மேலும் அறிய

Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!

Chennai Marina Blue Flag Beach: மெரினா கடற்கரையில் இரண்டாம் கட்டமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளுக்காக புது வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • மெரினா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய வசதிகள் அறிமுகம்.
  • நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன.
  • குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள், படிப்பகங்கள், இதய வடிவிலான போட்டோ பாயிண்ட்.
  • கடலோரப் பகுதிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

சென்னை மெரினா கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழின் இரண்டாம் கட்டமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளுக்காக புத்தம்புது கண்கவர் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

அது என்ன நீலக்கொடி சான்றிதழ்?

டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் பல்வேறு கடற்கரை மதிப்பீடு செய்து, நீலக்கொடி சான்றிதழை வழங்கி வருகிறது. குறிப்பாக கடற்கரையில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை, தூய்மை நிலை, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு வசதிகள், சுற்றுச்சூழல் மேலாண்மை,  தூய நீர் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதில் ஆய்வு செய்யப்படும்.

முன்னதாக தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து ரூ.10 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும் மெரினா கடற்கரையில் பல்வேறு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளுக்காக புது வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

என்னென்ன வசதிகள்?

குறிப்பாக, மூங்கில் வேலைப்பாடுகள் அமைந்த அழகிய நுழைவு வாயில், மூங்கில் இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள், சாய்வு இருக்கைகள், ஊஞ்சல்கள், ஆங்காங்கிய அழகிய நிழல் குடைகளுடன் கூடிய சாய்வு நாற்காலிகள், மூங்கில் குடில்கள் ஆகியவை அழகியலுடன் அமைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல ஆர்வமுள்ளோர் அமர்ந்து படிக்க படிப்பகங்கள், புகைப்படங்கள் எடுக்கும் வகையில் இதய வடிவில் போட்டோ பாயிண்ட், வெவ்வேறு வடிவிலான காளான் குடைகளுடன் கூடிய இருக்கைகளும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எப்போது திறப்பு?

பெருநகர சென்னை மாநகராட்சி  சார்பில் இந்தப் பணிகள் 4 கட்டமாக நடைபெற உள்ளன. முன்னதாக 2ஆம் கட்ட திறப்பு விழா பிப்ரவரி கடைசியில் நடக்கும் என்று கூறப்பட்டது. எனினும் தற்போது பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இந்த மாதத்தில் திறப்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 அதேபோல சில்வர் பீச் (கடலூர்), காமேஸ்வரம் (நாகை), அரியமான் (ராமநாதபுரம்) மற்றும் சென்னை கடற்கரைகள் (திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி) உள்ளிட்டவை தரம் உயர்த்தப்பட உள்ளன.

 இந்த நீலக்கொடி திட்டம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து, நம் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
SENTHIL BALAJI vs TVK : கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
TNEB Employees Allowance: மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Embed widget