மேலும் அறிய

உற்சாக வெள்ளத்தில் மாணவர்கள்! தருமபுரம் ஆதீனம் மணிவிழா மாரத்தான் போட்டியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழா மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60-வது மணிவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்று உற்சாகத்துடன் ஓடினர். இந்தப் போட்டியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

மணிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதி

தருமபுரம் ஆதீனத்தின் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அவர்களின் 60-வது பிறந்தநாள் (மணிவிழா) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பத்து நாட்களுக்கு மாநாடு மற்றும் ஆன்மீகம், சமூக மேம்பாடு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆதீனம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்தக் கொண்டாட்டங்களின் முக்கிய பகுதியாக, இளைஞர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினரை ஊக்குவிக்கும் விதமாக, இன்று மாணவ மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்டமான ‘மணிவிழா மாரத்தான் போட்டி’ நடைபெற்றது. ஆரோக்கியமான வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீகத்தின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் இந்தப் போட்டி அமைந்தது.

அமைச்சர் மற்றும் மடாதிபதி துவக்கி வைத்தனர்

மாரத்தான் போட்டி, தருமபுரம் ஆதீன மடத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பிருந்து ஆரம்பமானது. இந்தப் போட்டியை, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தருமபுரம் ஆதீனத்தின் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளும் இணைந்து கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ். நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

மடாதிபதி துவக்கி வைத்தபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் ஆரவாரம் செய்து, ஓட்டத்தைத் தொடங்குவதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். மடாதிபதி, இளைஞர்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என வாழ்த்தினார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்

இந்த மினி மாரத்தான் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 30 பள்ளிகளில் இருந்து, 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர். 

இதில்1000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரம் போட்டியானது நடைபெற்றது.  ஆதீன மடத்தின் நுழைவாயிலில் இருந்து தொடங்கி, மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் பள்ளி வரை இந்தப் போட்டி நடைபெற்றது. போட்டி நடைபெற்ற 5 கிலோ மீட்டர் தூரமும், மாணவர்கள் அளித்த உற்சாகக் கோஷங்களால் மயிலாடுதுறை நகரமே களைகட்டியது. ஓட்டப் பாதையின் நெடுகிலும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸாரும், ஆதீன நிர்வாகத் தொண்டர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா

மாரத்தான் போட்டியில் பங்கேற்று நிர்ணயிக்கப்பட்ட 5 கிலோ மீட்டர் தூரத்தை முதலில் கடந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களை அமைச்சர் மெய்யநாதன், ஆதீன மடாதிபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டிப் பரிசுகளை வழங்கினர். விளையாட்டில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டி, இதுபோன்ற போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மடாதிபதி அறிவுறுத்தினார்.

தருமபுரம் ஆதீனத்தின் மணிவிழா கொண்டாட்டத்தின் மூலம் ஆன்மீகத் தொண்டுடன், இளம் தலைமுறையினரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இத்தகைய நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
IND vs IRE: வரலாறு படைக்குமா அயர்லாந்து? டக் அவுட்டான சாம்சன், அபிஷேக்! 155 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs IRE: வரலாறு படைக்குமா அயர்லாந்து? டக் அவுட்டான சாம்சன், அபிஷேக்! 155 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
ESPNcricinfo பெயர் மாற்றம்..ஜியோஸ்டார் அறிவிப்பு
ESPNcricinfo பெயர் மாற்றம்..ஜியோஸ்டார் அறிவிப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M.R. Vijayabhaskar resigned : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
MR Vijayabhaskar: காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
வெளிவரும் புது சர்ச்சை; உதவிப் பேராசிரியர் தேர்வு: வண்ண மதிப்பெண்கள் மர்மம்! விசாரிக்க கோரிக்கை!
வெளிவரும் புது சர்ச்சை; உதவிப் பேராசிரியர் தேர்வு: வண்ண மதிப்பெண்கள் மர்மம்! விசாரிக்க கோரிக்கை!
CM Vijay IAS and IPS Conference : தொடங்கியது IAS, IPS அதிகாரிகள் மாநாடு.! செம பிளானோடு களமிறங்கிய சிஎம் விஜய்
தொடங்கியது IAS, IPS அதிகாரிகள் மாநாடு.! செம பிளானோடு களமிறங்கிய சிஎம் விஜய்
Domestic Violence: ”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
MK Stalin: மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Embed widget