மேலும் அறிய

"கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு தரணும்" நிஜ்ஜார் கொலை வழக்கில் அமெரிக்கா பரபர கருத்து!

காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் கனட விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. கடந்தாண்டு, ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைத்த குற்றச்சாட்டு உலக நாடுகளை கதிகலங்க வைத்தது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது.

நிஜ்ஜார் கொலை வழக்கு:

இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கனட விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்க தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா மீது கனட மீண்டும் பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இந்த கொலைக்கும் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கும் தொடர் இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் அமெரிக்க அரசு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் இன்று நடைபெற்ற செய்தியாைளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், "கனட விவகாரத்தை பொறுத்தவரையில், அவர்களின் ​​குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அமெரிக்கா பரபரப்பு கருத்து:

கனட விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், வெளிப்படையாக அவர்கள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. இரு நாடுகளும் பொதுவெளியில் சொன்னதை தவிர்த்து அதை தாண்டி நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை. அவர்கள் ஒத்துழைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்றார்.

இந்திய - அமெரிக்க உறவு குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், "இந்தியா தொடர்ந்து நம்பத்தகுந்த வலுவான கூட்டு நாடாக உள்ளது. சுதந்திரமான, திறந்த, செழிப்பான இந்தோ-பசிபிக் பகுதிக்கான எங்கள் பகிரப்பட்ட பார்வை உட்பட பல விஷயங்களில் நாங்கள் அவர்களுடன் பணியாற்றியுள்ளோம். மேலும் எங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், அந்த கவலைகளை அவர்களிடம் எடுத்து சென்று நேர்மையாக உரையாடுவோம்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying : Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..Ponmudi Angry | ’’இதுதான் உங்க லட்சணமா?’’LEFT & RIGHT வாங்கிய பொன்முடிநடுங்கிப்போன அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து  ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Pushpa 2: மிரட்டும் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! ரிலீஸ் ஆவதற்கு முன்பே 900 கோடி வசூல்!
Pushpa 2: மிரட்டும் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! ரிலீஸ் ஆவதற்கு முன்பே 900 கோடி வசூல்!
Embed widget