மேலும் அறிய

திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கிரைம் செய்திகளை பற்றிய விவரங்களை கீழே தெரிந்துக்கொள்ளலாம்.

மொபைலில் வீடியோ எடுத்த இளைஞர்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் சரகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த 2 - ம் தேதி காலை , வீட்டு குளியல் அறையில் சிறுமி குளித்து கொண்டிருந்ததை தரை தளத்தில் வசிக்கும் கங்காதரன் ( வயது 27 ) என்பவர் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். பெற்றோர் புகாரின் படி விசாரித்த கொரட்டூர் போலீசார் கங்காதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதையில் தந்தையை வெட்டிய மகன் 

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் ( வயது 52 ) விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் ஜஸ்டீன் ( வயது 27 ) கட்டட மேஸ்திரி. சில மாதங்களாக ஜஸ்டீன் சரியாக வேலைக்கு செல்லாதது , மது அருந்துவது உள்ளிட்ட காரணங்களால் தந்தை அருள்தாஸ் உடன் தகராறு இருந்து வந்துள்ளது. ஜஸ்டின் மது போதையில் இருந்த போதெல்லாம் தந்தையை தாக்குவது தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  மீண்டும் ஜஸ்டீன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். அதை தந்தை தட்டி கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜஸ்டீன், வீட்டில் கிடந்த அரிவாளால் தந்தை அருள்தாஸின் தலையில் வெட்டினார். இதில் அவர் இறந்துள்ளார். தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் , சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜஸ்டீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மது பாட்டிலை உடைத்து தன்னை தானே கழுத்தில் குத்தி இளைஞர் இறப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( வயது 22 ) இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவர் ஹரிணி ( வயது  22 ) என்பவரை ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஹரிணி கர்ப்பமாக உள்ளார். இருவருக்கும் இடைய வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் , ஹரிணியை பயமுறுத்த வெளியில் கிடந்த மது பாட்டிலை உடைத்து தன் கழுத்தில் குத்திக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் விழுந்த ஸ்ரீதர் , ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது வரும் வழியில் அவர் இறந்தது தெரிந்தது.

8 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளியில் தலைகுப்புற விழுந்து பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த ராஜிவ் காந்தி நகர் , ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ( வயது 30 ) பொக்லைன் ஓட்டுநர். அவரது மனைவி காந்தா மேரி ( வயது 25 ) மாலை இவர்களின் 3 வயது பெண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர காந்தா மேரி சென்றார். அப்போது எட்டு மாத பெண் குழந்தையை , வீட்டில் இருந்த தாய் சொர்ணாவிடம் பார்த்துக் கொள்ளும் படி கூறி சென்றார். சொர்ணா உடல் அசதியில் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது வெளியே சென்ற குழந்தை , வராண்டாவில் தண்ணீருடன் வைத்திருந்த பிளாஸ்டிக் வாளியில் , தலை குப்புற தவறி விழுந்துள்ளது. வீடு திரும்பிய காந்தர மேரி, இதை கண்டு குழந்தையை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து  ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget