மேலும் அறிய

நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே மோதல் - காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

26 மீனவ கிராமம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவர் கிராமங்கள் உள்ளன. தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் மாவட்ட மீனவர்கள் விசைபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பைபர் படகு மீனவர்கள் மட்டுமே ஆழ்கடலுக்கு செல்லாமல் கரையோரங்களில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கின்றனர்.

ATVM Machine: ரயில் டிக்கெட் எடுக்க ATVM: வரிசையில் நிற்க தேவையில்லை; எப்படி டிக்கெட் பெறுவது தெரியுமா?


நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே மோதல் - காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

மீனவர்களுக்கு இடையே மோதல் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர் கிராமம் ரவீந்திரநாத் தாகூர் தெருவை சேர்ந்த பன்னீர் என்பவரின் 42 வயதான மகன் சண்முகவேல் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சண்முகவேல் அவரது தம்பி சதீஷ்குமார் உள்ளிட்ட 9 மீனவர்கள் நேற்று காலை 8 மணிக்கு தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். காலை 10:30 மணிக்கு புதுப்பேட்டை மீனவ கிராமத்திற்கு கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க கடலில் வலையை இறக்கியுள்ளனர். அப்போது அங்கு 3 பைபர் படகுகளில் வந்த பூம்புகார் மீனவர்கள், நாங்கள் பார்த்த மீனை நீங்கள் எப்படி பிடிக்கலாம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கி, அவர்களின் படகால் தரங்கம்பாடி மீனவரின் படகின் மீது மோதி படகையும், வலைகளை சேதப்படுத்தியதாக கூறுகின்றனர்.

Kalki 2898AD: அந்த ஹாலிவுட் படத்தோடு ஒப்பிடாதீங்க... கமல் - பிரபாஸ் இணையும் கல்கி பட இயக்குநர் காட்டம்!


நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே மோதல் - காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

காயமடைந்த மீனவர்கள் 

இதில் தரங்கம்பாடியை சேர்ந்த பன்னீர் மகன் 31 வயதான சதீஷ்குமார், செல்லதுரை என்பவரின் 24 வயதான மகன் நித்திஷ் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மீனவர்களை வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 

Cinema Headlines: குட் பேட் அக்லி அப்டேட்: பிரதமர் மோடியைக் கலாய்த்த தியாகராஜா குமாரராஜா: சினிமா ரவுண்ட்-அப்!


நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே மோதல் - காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள் 

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  தரங்கம்பாடி மீனவர்கள் கூறுகையில், “சுருக்குமடி வலையால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் தாக்குதல் நடத்திய மீனவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும்.  இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருதரப்பு மோதலில் காயம் அடைந்த பூம்புகார் மீனவர்களும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இரு கிராம மீனவர்களிடையேயான தகராறு குறித்து தரங்கம்பாடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோதல் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த மீனவர்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா எம். முருகன் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோன்று மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

செல்போன் தொலைந்துவிட்டதா? பதற்றப்படாதீங்க... 260 செல்போன்களை மீட்ட புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்!
செல்போன் தொலைந்துவிட்டதா? பதற்றப்படாதீங்க... 260 செல்போன்களை மீட்ட புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்!
“ஃப்ரீ ஃபயர் விளையாட செல்போன் வேணும்” - சேலத்தில் நடந்த கொடூர கொலை... பின்னணி என்ன?
“ஃப்ரீ ஃபயர் விளையாட செல்போன் வேணும்” - சேலத்தில் நடந்த கொடூர கொலை... பின்னணி என்ன?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
ஒரு மாத காத்திருப்பு... கண்ணீர் மல்கிய கிராமங்கள்: சவுதியில் பலியான சீர்காழி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தடைந்தன!
ஒரு மாத காத்திருப்பு... கண்ணீர் மல்கிய கிராமங்கள்: சவுதியில் பலியான சீர்காழி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தடைந்தன!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Trump Vs Iran: ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
Karuppu Muruganandam : ’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
TN Weather Update: Weekend-ல் வெளுக்கப் போகும் மழை.! எங்கெங்க தெரியுமா.? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Weekend-ல் வெளுக்கப் போகும் மழை.! எங்கெங்க தெரியுமா.? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget