்வளவு தாமதம் என்பது ஏற்பட்டது. என்னை பொறுத்தவரையில் காத்திருப்பது கூட படம் உருவாவதற்கான நேரம் என்று தான் நினைப்பேன். எனக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது, அடுத்த படம் பற்றி பார்க்கிறவர்கள், கேட்கிறவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது தான் பெரிய டாஸ்க் ஆக இருக்கும். 

பிக்பாஸ் நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கும்போது ஒருநாள் கமல்ஹாசன் என்னிடம், நீங்கள் ஏற்கனவே படம் பண்ணியிருக்கிறீர்கள் அல்லவா, ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என சொன்னார். ராஜ்கமல் ஆபீஸில் அதற்கென ஒரு குழு உள்ளது. நான் மகேந்திரன் சாரிடம் அமரன் கதையோ, முன்னாடி சொன்ன கதையோ அல்லாமல் உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. அதன்பிறகு வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை வரவழைத்து கதை சொல்ல சொன்னார். நானும் சொன்னேன். அவர்கள் உடனடியாக கமலுக்கு போன் செய்து இந்த கதையை பண்ணலாம் என சொன்னார்கள். 

பொருட்செலவா ரூ.4 கோடியில் எடுக்கக்கூடிய படம் தான். ஆனால் உணர்வுகளை வேட்டையாடும் அளவுக்கு உண்மை சம்பவம் தான்.நான் அதைத்தான் செய்யப் போகிறேன் என வேலையெல்லாம் சென்று கொண்டிருக்கிறது.

அமரன் உருவான கதை

அப்போது எனக்கு மும்பையில் இருக்கும் நண்பர் ஒருவர் போன் செய்து "India's Most fearless" என்ற புக் இருக்கிறது. அதில் தற்போது 4 பாகங்கள் வந்து விட்டது. அதன் ஒவ்வொரு புத்தகமும் 15 ஹீரோக்களுக்கு சமர்பிக்கப்பட்டு இருக்கும். அதில் போர்முனை, இந்திய பாதுகாப்புத்துறையில் இருப்பவர்களின் வீரதீர செயல்களை பதிவு பண்ணிய தகவல்கள் இருக்கும். 

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பற்றி  2 தகவல்கள் எழுதியிருப்பதாக சொன்னார்கள். நான் முதலில் மேஜர் சரவணனாக இருக்கும் எண்ணினேன். இருந்தாலும் யாருன்னு என் நண்பரிடம் கேட்டேன். பின்னர் நீண்ட யோசனைக்குப் பின் மேஜர் முகுந்த் வரதராஜனா? என நானே திரும்ப கேட்டேன். அவர் சரியாக சொல்லிட்டிங்க என பதிலளித்தார்.  நான் டிவியில் மேஜர் முகுந்த் மரணம் பற்றியும், வாழ்க்கை வரலாறு பற்றியும் பார்த்தேன்.

மேலும் மேஜர் முகுந்தின் இறுதிச்சடங்கில் அவரின் மகள் செய்த விஷயம் யாராலும் மறக்க முடியாது. நான் அந்த புத்தகத்தை படித்தேன். சோனி நிறுவனம் இதில் ஒரு சாப்டரை படமாக்க இருப்பதாக சொன்னார்கள். 

ஆனால் நான் ஏற்கனவே கமிட்டான படம் பற்றி என் நண்பரிடம் சொன்னேன். மேலும் புத்தகம் மட்டும் வைத்து படம் பண்ண முடியாது என்பதால் தகவல்கள் வேண்டும் என நினைத்தேன். பின்னர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜனிடம் பேசினேன். அதன் பிறகு சிலரிடம் பேசி காஷ்மீரில் அவரின் 2 ஆபரேஷன்கள் பற்றி கேட்டறிந்தேன். முகுந்த் குடும்பத்தினரிடம் பேசிய போது வேறு வித தகவல்கள் கிடைத்தது. ஆனால் இவை எதுவும் திரைக்கதையாக வரவில்லை. இதை அனைத்தையும் பேப்பரில் எழுதி வைத்தேன்.

பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த மேஜர் முகுந்தின் மனைவியை சந்தித்தேன். அந்த சந்திப்பு 6,7 மணி நேரம் சென்றது. அப்போது தான் இந்த வாழ்க்கை பயணத்தில் ஒரு ஆன்மா உள்ளது தெரிந்தது. அப்படியாக அமரன் படத்தின் கதை உருவாக காரணம் அமைந்தது” என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
Free AI Courses: 5 இலவச ஏஐ படிப்புகளை அறிமுகம் செய்த அரசு- என்னென்ன? உங்கள் எதிர்காலத்தை மாற்றும் வாய்ப்பு!
Free AI Courses: 5 இலவச ஏஐ படிப்புகளை அறிமுகம் செய்த அரசு- என்னென்ன? உங்கள் எதிர்காலத்தை மாற்றும் வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
Free AI Courses: 5 இலவச ஏஐ படிப்புகளை அறிமுகம் செய்த அரசு- என்னென்ன? உங்கள் எதிர்காலத்தை மாற்றும் வாய்ப்பு!
Free AI Courses: 5 இலவச ஏஐ படிப்புகளை அறிமுகம் செய்த அரசு- என்னென்ன? உங்கள் எதிர்காலத்தை மாற்றும் வாய்ப்பு!
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
Cheapest Electric SUV: இனி இதுதான் மலிவு விலை மின்சார எஸ்யுவி.. அலறப்போகும் இந்திய சந்தை, மிரட்டும் சீனா கார்
Cheapest Electric SUV: இனி இதுதான் மலிவு விலை மின்சார எஸ்யுவி.. அலறப்போகும் இந்திய சந்தை, மிரட்டும் சீனா கார்
AK 64: தெறிக்க விடலாமா... அஜித்தின் அடுத்த படம் எப்படி இருக்கும்? செம அப்டேட் தந்த ஆதிக் ரவிச்சந்திரன்!
AK 64: தெறிக்க விடலாமா... அஜித்தின் அடுத்த படம் எப்படி இருக்கும்? செம அப்டேட் தந்த ஆதிக் ரவிச்சந்திரன்!
பங்கைப் பிரி.. பங்கைப் பிரி..! அதிமுக-விடம் பாஜக கேட்கும் தொகுதிகள் இத்தனையா? பிடிகொடுப்பாரா இபிஎஸ்?
பங்கைப் பிரி.. பங்கைப் பிரி..! அதிமுக-விடம் பாஜக கேட்கும் தொகுதிகள் இத்தனையா? பிடிகொடுப்பாரா இபிஎஸ்?
Embed widget