மேலும் அறிய

PM Modi: டேமேஜ் ஆன இமேஜ், RSS-ற்கு பணிந்த மோடி? மும்முனை தாக்குதல், பலனளிக்குமா பாஜகவின் ப்ளான்?

PM Modi BJP RSS: பிரதமர் மோடி தனது தலைமைத்துவ பிம்பத்தை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் நோக்கிலேயே, ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

PM Modi BJP RSS: சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பை பிரதமர் மோடி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேமேஜ் ஆன மோடி இமேஜ்?

தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி ஆட்சி அமைத்தது முதலே, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே கடும் அதிகாரப்போட்டி நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கான முக்கியத்துவத்தை குறைத்து, தனிநபரை காட்டிலும் கட்சியையே வலுவாக முன்னிலைப்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் நெருக்கடி கொடுத்த வருகிறதாம். இதனிடையே, இந்தியா மட்டுமின்றி சர்வதேச அரங்குகளிலும் நடந்த நிகழ்வுகள், மோடியின் தலைமைத்துவ பிம்பத்தை பாதித்துள்ளதாக பாஜக தலைமை நம்புகிறதாம். இதனால் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பை சமதானப்படுத்துவதோடு, மக்களின் நம்பிக்கையும் பெறும் நோக்கில் பிரதமர் மோடியின் சுதந்திர தின பேச்சு அமைந்துள்ளதாம்.

மும்முனை தாக்குதல்:

  • ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழுத்தம் காரணமாக பாஜகவிற்கான புதிய தலைவரை கூட சுயமாக நியமிக்க முடியாத சூழலில் மோடி - அமித் ஷா கூட்டணி உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோக அரசியல் அற்றும் ஆட்சி அதிகாரமிக்க பதவிகளில் மோடியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, கட்சியை முன்னிலைப்படுத்துபவர்களை நிர்ணயிக்க ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறதாம்.
  • இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது நானே என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் பேசி வருவது மோடி அரசுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதுபோக இந்திய பொருட்கள் மீதான 50 சதவிகித வரி விதிப்பும், நாட்டின் வெளியுறுவுக்கொள்கை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது
  • `பாஜகவின் வாக்கு திருட்டுக்கு தேர்தல் ஆணையம் துணைபோயுள்ளதாக, பல ஆதாரங்களை குறிப்பிட்டு ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுபோக, பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியலில், 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பணிந்தாரா மோடி?

இந்நிலையில் தான் சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்தவொரு பிரதமரும் செய்யாததை பிரதமர் மோடி செய்துள்ளார். நேற்றைய சுதந்திர தின உரையின்போது, “ 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அமைப்பு பிறந்தது என்பதை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் தேச கட்டுமானத்திற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன் அத்தியாயம். ஸ்வயம்சேவகர்களே நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஒரு வகையில், RSS உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம். இது 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.  நாட்டிற்கான பங்களிப்பு செய்துள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பை சுதந்திர தின உரையில், இந்திய பிரதமர் ஒருவர் குறிப்பிடுவது இதுவே முதல்முறையாகும். கடந்த 11 ஆண்டுகளில் மோடி கூட ஆர்எஸ்எஸ் பெயரை குறிப்பிடாத நிலையில், இந்த முறை சொல்லி இருப்பது அழுத்தத்தின் பேரிலேயே என கூறப்படுகிறது.

பலனளிக்குமா பாஜகவின் பிளான்?

வாக்கு திருட்டு மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் மீதான குற்றச்சாட்டுகளால் ஏற்பட்டுள்ள, அதிருப்தியை ஈடு செய்யவே ஜிஎஸ்டி திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளதாம். இதன் மூலம், தற்போதுள்ள 4 வரி அடுக்குகள் இரண்டாக குறைக்கப்படும் என்றும், இனி அதிகபட்ச வரியாக 18 சதவிகிதமே நிர்ணயிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விலைவாசியை குறைத்து பொதுமக்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. இதன் மூலம், மக்களுக்கான தலைவர் என்ற மோடியின் பிம்பத்தை மேலும் வலுவாக பாஜக விரும்புகிறதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
கோப்புகளை முடக்க அதிகாரிகளுக்கு யார் உரிமை தந்தது? – புதுச்சேரி அதிகாரிகளுக்கு கவர்னர் வார்னிங்!
கோப்புகளை முடக்க அதிகாரிகளுக்கு யார் உரிமை தந்தது? – புதுச்சேரி அதிகாரிகளுக்கு கவர்னர் வார்னிங்!
அனுமதி இல்லை.. நள்ளிரவில் சுழன்ற கிரேன்! திருமாவளவன் வருகையின் போது அம்பேத்கர் சிலை அகற்றம்...!
அனுமதி இல்லை.. நள்ளிரவில் சுழன்ற கிரேன்! திருமாவளவன் திறக்கவிருந்த அம்பேத்கர் சிலை கிரேன் மூலம் அகற்றம்!
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Embed widget