மேலும் அறிய

சிவாஜி கணேசனுக்கு எந்த அரசும் சரியான மரியாதை செய்யவில்லை: ஆதங்கப்பட்ட பாரதிராஜா

சிவாஜி கணேசன் இந்த நாட்டின் பொதுச்சொத்து என தெரிவித்தார். மேலும் நான் சொல்லும் ‘என் இனிய தமிழ்மக்களே’ என உச்சரிக்க சொல்லிக் கொடுத்தவர்  அவர் தான் என பாரதிராஜா பேசினார்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எந்த அரசும் சரியான மரியாதையை செய்யவில்லை என இயக்குநர் பாரதிராஜா ஆதங்கப்பட்டுள்ளார். 

சென்னை சேத்துப்பட்டில் வளரி ஸ்டூடியோ சார்பில் முனைவர் கா.வே.ச.மருது மோகன் எழுதிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் சிவாஜியின் மகன்களும் நடிகர்களுமான ராம்குமார், பிரபு ஆகியோரும் கலந்து கொண்டனர். 

சிவாஜி இந்த நாட்டின் பொதுச்சொத்து 

இந்நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, சிவாஜி கணேசன் இந்த நாட்டின் பொதுச்சொத்து என தெரிவித்தார். மேலும் நான் சொல்லும் ‘என் இனிய தமிழ்மக்களே’ என உச்சரிக்க சொல்லிக் கொடுத்தவர்  அவர் தான் என்றும், இன்று பாரதிராஜா இயக்குநராக பேசுகிறார் என்றால் அது சிவாஜி போட்ட பிச்சை என நெகிழ்ச்சியாக கூறினார். தமிழை, வசனங்களை ஏற்ற, இறக்கமாக பேச கற்றுக் கொடுத்தவர். உலகத்தின் உள்ள எல்லா தமிழர் வீடுகளிலும் இந்த நூல் இருக்க வேண்டும். 

சிவாஜி வீடு ஒரு பல்கலைக்கழகம். அவர் இந்த நாட்டின் பொதுச்சொத்து. அவருக்கான சரியான மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை. சிவாஜியிடம் அரசியல் வேண்டாம் என சொன்னேன் என்று பாரதிராஜா கூறினார். 

கண் கலங்கிய இளையராஜா 

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, நாங்கள் மரியாதையோடு  வியந்து பார்த்த மனிதர் சிவாஜி என்றும், அவர் ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் வரும்போது உள்ளே வரலாமா என என்னிடம் அனுமதி கேட்டார். அதைப் பார்த்து எனக்கு கண்ணீர் வந்து விட்டது என நினைவுகளைப் பகிர்ந்தார். மேலும் நேரம் தவறாமை சிவாஜியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. நடிகர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் சாப்பிடும் அரிசியில் சிவாஜியின் பெயர் இருக்கிறது எனவும் இளையராஜா தெரிவித்தார்.

சிவாஜிக்கு திரையுலகில் பாராட்டு விழா நடைபெற்ற போது அவருக்குப் பரிசாக கொடுக்கப்பட்ட சிலைக்கு முழு பணத்தையும் நான் தான் அளித்தேன். அதனை தெரிந்துக் கொண்ட சிவாஜி, யாரை மறந்தாலும் இளையராஜாவை மறக்கக் கூடாது என என்னிடம் தெரிவித்தார். அவருக்கான மரியாதையை இந்த சினிமாவோ, அரசோ செய்யவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒருவன் செய்துவிட்டான் என்றால் அது நான் தான் என இளையராஜா கண்கலங்கியபடி கூறினார். 

பாக்யராஜின் புகழாரம் 

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், சிவாஜி படங்களை பார்த்து விட்டு அழுதுள்ளேன். திரையில் அவர் அழ தொடங்குவதற்கு முன் நான் அழுது விடுவேன். ஒருமுறையாவது பார்க்க முடியுமா என நினைத்தவரை தாவணிக்கனவுகள் படத்தில் நடிக்க வைத்தேன். அவரைப் போல பாடல்களுக்கு லிப் மொமன்ட் கொடுக்க முடியாது என புகழாரம் சூட்டினார். 

 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget