மேலும் அறிய

திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கிரைம் செய்திகளை பற்றிய விவரங்களை கீழே தெரிந்துக்கொள்ளலாம்.

மொபைலில் வீடியோ எடுத்த இளைஞர்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் சரகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த 2 - ம் தேதி காலை , வீட்டு குளியல் அறையில் சிறுமி குளித்து கொண்டிருந்ததை தரை தளத்தில் வசிக்கும் கங்காதரன் ( வயது 27 ) என்பவர் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். பெற்றோர் புகாரின் படி விசாரித்த கொரட்டூர் போலீசார் கங்காதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதையில் தந்தையை வெட்டிய மகன் 

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் ( வயது 52 ) விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் ஜஸ்டீன் ( வயது 27 ) கட்டட மேஸ்திரி. சில மாதங்களாக ஜஸ்டீன் சரியாக வேலைக்கு செல்லாதது , மது அருந்துவது உள்ளிட்ட காரணங்களால் தந்தை அருள்தாஸ் உடன் தகராறு இருந்து வந்துள்ளது. ஜஸ்டின் மது போதையில் இருந்த போதெல்லாம் தந்தையை தாக்குவது தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  மீண்டும் ஜஸ்டீன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். அதை தந்தை தட்டி கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜஸ்டீன், வீட்டில் கிடந்த அரிவாளால் தந்தை அருள்தாஸின் தலையில் வெட்டினார். இதில் அவர் இறந்துள்ளார். தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் , சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜஸ்டீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மது பாட்டிலை உடைத்து தன்னை தானே கழுத்தில் குத்தி இளைஞர் இறப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( வயது 22 ) இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவர் ஹரிணி ( வயது  22 ) என்பவரை ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஹரிணி கர்ப்பமாக உள்ளார். இருவருக்கும் இடைய வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் , ஹரிணியை பயமுறுத்த வெளியில் கிடந்த மது பாட்டிலை உடைத்து தன் கழுத்தில் குத்திக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் விழுந்த ஸ்ரீதர் , ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது வரும் வழியில் அவர் இறந்தது தெரிந்தது.

8 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளியில் தலைகுப்புற விழுந்து பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த ராஜிவ் காந்தி நகர் , ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ( வயது 30 ) பொக்லைன் ஓட்டுநர். அவரது மனைவி காந்தா மேரி ( வயது 25 ) மாலை இவர்களின் 3 வயது பெண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர காந்தா மேரி சென்றார். அப்போது எட்டு மாத பெண் குழந்தையை , வீட்டில் இருந்த தாய் சொர்ணாவிடம் பார்த்துக் கொள்ளும் படி கூறி சென்றார். சொர்ணா உடல் அசதியில் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது வெளியே சென்ற குழந்தை , வராண்டாவில் தண்ணீருடன் வைத்திருந்த பிளாஸ்டிக் வாளியில் , தலை குப்புற தவறி விழுந்துள்ளது. வீடு திரும்பிய காந்தர மேரி, இதை கண்டு குழந்தையை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து  ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Embed widget