![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Amrin: ஒரே படத்தில் தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வாய்த்த அம்ரின்.. யாருங்க இவங்க?
ஸ்டூடியோ கிரீன், பிரின்ஸ் பிக்சர்ஸ், எஸ்விசிசி, சரஸ்வதி ஃபிலிம் டிவிஷன் போன்ற பெரிய தென்னிந்திய தயாரிப்பு நிறுவனங்கள் அம்ரினை அணுகி வரவிருக்கும் பட்ஜெட் படங்களுக்கு ஒப்பந்தம் செய்து உள்ளன.
![Amrin: ஒரே படத்தில் தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வாய்த்த அம்ரின்.. யாருங்க இவங்க? Actress Amrin Elegant Charm A Visual Delight in Recent Photos know more details here Amrin: ஒரே படத்தில் தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வாய்த்த அம்ரின்.. யாருங்க இவங்க?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/abfc2d70c88e563ae88ec3b2a4abcd9d1690605757358729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
'Bad Boy' படத்தில் ஒரு பவர்புள் கதாபாத்திரத்துடன் அறிமுகமான பிறகு, அம்ரின் சவுத் இண்டஸ்டியில் இருந்து 4 பெரிய தயாரிப்பு நிறுவனங்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் 'Bad Boy' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்த அம்ரின் தனது ஆற்றல் நிரம்பிய நடிப்பிற்காக பாராட்டைப் பெற்றார்.
தென்னிந்திய திரையுலகிலும் தடம் பதித்து வரும் அம்ரின்:
இவரது நடிப்புத் திறமையையும், அசத்தலான பெர்பாமன்ஸை அனைவரும் பாராட்டினர். இதனால், பாலிவுட்டில் புதிய அற்புதமான திறமை பிறந்தது என்றும் கூறினர். அவர் சமீபத்தில் மிட்-டே ஐகானிக் ஷோபிஸ் விருதுகளால் (2003) 'முன்னணியில் சிறந்த பெண் நடிகை' விருது பெற்றார். அத்தகைய மதிப்புமிக்க விருதைப் பெற்ற பிறகு சினிமாவில் அறிமுகமான சிறிது நாட்களிலேயே அனைவராலும் பேசப்பட்டார்.
இப்போது, அம்ரினுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மெதுவாகவும், சீராகவும் பாலிவுட்டில் மட்டுமின்றி தென் திரையுலகிலும் தடம் பதித்து வருகிறார். பாலிவுட் மற்றும் தென் திரையுலகம் இரண்டும் அவரது அதீத நடிப்புத் திறமையைக் கவனிக்கின்றன. அதனால்தான் அவர் தென் இந்தியாவை சேர்ந்த நான்கு பெரிய தயாரிப்பு நிறுவனங்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அம்ரினின் அறிமுக படத்தில் அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டு, ஸ்டூடியோ கிரீன், பிரின்ஸ் பிக்சர்ஸ், எஸ்விசிசி மற்றும் சரஸ்வதி ஃபிலிம் டிவிஷன் (தாகூர் மது) போன்ற பெரிய தென்னிந்திய தயாரிப்பு நிறுவனங்கள் அம்ரினை அணுகி தங்கள் வரவிருக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒப்பந்தம் செய்து உள்ளன.
பெரிய நட்சத்திரங்களை வைத்து முக்கியமான படங்களை தயாரித்து வரும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தற்போது சூர்யா 42 என்ற பெரிய படத்தை தயாரித்து வருகிறது, இதில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சமீபத்தில் 'சர்தார்' என்ற பிளாக்பஸ்டர் படத்தை வழங்கியது மற்றும் தயாரிப்பாளர் லக்ஷ்மண் தனது பேனரில் தற்போது 'சர்தார் 2' படத்தை தொடங்க பிஸியாக இருக்கிறார்.
பாபி மற்றும் பிரசாத் ஆகியோரின் பேனரான SVCC இன் கீழ் பல பெரிய மற்றும் வெற்றிகரமான படங்களையும் தயாரித்துள்ளனர். தாகூர் மது தனது பெயரில் பல பேனர்களை வைத்துள்ளார், மேலும் அவரது சரஸ்வதி திரைப்பட பிரிவு அம்ரினை அவரது திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
மனம் திறந்த அம்ரின்:
பெரிய தென்னிந்திய தயாரிப்பு நிறுவனங்களில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அம்ரின் கூறியுள்ளார். "சவுத் இண்டஸ்ட்ரியில் இருந்து மிகப்பெரிய படங்களை தயாரிக்கும் பெரிய பேனர்கள் என்னை அணுகி கையெழுத்திட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மொழியிலும் எந்தத் துறையிலும் பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.
என் ஒரே அளவுகோல் என்னவென்றால், எனக்கு நல்ல, கணிசமான கதாபாத்திரம் மூலம் எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த வேண்டும். இந்த படங்களில் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் அங்கு பணியாற்றுவது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவற்றில் சில படங்கள் இந்திய அளவில் வெளியிடப்படும்" என்று கூறினார்.
பாலிவுட்டில் தனது அடுத்த படங்களை பற்றி கேட்டபோது, அம்ரின் கிண்டலாக, "நான் இங்கு நல்ல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் பேசி வருகிறேன். விஷயங்கள் நிறைவேறியவுடன், தயாரிப்பாளர்களால் சரியான நேரத்தில் படங்கள் அறிவிக்கப்படும். இப்போதே, எச்செலான் புரொடக்ஷன்ஸின் விஷால் ராணாவுடன் மட்டுமே இந்தி திட்டத்தை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்று கூறினார்.
முதல் படத்தில் நடித்து முடித்ததோடு காத்திருக்கும் அம்ரின், இவ்வளவு குறுகிய காலத்திற்குள், தயாரிப்பாளர்கள் தன் மீது அதிக நம்பிக்கையை காட்டத் தொடங்கியதற்கு நன்றியுடன் இருப்பதாக கூறுகிறார். அவர் கூறுகையில், "எனது அறிமுக நடிப்பை பாராட்டிய மற்றும் என்னை நம்பிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களை ஒருபோதும் நான் வருந்த விடமாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)