மேலும் அறிய

Crime: கொடூரம்! விழுப்புரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை - நடந்தது என்ன?

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் இளம்பெண் எரித்துக்கொலை...போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் எரித்துக்கொலை

விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் பகுதியில் ஓடும் மலட்டாற்றின் கரையில் நேற்று மாலை பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் கரிக்கட்டையாகி கிடந்தார். இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, அப்பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அப்பெண்ணை யாரோ எரித்துக்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

யார் அந்த பெண்?

மேலும் கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து காவணிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதோடு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து  விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மலட்டாற்றில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த அப்பெண், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை அடுத்த கரும்பூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி மனைவி வசந்தி (வயது 31) என்பது தெரிந்தது. இதை குப்புசாமி உறுதி செய்து போலீசாரிடம் கூறினார்.

போலீசார் விசாரணை

கொலை செய்யப்பட்ட வசந்திக்கு சொந்த ஊர் விழுப்புரம் அருகே வி.அரியலூர் கிராமமாகும். இவருக்கும் கரும்பூரை சேர்ந்த குப்புசாமிக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குப்புசாமி, மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருவதும், வசந்தி விழுப்புரத்தில் உள்ள ஒரு துணிக்கடை உரிமையாளர் வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்ததும், தினமும் காலையில் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையிலேயே வீட்டிற்கு வருவது வழக்கம்.

கடந்த 4-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கரும்பூரில் இருந்து புறப்பட்ட வசந்தி அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை குப்புசாமி பலமுறை தொடர்பு கொண்டபோதிலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் வசந்தியை தேடிப்பார்த்தும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அதுபற்றி குப்புசாமி, மறுநாள் (5-ந் தேதி) புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் அங்குள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வசந்தியை தேடி வந்த நிலையில் நேற்று விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் மலட்டாற்று பகுதியில் உடல் எரிந்த நிலையில் வசந்தி பிணமாக கிடந்துள்ளார்.

காரணம் என்ன?

மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் வசந்தி எதற்காக காவணிப்பாக்கம் பகுதிக்கு வந்தார், அவரை கொலை செய்தவர்கள் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விழுப்புரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே மலட்டாற்றில் பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget