மேலும் அறிய

Crime: கர்ப்பிணி மகள் வயிற்றில் கட்டையால் அடித்த தந்தை - பதைபதைக்க வைத்த கொடூரம்

கர்ப்பிணியாக இருக்கும் தனது சொந்த மகளின் வயிற்றில் அடியாட்களை கூட்டி வந்து மகளின் வயிற்றில் விறகு கட்டையால் தந்தை அடித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள போத்தனூரில் சேட்டு என்பவர் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டாக உள்ளார். இவரது மகள் மேஷா. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை தங்களது பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். அப்போது ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மேஷாவும், மூர்த்தியும் தஞ்சம் அடைந்தனர். இதை அடுத்து மகளிர் காவல் நிலையத்தில் மேஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாததை அடுத்து நாங்கள் எந்த விதமான பிரச்சனைகளையும் செய்ய மாட்டோம் என்று எழுதிக் கொடுத்தார்கள்.

Crime: கர்ப்பிணி மகள் வயிற்றில் கட்டையால் அடித்த தந்தை - பதைபதைக்க வைத்த கொடூரம்

தற்போது மேஷா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சேட்டு மாருதி வேனில் அடியாட்களுடன் மேஷாவின் வீட்டிற்கு வந்து கர்ப்பிணி மகளின் வயிற்றில் விறகு கட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த மேஷா வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டார். கடப்பாரை கம்பியால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால் அவர்கள் மாருதி வேனில் ஏறி தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து தாரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வலியால் துடித்த மேஷா உடனடியாக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேஷா ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார்.

Crime: கர்ப்பிணி மகள் வயிற்றில் கட்டையால் அடித்த தந்தை - பதைபதைக்க வைத்த கொடூரம்

இதுகுறித்து மேஷா கூறும் போது, "என் அப்பா சேட்டு அடியாட்களுடன் திடீரென்று வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த விறகு கட்டையால் எனது வயிற்றில் அடித்தார். அவர்கள் வந்தவர்களிடம் கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது. நான் உடனே வலியை தாங்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டேன். அப்போதும் கதவை கடப்பாரையால் உடைத்துக் கொண்டு உள்ளே வந்து, வீட்டிற்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். வீட்டில் இருந்த எனது அத்தை, மாமா எனது கணவரின் அண்ணனின் மூன்று வயது குழந்தையையும் தாக்கினார்கள். சத்தம் கேட்டு அங்கே வந்த ஊர் மக்களின் கூட்டம் அதிகமானதால் அங்கிருந்து அவர்கள் தப்பித்து சென்று விட்டார்கள். எனது அப்பாவின் நோக்கம் என்னை கொலை செய்ய வேண்டும் என்பதுதான். திருமணத்திற்கு பிறகு நான் குழந்தைக்கு தாயான தகவல் அவருக்கு கிடைத்தவுடன் என் மீது அவருக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும், என் மீது தாக்குதல் நடத்திய எனது தந்தை மற்றும் அவரிடம் வந்த அடியாட்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகள் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றின் மேல் பெற்ற தந்தையே தாக்குதல் நடத்தியதும், தந்தையின் மீது மகள் புகார் தெரிவித்ததும் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?
கொளுத்திப் போட்ட டிரம்ப்
”சென்னைக்கு வாங்க வருண்”ஸ்டாலின் போடும் MASTERPLAN! டார்கெட் தவெக விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
Embed widget