திருமணம் வரை சென்று ஏமாற்றிய நடிகர்: தற்கொலைக்கு முயன்ற நடிகை ஸ்ரீபிரியா.. பிரபலம் கூறிய ஷாக் தகவல்!
நடிகர் ஒருவர் ஸ்ரீபிரியாவை காதலித்து ஏமாற்றியதால் அவர் தற்கொலை செய்ய முயற்சித்ததாக பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஓபனாக கூறியுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. இயக்குநர் பி மாதவன் இயக்கத்தில் உருவான 'முருகன் காட்டிய வழி' என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 'அவள் ஒரு தொடர் கதை', 'உன்னைதான் தம்பி', 'பணத்துக்காக', 'பட்டிக்காட்டு ராஜா' என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 350க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதில் 200 படங்களில் தமிழ் மொழியில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அவள் அப்படித்தான், ஆட்டுக்கார அலமேலு, அன்னை ஒரு ஆலயம், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீன் அற்புத விளக்கு, நட்சத்திரம் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வந்த ஹிட் அடித்த படங்களாகும்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை லதாவின் சகோதரர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஸ்ரீபிரியா பற்றி பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகை ஸ்ரீபிரியாவின் உண்மையான பெயர் அலமேலு. இவர் இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். பிக் பாஸ் புகழ் நடிகர் சிவக்குமாரின் அம்மாவும், ஸ்ரீபிரியாவின் அக்காவுமான மீனாட்சி நடிப்பதற்கு போட்டோ எடுக்கிறார். அவர் மட்டுமின்றி அவருடன் நடிகை ஸ்ரீபிரியாவும் போட்டோ எடுக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட போட்டோவை தயாரிப்பாளர்கள் பார்த்து ஸ்ரீபிரியாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று தான் மாணிக்க தட்டில். இந்தப் படத்தில் 5 நடிகைகளில் ஒருவராக நடித்தார். அதன் பிறகு தான் நடிகர் சிவக்குமார் நடித்த ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்தார். இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிந்தது. ஆட்டுக்கார அலமேலு படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு சிவக்குமார் மற்றும் ஸ்ரீபிரியா இருவரும் இணைந்து 12 படங்களில் நடித்தார்கள். ஒரு கட்டத்தில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து நினைவுகள் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் மூலமாக இருவருக்கும் இடையில் காதல் வர இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள். ஸ்ரீபிரியா நடிகர் கார்த்திக்கை விட 4 வயது மூத்தவர். திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு வந்த பிறகு திடீரென்று கார்த்திக் நடிகை ராகினியை மணந்து கொண்டார்.
இது குறித்து கேள்விப்பட்ட ஸ்ரீபிரியா கார்த்திக் நடித்துக் கொண்டிருந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிங்கிற்கு கோபத்துடன் வந்து அவரை சரமாரியாக அடித்தாராம். அதோடு நிற்காமல் அங்கிருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப்போட்டு உடைத்தார். மேலும், உருகி உருகி காதலித்த நிலையில் மன வேதனை அடைந்த ஸ்ரீபிரியா தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். அப்போது தான் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவர்கள் அவரை எப்படியோ காப்பாற்றி விட்டனர். அதிலிருந்து மீண்டு வந்த ஸ்ரீபிரியா மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார். ரொம்பவே தைரியமான நடிகை என திரையுலகில் பெயர் எடுத்தவர் ஸ்ரீப்ரியா.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

