மேலும் அறிய

Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?

Gas Shortage: தட்டுப்பாடு பிரச்னைக்கு மத்தியில் வீட்டு பயன்பாடு உள்ளிட்ட நான்கு பிரிவினருக்கு தான், எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • அமெரிக்க-இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை, இயற்கை எரிவாயு விநியோகத்தை பாதித்துள்ளது.
  • கத்தார் எனர்ஜி உற்பத்தியை நிறுத்தியதால், இந்தியாவுக்கு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • அத்தியாவசியத் தேவைகளுக்கு 100% எரிவாயு விநியோகம் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
  • உர ஆலைகளுக்கு 70%, பிற தொழில்களுக்கு 80% எரிவாயு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Gas Shortage: எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கும் 4 பிரிவுகள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா - இஸ்ரேலால் வந்த வினை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான கூட்டு ராணுவ நடவடிக்கையானது, உலகம் முழுவதற்குமான இயற்கை எரிவாயு விநியோகத்தை பாதித்துள்ளது. ஹார்மூஸ் நீர்வழிப்பாதை போர் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால், 750-க்கும் அதிகமான எரிபொருளை கொண்டுள்ள கப்பல்கள் விநியோகத்தை மேற்கொள்ள முடியாமல் சிக்கி தவிக்கின்றன. இந்தியா உள்நாட்டு தேவைக்கான எரிபொருளை 50 சதவிகிதம் சர்வதேச சந்தையில் இருந்து கொள்முதல் செய்கிறது. அதிலும் 20 சதவிகிதம் கத்தாரில் இருந்தே பெறப்படுகிறது. 

இந்தியாவிற்கான ஏற்றுமதி பாதிப்பு

கத்தாரில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிறுவனமான கத்தார் எனர்ஜி தனது உற்பத்தியை நிறுத்தியது. இதன் காரணமாக ஆசிய பிராந்தியங்களில் இயற்கை எரிவாயு விநியோக சங்கிலியை கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இந்த சவால்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் பல்வேறு பிரிவுகளில் இயற்கை எரிவாயுவின் விநியோகத்திற்கும், பயன்பாட்டிற்குமான ஒழுங்குமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முக்கிய துறைகல் முன்னுரிமை பெறக்கூடிய 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கேஸ் சிலிண்டர் - எந்த 4 பிரிவுகளுக்கு முன்னுரிமை?

  • உள்நாட்டு பைப் இயற்கை எரிவாயு விநியோகம், போக்குவரத்துக்கான CNG, LPG உற்பத்தி, பைப்லைன் கம்ப்ரெஷர் ஃபியூல் மற்றும் பிற அத்தியாவசிய குழாய் செயல்பாட்டுத் தேவைகளுக்கு கடந்த ஆறு மாதங்களின் சராசரி அடிப்படையில் 100 சதவிகித இயற்கை எரிவாயு விநியோகம் தொடரும்
  • இரண்டாவதாக, உர ஆலைகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவது கடந்த ஆறு மாதங்களின் சராசரி எரிவாயு நுகர்வில் 70 சதவிகிதமாக உறுதி செய்யப்படும்.
  • மூன்றாவதாக, தேயிலைத் தொழில்கள், உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை நுகர்வோருக்கு தேசிய எரிவாயு க்ரிட் மூலம் எரிவாயு விநியோகம் கடந்த ஆறு மாதங்களின் சராசரி எரிவாயு நுகர்வில் 80 சதவிகிதம் வழங்கப்படும்
  • நான்காவதாக, அனைத்து எரிவாயு விநியோக அலகுகளும் கடந்த ஆறு மாதங்களின் சராசரி எரிவாயு நுகர்வில் 80 சதவிகிதத்தை,  தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு தங்கள் நெட்வொர்க்குகள் மூலம் வழங்குவதை உறுதி செய்யும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொழில் வல்லுநர்கள் சொல்வது என்ன?

இந்தியா இறக்குமதி செய்யும் எரிவாயுவில் சுமார் 40 சதவிகிதம் எல்என்ஜி குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்டு பேசியுள்ள எரிசக்தி, குறிப்பாக எரிவாயுவில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார நிபுணர் கிரித் பரேக்,  நெருக்கடி காலத்தில் இந்தியா தற்காலிகமாக எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தொழில்துறையில், குறிப்பாக மின்சாரத் துறையில் எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், மின்சாரத்தை உற்பத்தி செய்வது விலை உயர்ந்ததாக இருந்தாலும், இந்தியா மின் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே,  இந்தத் துறை அதிகம் பாதிக்கப்படாது. ஆனால் எரிவாயுவை ஒரு முக்கியமான வளமாகக் கொண்டு தங்கள் தொழில்களை நடத்தும் வணிகங்கள் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். பெட்ரோலிய நிறுவனங்கள் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய அதிகப்படியான எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன” என எச்சரித்துள்ளார்.

Frequently Asked Questions

தற்போதைய எரிவாயு தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை காரணமாக ஹார்மூஸ் நீர்வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு முக்கியமாக எங்கிருந்து வருகிறது?

இந்தியா தனது எரிபொருளில் 50% சர்வதேச சந்தையில் இருந்து கொள்முதல் செய்கிறது. இதில் 20% கத்தார் நாட்டில் இருந்து பெறப்படுகிறது.

எரிவாயு விநியோகத்தில் மத்திய அரசு எந்த 4 பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது?

உள்நாட்டு பைப் விநியோகம், CNG, LPG உற்பத்தி, பைப்லைன் கம்ப்ரெஷர் ஃபியூல், உர ஆலைகள், தேயிலைத் தொழில்கள், உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தொழில்துறையினர் எரிவாயுவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்?

நெருக்கடி காலத்தில் எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். குறிப்பாக மின்சார உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் உற்பத்திக்கு எரிவாயுவை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Embed widget