![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Kanchipuram Kamatchi Amman: வெள்ளிக்கிழமை காஞ்சி காமாட்சி அம்மனின் தரிசனம் கோடி புண்ணியம்..! குவிந்த பக்தர்கள்..!
ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை,வரலட்சுமி விரதத்தை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத் தேர் உற்சவம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத்தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
![Kanchipuram Kamatchi Amman: வெள்ளிக்கிழமை காஞ்சி காமாட்சி அம்மனின் தரிசனம் கோடி புண்ணியம்..! குவிந்த பக்தர்கள்..! kanchipuram kamakshi temple Avani Golden Chariot Festival occasion of Varalakshmi Viratham TNN Kanchipuram Kamatchi Amman: வெள்ளிக்கிழமை காஞ்சி காமாட்சி அம்மனின் தரிசனம் கோடி புண்ணியம்..! குவிந்த பக்தர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/26/e891243a7060187be0f58037e62a270f1693017963675113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ( Kanchipuram Kamatchi Amman )
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், ஒட்டியான பீடமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
![காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ( Kanchipuram Kamatchi Amman )](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/26/9f4915ac75cf9ab1555857c4bfd538fb1693017607041113_original.jpg)
தங்கத்தே உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிகப்பு பட்டு உடுத்தி வளையல், மற்றும் மலர் மாலைகள் அணிவித்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன், மின்விளக்கு வெளிச்சத்தில், தகதகவென மின்னிய, தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
![காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ( Kanchipuram Kamatchi Amman )](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/26/0e893ac77fd04ba63f04cf10e1d638611693017668591113_original.jpg)
தங்கத்தேர் உற்சவத்தை காண உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து திரண்டு வந்திருந்த திரளான பக்தர்கள் தங்கத்தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்று கோவில் வளாகத்தில் வலம் வந்து காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான் என நம்பிக்கை நிலவுகிறது
![காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ( Kanchipuram Kamatchi Amman )](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/26/05b4ccc11af3e90c58fee814950841221693017740293113_original.jpg)
அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள் என்பது நம்பிக்கை. பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள் என்பது நம்பிக்கை.
தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள் என்பது நம்பிக்கை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)