Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
சென்னையில் வங்கி மேலாளரை தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வரும் தளத்தில் லிஃப்ட்செயல்படாத காரணத்தினால் கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் வங்கி தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கயல்விழி லிஃப்ட் பிரச்சனை குறித்து பேச வந்தபோது வங்கி மேனேஜருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, கயல்விழி பேசுவதை கன்னத்தில் கைவைத்துக்கொண்டு மேனஜர் கேட்டுக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த கயல்விழி அவரை கன்னத்தில் பளார் என அறைந்தார்.
இதனால், கயல்விழி மீது வங்கி மேனேஜர் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர். வங்கி மேனேஜரை கயல்விழி அறையும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் எஸ்.பி.ஐ RBO-II தலைமை மேலாளர் நமச்சிவாயம் அடிப்படையில் அடையார் காவல்துறை பாரதிய நியாய சம்ஹிதாவின் 296(b), 329(4), 115(2) மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்து அவரிடம் 2 மணி நேரம் விசாரணை மேற்க்கொண்டனர்.
இதன்பின்னர் கயல்விழி கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தின் மூலம் கயல்விழிக்கு தண்டனை பெற்றுத்தர உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















