மேலும் அறிய

விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டுவது குறித்து அடுத்த தலைமுறையினருக்கும் கற்றுத்தாருங்கள் - தஞ்சை எம்பி வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் வாழை தென்னை மதிப்பு கூட்டு தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.

தஞ்சாவூர்: விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதை அடுத்த தலைமுறையினருக்கும் விவசாயிகள் கற்றுத் தர வேண்டும் என்று தஞ்சாவூர் எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வலியுறுத்தினார். 

தஞ்சாவூரில் தேசிய உணவுத் தொழில் நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில், வாழை மற்றும் தென்னை பயிர்களின் மதிப்பு கூட்டல் சார்ந்த வேளாண் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

நிறுவன இயக்குநர் பழனிமுத்து வரவேற்றார். மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். கருத்தரங்கத்தை தஞ்சாவூர் எம்.பி., எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தொடக்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவில் 40 சதவீத உணவுப் பொருட்கள் அழுகி வீணாகி வந்தது. அதனால் அந்த பொருட்களை சேமித்து, பதப்படுத்தி, மதிப்பு கூட்ட இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் வாயிலாக இப்பகுதி விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டால் விவசாய, விளைப்பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதை விட மதிப்பு கூட்டி விற்பனை செய்து கூடுதல் லாபம் கிடைக்கும். மதிப்பு கூட்டி விற்பனை செய்வதை விவசாயிகள், தங்களுடைய அடுத்த தலைமுறையினருக்கு கற்றுத் தர வேண்டும்.


விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டுவது குறித்து அடுத்த தலைமுறையினருக்கும் கற்றுத்தாருங்கள் -  தஞ்சை எம்பி வலியுறுத்தல்

இந்த தொழில்நுட்பத்தை மேற்கொள்ள வங்கிகள் கடனுதவியை வழங்கி வருகிறது. இதுகுறித்து இளைஞர்களிடம் அதிகளவில் விழிப்புணர்வை இதுபோன்ற நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

கருத்தரங்கில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, தஞ்சாவூர் டிகேஜி.நீலமேகம், பேராவூரணி நா.அசோக்குமார், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் வாழை மற்றும் தென்னை பயிர்களின் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் அருண்குமார், பேராசிரியர்கள் ரவீந்தரநாயக், சுரேஷ்குமார், அமுதசுரபி, தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர்.

தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன் நன்றி கூறினார். கருத்தரங்கத்தில் 100க்கும் மேற்பட்ட வாழை மற்றும் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் தென்னை மரத்திலிருந்து தேங்காய் இளநீர் மட்டும் இல்லாமல் தேங்காய் எண்ணெய், தேங்காய் பூ, தேங்காய் பவுடர், பிஸ்கட்,  நீரா உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நேரத்தில் அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக அளவு லாபம் அடைய முடியும். இதற்கான தொழில் நுட்பம் மற்றும் மானியம் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுவதாகவும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தஞ்சாவூர் கும்பகோணம் திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழைப்பழம், வாழை இலை மட்டும் இல்லாமல் வாழை மரத்தில் இருந்து நாரினால் செய்யக்கூடிய பல்வேறு பரிசு பொருட்கள் மற்றும் நார் சம்பந்தமான பொருட்கள் உள்ளிட்டவையும் வாழைப்பழத்தில் இருந்து ஊறுகாய், பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.

இதனை எப்படி செய்ய வேண்டும். அதற்கான பயிற்சிகள், பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது, தொழில்நுட்பம், மானியம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட வாழை, தென்னை விவசாயிகள் ஆண்டில் பல மாதம் போதிய அளவுக்கு விற்பனை செய்ய முடியாமலும் உரிய விலை கிடைக்காமலும் உள்ள நேரத்தில் இது போன்ற பயிற்சிகள் அளிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் வாழை தென்னை மதிப்பு கூட்டு தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget