மேலும் அறிய

ஆணவக்கொலைக்கு ENDCARD! சட்டம் கொண்டு வரும் கர்நாடகா தமிழ்நாட்டில் எப்போது?

ஆணவக்கொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், கர்நாடாக அரசு கடும் தண்டனைகளுடன் கூடிய ஆணவக்கொலை தடுப்பு சட்டதுக்கான மசோதாவைத் தயாரித்து அதிரடி காட்டியிருக்கிறது.

இப்போலாம் யார்ங்க சாதி பாக்றாங்க என்று அறியாமையில் பலர் உளறிக்கொண்டிருக்கின்ற இதே காலகட்டத்தில்தான், National Crime Records Bureau தரவுகளின்படி நாட்டில் ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு தலித் மீது சாதிய ரீதியிலான குற்றங்கள் நடக்கிறன.

ஒவ்வொரு நாளும் 27 தலித்துகள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. தினமும் குறைந்தது 10 தலித் பெண்கள் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தலித்துகள் மீதான வன்முறை வழக்குகள் மட்டும் 45,000-க்குள் மேல் பதிவாகின்றன. இத்தனைக்கும், SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தும் இவ்வளவு சாதிய வன்முறைகள் நிகழ்கின்றன.

இவையனைத்திற்கும் மேலாக, நாடு சுதந்திரமடைந்து முக்கால் நூற்றாண்டு ஆன பிறகும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து வாழ முடியாத அளவுக்கு நாடு முழுவதிலும் ஆணவக் கொலைகள் நிகழ்கின்றன.

படித்தவர், படிக்காதவர், வசதி படைத்தவர், ஏழை என்ற பேதமின்றி சாதி என்ற ஒற்றைப் புள்ளியில் இத்தகைய ஆணவக் கொலைகள் நிகழ்கின்றன. இதில் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் என்று எளிதில் கடந்துவிட முடியாது. எதிர்தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதனால், பாதிக்கப்படும் இரத்தரப்புக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்படுகிறது.

இதில் தமிழ்நாட்டில் பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர், தூர வெளிச்சமாக ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து பரிந்துரை வழங்க முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் கடந்த ஆண்டு ஆணையம் அமைத்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில், பக்கத்து மாநிலமான கார்நாடகாவில் ஆணவக் கொலை தடுப்பு மசோதவை தயாரித்திருக்கிறது காங்கிரஸ் அரசு. கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஹூப்ளி தாலுகாவில், 20 வயது பெண்ணை அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, பட்டியலின இளைஞரை அவர் திருமணம் செய்தார் என்ற ஒரே காரணத்துக்காக கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்தனர்.

இச்சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதையடுத்து, 'The Karnataka Freedom of Choice in Marriage and Prevention and Prohibition of Crimes in the Name of Honour and Tradition Bill, 2026' என்ற மசோதாவை அரசு தயாரித்திருக்கிறது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவானது, 18 வயது நிரம்பிய பெண்ணும், 21 வயது நிரம்பிய ஆணும் திருமணம் செய்துகொள்ள குடும்பத்தினர் அல்லது சமூகத்தின் ஒப்புதல் அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும், ஆணும் பெண்ணும் கலப்புத் திருமணம் செய்கிறார்கள் எனில் தங்களின் முடிவு பற்றி மாவட்ட நீதிபதி அல்லது நோடல் அதிகாரியிடம் தெரிவிக்க அனுமதிக்கிறது. இருப்பினும் அவர்களின் விருப்பதற்குரியதுதான். அதேசமயம், சம்பந்தப்பட்ட இருவரின் குடும்பத்தினர் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வேண்டுகோளின் பேரில் போலீஸ் அதிகாரிகள் வேறு அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கை எடுப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

மேலும், கலப்பு திருமணம் செய்துகொள்ள விருப்பும் ஜோடி, தங்களின் குடும்பத்தினாரால் அல்லது சமூகத்தினரால் அச்சுறுத்தல் அல்லது பாதிப்பு வரக்கூடும் என்று பாதுகாப்பு கேட்டு கோரிக்கை வைத்தால், அடுத்த 6 மணிநேரத்திற்குள் சம்பத்தப்பட்ட ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தையும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த மசோதாவில் தண்டனைகளைப் பொறுத்தவரை, குடும்ப மற்றும் சாதி கௌரவம் என்ற பெயரில் ஜோடியின் மீது கடுமையான தாக்குதல் ஏற்படுத்தினால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். கூடுதலாக, 3 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

லேசான காயம் ஏற்பாடுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆணவக்கொலை செய்தால், BNS சட்டத்தின் கீழ் தண்டனைகளுடன் கூடுதலாக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கப்படும்.

உடல் ரீதியிலான தாக்குதல் மட்டுமல்லாது, சமூக ரீதியாக ஒதுக்கி வைப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதுமட்டுமல்லாது, திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணுடன் உடலுறவு கொண்ட பின்னர் சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்தால் அது குற்றமாகக் கருதப்படும். இச்செயலுக்கு பாலியல் வன்கொடுமை தண்டனைக்கு உட்பட்டு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும்.

கர்நாடக அரசின் இந்த மசோதா ஆணவக்கொலை தடுக்க முக்கிய முன்னெடுப்பாக பார்ப்பதுடன் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டமானால், நீண்ட காலமாக ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் கோரிக்கை இருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சட்டம் கொண்டுவருவதாற்கான அழுத்தம் ஏற்படும்.

செய்திகள் வீடியோக்கள்

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்
பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்
Pezeshkian Vs America: “உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
“உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
ABP Nadu Top 10, 13 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 13 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
வானை பிளந்த பக்தி கோஷம்... புனித நீர் தெளிப்பு: திருக்களாச்சேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெருவிழாவில் பக்தர்கள் பரவசம்..!
வானை பிளந்த பக்தி கோஷம்... புனித நீர் தெளிப்பு: திருக்களாச்சேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெருவிழாவில் பக்தர்கள் பரவசம்..!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin's Plan: ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Pezeshkian Vs America: “உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
“உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Sorento Vs Fortuner Diesel: டீசல் SUV-ல் கடும் போட்டி.! சொரெண்டோவா.? ஃபார்ச்சூனரா.? எது உங்களுக்கு சிறந்தது.? முழு ஒப்பீடு
டீசல் SUV-ல் கடும் போட்டி.! சொரெண்டோவா.? ஃபார்ச்சூனரா.? எது உங்களுக்கு சிறந்தது.? முழு ஒப்பீடு
Victoris CNG on EMI: சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
Embed widget