மேலும் அறிய

கணவருடன் இணைந்து கள்ளக்காதலனை அடித்து கொன்ற கள்ளக்காதலி - திகிலூட்டும் பின்னணி

கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலி தனது கணவருடன் இணைந்து கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து விட்டு சாலையில் வீசி சென்றனர்.

விழுப்புரம் : கிளியனுார் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலி தனது கணவருடன் இணைந்து கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து விட்டு சாலையில் வீசி சென்ற குற்றவாளிகளை கிளியனூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சாலையோரம், சாக்கால் முகத்தை மூடி கட்டிய நிலையில் பிணம்

விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சஞ்சீவி மகன் ருத்ரகுமார் (40) கொத்தனார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற ருத்ரகுமார், இரவு 10:00 மணியளவில், அவரது மொபைல் போனில் நண்பர் அழைப்பதாக மனைவியிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு முழுதும் தேடினர்.

நேற்று அதிகாலை 4:00 மணியளவில், புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில் கேணிப்பட்டு - கீழ்கூத்தப்பாக்கம் இடைப்பட்ட பகுதியில் சாலையோரம், சாக்கால் முகத்தை மூடி கட்டிய நிலையில் கழுத்தில் காயங்களுடன் ருத்ரகுமார் உடல் கிடந்தது. அதன் அருகே அவரது பைக் இருந்தது. தகவல் அறிந்த எஸ்.பி., தீபக் சிவாச், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில், கிளியனுார் காவல் ஆய்வாளர் பாலமுரளி மற்றும் போலீசார், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல் விவகாரம்

போலீசார் விசாரணையில்... தனஞ்செயன் மனைவி சரஸ்வதி ருத்ரகுமாருடன் கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது ருத்ரகுமாருக்கும் தனஞ்செயன் மனைவி சரஸ்வதிக்கும் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் சரஸ்வதியின் கணவர் தனஞ்செயனுக்கு தெரிய வரவே இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இவர்கள் கள்ளக்காதலை விடாமல் உல்லாச வாழ்க்கையில் இருந்துள்ளனர். இதனைக் கண்டு கோபமடைந்த தனஞ்செயன் சரஸ்வதி இடம் செல்போனை கொடுத்து வீட்டில் யாரும் இல்லை என கூறி ருத்ரகுமாரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

கொத்தனார் ருத்ரகுமார் சரஸ்வதியின் வீட்டுக்குள் வந்ததும், பீரோவுக்கு பின்னால் மறைந்திருந்த தனஞ்செயன் மற்றும் கண்ணன் பூங்கொடி ஆகிய மூன்று பேரும் மறைந்து இருந்து ருத்ரகுமாரை தாக்கினர். தடுமாறி விழுந்த ருத்ரகுமாரை தலையணையால் முகத்தில் அழுத்தி சாகடித்துள்ளனர். ருத்ரகுமாரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அதில் ருத்ரகுமாரை அமர வைத்து புதுச்சேரி- திண்டிவனம் பைபாஸ் தேனிப்பட்டு - கீழ் கூத்தப்பாக்கம் இடைப்பட்ட பகுதியில் சாலை விபத்தில் இறந்தது போல் வைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

இச்சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் போலீசார் நான்குபேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Maya Tata: ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
Simi Garewal - Tata :
Simi Garewal : "இந்த இழப்பு தாங்கிக்கொள்ள முடியாதது" : ரத்தன் டாடாவின் முன்னாள் காதலி உருக்கம்
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ratan Tata Untold love story  | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!Ratan Tata Passed away | RIP ரத்தன் டாடாஉடலுக்கு இறுதி அஞ்சலி! கண்ணீர் மழையில் மக்கள்History of Ratan Rata | Mukesh Ambani on Ratan Tata | ”உயிர் நண்பனை இழந்துட்டேன்” என்னால் தாங்க முடியவில்லை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maya Tata: ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
Simi Garewal - Tata :
Simi Garewal : "இந்த இழப்பு தாங்கிக்கொள்ள முடியாதது" : ரத்தன் டாடாவின் முன்னாள் காதலி உருக்கம்
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
TNPSC 2025 Annual Planner: டிஎன்பிஎஸ்சி 2025 குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
TNPSC 2025 Annual Planner: டிஎன்பிஎஸ்சி 2025 குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
"எங்களை வாழ வைத்தார் விஜய்" - தவெக மாநாடு திடலில் நடந்த சுவாரஸ்யம்
TN Entrepreneur : தொழில்முனைவோராக மாற ஆசையா? ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேரலாம்: அரசு அழைப்பு
TN Entrepreneur : தொழில்முனைவோராக மாற ஆசையா? ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேரலாம்: அரசு அழைப்பு
’நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகதான்; ரத்துசெய்ய எதுவுமே செய்யவில்லை’- ஈபிஎஸ் தாக்கு
’நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகதான்; ரத்துசெய்ய எதுவுமே செய்யவில்லை’- ஈபிஎஸ் தாக்கு
Embed widget