மேலும் அறிய

Sivakarthikeyan: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ .. அப்பா பிறந்தநாளில் உருக்கமான பதிவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!

மறைந்த தனது அப்பா பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மறைந்த தனது அப்பா பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சின்னத்திரையில் மிமிக்ரி, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும்  தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். 

தற்போது மாவீரன்,அயலான் ஆகிய படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், பாடகர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயன் 2010 ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தியை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஆராதனா, குகன் தாஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் தாஸ் என்பது சிவகார்த்திகேயனின் அப்பா பெயராகும். இவர் காவல்துறையில் பணியாற்றிய நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் காலமானார். அதனால் தன் அப்பா நினைவாக மகனுக்கு பெயர் சூட்டியிருந்தார். 

இதுதொடர்பான பதிவு ஒன்றில், ‘18 வருடங்களுக்குப் பிறகு என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். அதோடு மகன் நெற்றியில் அன்பு முத்தமிடும் புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து தனது மகன், மகள் குறித்த அப்டேட்டுகளை அவ்வப்போது தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் சிவா வெளியிட்டு வருகிறார்.

இப்படியான நிலையில், சிவகார்த்திகேயன் அப்பாவுக்கு இன்று 70வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு அவர் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்றைக்கு நான் என்ன செய்தாலும் அதற்கு காரணம் நீங்கள் தான் அப்பா.  நீங்கள் எனக்குக் கற்றுத்தந்தவை மற்றும் நமக்கு என்ன கிடைத்தாலும் மற்றவர்களுக்கு எப்படி ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைக் காட்ட நீங்கள் வாழ்ந்த விதம் என நினைக்கையில் உங்கள் மகனாக பெருமையாக உள்ளது. நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget