மேலும் அறிய

RBI Foreclosure: ஆர்பிஐ-யின் புதிய அதிரடி..! இனி கடன்களை முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் இல்லை - யாருக்கு பலன்?

RBI Foreclosure: வங்கிக் கடன்களை முன்கூட்டியே செலுத்துவதற்கான அபராத கட்டணங்களை நீக்கும் திட்டங்களை, ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.

RBI Foreclosure: சிறு குறு நிறுவனங்களுக்கான வங்கிக் கடன்களையும்,  முன்கூட்டியே செலுத்தும்போது  விதிக்கப்படும் அபராத கட்டணங்களை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் பரிந்துரை:

பல்வேறு தேவைகளுக்காக தனிநபர்களும்,தொழில் நிறுவனங்களும் வங்கியில் கடன்களை பெறுகின்றன. அவற்றிற்கு நிலையான மற்றும் மிதக்கும் முறையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தான், மிதக்கும் வட்டி விகிதத்துடன் கூடிய கடன்களை முன்கூட்டியே அடைக்கும்போது அல்லது கடனின் ஒருபகுதி தொகையை முன்கூட்டியே மொத்தமாக செலுத்துவம் போது, விதிக்கப்படும் அபராதம் அல்லது கட்டணத்தை நீக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பாக வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், வணிக நோக்கில் தனிநபர், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் வாங்கிய மிதக்கும் வட்டியுடன் கூடிய கடன்களுக்கு, மேற்குறிப்பிடப்பட்ட சலுகைகளை வழங்க ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. 

வரம்புகள் என்ன? 

MSE கடன் வாங்குபவர்களைப் பொறுத்தவரை, புதிய வழிமுறையானது ஒரு கடனாளிக்கான  மொத்தம் அனுமதிக்கப்பட்ட வரம்பு ரூ.7.50 கோடி வரை பொருந்தும். அதை தாண்டிய தொகைக்கு முன்கூட்டியே அடைக்கும்போது அல்லது கடனின் ஒருபகுதி தொகையை முன்கூட்டியே மொத்தமாக செலுத்தும் போது அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது, இது குறித்து மார்ச் 21, 2025 க்குள் பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள்:

ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள், கடன் வாங்குபவர்களுடனான ஒப்பந்தங்களில் கட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளைச் சேர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மலிவான கடன் பெறக்கூடிய பிற கடன் வழங்குநர்களிடம் அல்லது சிறந்த சேவைகளை வழங்கக்கூடிய கடன் வழங்குநரிடம் மாறுவதைத் தடுக்கிறது. எனவே, வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் எந்தவொரு பூட்டுதல் காலமும் இல்லாமல் கடனை முன்கூட்டியே செலுத்துதல் அல்லது முன்கூட்டியே அடைத்தல் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தனது வரைவு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 

தற்போதுள்ள விதிகள் என்ன?

தற்போதுள்ள விதிமுறைகளின்படி, சில வகை ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs), வணிகம் அல்லாத பிற நோக்கங்களுக்காக, இணை-கடனாளிகள் அல்லது தனிப்பட்ட கடன் வாங்குபவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மிதக்கும் விகிதக் கடன்களுக்கு முன்கூட்டியே கடன் அடைப்பு கட்டணங்கள்/முன்கூட்டியே பகுதியை செலுத்துவதற்கு அபராதங்களை விதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. முன்னதாக வணிகம் அல்லாத நோக்கங்களுக்காக வாங்கிய தனிநபர் கடன்களுக்கே இந்த அபாரத விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது வணிக நோக்க கடன்களுக்கு அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களின் செலவு கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Manickam Tagore : ‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Embed widget