![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: திருவண்ணாமலையில் மதுபோதையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் மதுபோதையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: திருவண்ணாமலையில் மதுபோதையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு Tiruvannamalai Crime news 2 youths who went fishing in the lake while drunk drowned TNN Crime: திருவண்ணாமலையில் மதுபோதையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/03beaf33fc3af78a3fa9e9717154d96f1687520633253113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை வயது (40). இவருடைய மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். சுப்பிரமணி வயது (40) இவருடைய மனைவியும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஏழுமலை சுப்பிரமணி ஆகிய இருவரும் நண்பர்கள், இரண்டு தினங்களுக்கு முன்பு இருவரும் வெளியே சென்று மது அருந்திவிட்டு மதுபோதையில் மீன்பிடிப்பதற்காக கொட்டையூர் கிராமம் அருகே உள்ள ஏரிக்குச் சென்றுள்ளனர். அப்போது ஏரிக்கரை ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, இவர்களுடைய லுங்கி, சட்டை, காலணி உள்ளிட்டவற்றை மட்டும் அங்கேயே கழட்டி வைத்துவிட்டு செல்போனையும் இருசக்கர வாகனத்தின் மேல் வைத்துவிட்டு இருவரும் மீன் பிடிக்க ஏரிக்குள் இறங்கி சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து காலை வரை மீன் பிடிக்க சென்ற இருவரும் வீட்டிற்கு வரவில்லை. இருவருடைய துணிகள் மட்டும் இருந்துள்ளது. உடனடியாக ஊர் பொதுமக்கள் ஏரிக்குள் இறங்கி தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை, உடனடியாக அப்பகுதி மக்கள், காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும், காவல் துறையினரும் ஏரியில் மீன் பிடிக்க சென்று வீடு திரும்பாத ஏழுமலை மற்றும் சுப்பிரமணி ஆகியோரை பரிசல் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் தேடியும் இருவரின் உடலும் கிடைக்காததால் தேடுதல் பணியை நிறுத்தி விட்டுத் திரும்பி சென்றனர். இந்நிலையில், இருவரின் உடலும் ஏரியில் மிதப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். அதன் பிறகு காவல் துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் இருவரின் உடலையும் மீட்டு, காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொட்டையூர் கிராமத்தில் வசித்து வந்த ஏழுமலை சுப்பிரமணி ஆகிய இருவரும் தினந்தோறும் ஏரியில் மீன் பிடித்து, அவற்றை விற்பனை செய்துவிட்டு. பின் மாலை வேளையில் இருவரும் மது அருந்திவிட்டு, மீண்டும் இரவு நேரத்தில் ஏரிக்கு சென்று மீன் பிடித்து வருவதை வழக்கமாக தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மது போதையில், இரவு 11 மணியளவில் இருவரும் மீன்பிடிப்பதற்காக ஏரிக்கு சென்று வீடு திரும்பி வராத இருவரின் சடலமும் ஏரியில் இறந்த நிலையில் மிதந்துள்ளது. மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)