மேலும் அறிய

Crime: கர்ப்பிணி மகள் வயிற்றில் கட்டையால் அடித்த தந்தை - பதைபதைக்க வைத்த கொடூரம்

கர்ப்பிணியாக இருக்கும் தனது சொந்த மகளின் வயிற்றில் அடியாட்களை கூட்டி வந்து மகளின் வயிற்றில் விறகு கட்டையால் தந்தை அடித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள போத்தனூரில் சேட்டு என்பவர் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டாக உள்ளார். இவரது மகள் மேஷா. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை தங்களது பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். அப்போது ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மேஷாவும், மூர்த்தியும் தஞ்சம் அடைந்தனர். இதை அடுத்து மகளிர் காவல் நிலையத்தில் மேஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாததை அடுத்து நாங்கள் எந்த விதமான பிரச்சனைகளையும் செய்ய மாட்டோம் என்று எழுதிக் கொடுத்தார்கள்.

Crime: கர்ப்பிணி மகள் வயிற்றில் கட்டையால் அடித்த தந்தை - பதைபதைக்க வைத்த கொடூரம்

தற்போது மேஷா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சேட்டு மாருதி வேனில் அடியாட்களுடன் மேஷாவின் வீட்டிற்கு வந்து கர்ப்பிணி மகளின் வயிற்றில் விறகு கட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த மேஷா வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டார். கடப்பாரை கம்பியால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால் அவர்கள் மாருதி வேனில் ஏறி தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து தாரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வலியால் துடித்த மேஷா உடனடியாக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேஷா ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார்.

Crime: கர்ப்பிணி மகள் வயிற்றில் கட்டையால் அடித்த தந்தை - பதைபதைக்க வைத்த கொடூரம்

இதுகுறித்து மேஷா கூறும் போது, "என் அப்பா சேட்டு அடியாட்களுடன் திடீரென்று வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த விறகு கட்டையால் எனது வயிற்றில் அடித்தார். அவர்கள் வந்தவர்களிடம் கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது. நான் உடனே வலியை தாங்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டேன். அப்போதும் கதவை கடப்பாரையால் உடைத்துக் கொண்டு உள்ளே வந்து, வீட்டிற்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். வீட்டில் இருந்த எனது அத்தை, மாமா எனது கணவரின் அண்ணனின் மூன்று வயது குழந்தையையும் தாக்கினார்கள். சத்தம் கேட்டு அங்கே வந்த ஊர் மக்களின் கூட்டம் அதிகமானதால் அங்கிருந்து அவர்கள் தப்பித்து சென்று விட்டார்கள். எனது அப்பாவின் நோக்கம் என்னை கொலை செய்ய வேண்டும் என்பதுதான். திருமணத்திற்கு பிறகு நான் குழந்தைக்கு தாயான தகவல் அவருக்கு கிடைத்தவுடன் என் மீது அவருக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும், என் மீது தாக்குதல் நடத்திய எனது தந்தை மற்றும் அவரிடம் வந்த அடியாட்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகள் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றின் மேல் பெற்ற தந்தையே தாக்குதல் நடத்தியதும், தந்தையின் மீது மகள் புகார் தெரிவித்ததும் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget