மேலும் அறிய

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களே காரணம் - உச்ச நீதிமன்றம் அதிரடி

ராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் பொருளாதாரத்தை தவறாக கையாண்டு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடி கடந்தாண்டு உச்சம் தொட்டது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, அதன் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்கு சென்றது, மருந்து பொருள்களில் பற்றாக்குறை ஏற்பட்டது ஆகிய காரணங்களால் இலங்கை மக்கள் சிக்கி தவித்தனர்.

மக்களை நிலைகுலைய வைத்த பொருளாதார நெருக்கடி:

வரி குறைப்பு, அதிகளவில் பணத்தை அச்சடித்தது, திடீரென இயற்கை விவசாயத்துக்கு மாறியது, கொரோனா பெருந்தொற்று போன்றவை இதற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் உச்சமாக வரலாறு காணாத போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அதன் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சவும் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவும் ராஜினாமா செய்தனர். புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். இப்படிப்பட்ட சூழலில், இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) என்ற அமைப்பு, செயற்பாட்டாளர்கள் சந்திர ஜயரத்ன, ஜெஹான் கனகரெட்னா மற்றும் ஜூலியன் பொலிங் ஆகியோருடன் இணைந்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

"ராஜபக்ச சகோதரர்களே காரணம்"

குடிமக்களின் அடிப்படை உரிமைகளான சமத்துவம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவாதமான தகவல் அறியும் உரிமை ஆகியவற்றை ராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்டோர் மீறினர் என வழக்கு தொடரப்பட்டது.

மனுவில் குறிப்பிட்ட நபர்களின் செயலற்ற தன்மையே நாட்டில் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் எல்பி எரிவாயு பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த மக்களையும் பாதித்தது என மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர்கள் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டவர்களே பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என இலங்கை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேற்குறிப்பிட்ட நபர்கள், பொருளாதாரத்தை தவறாக கையாண்டு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் டபிள்யூ.டி.லட்சுமன், முன்னாள் நிதிச் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, முன்னாள் அதிபரின் தனி செயலாளர் பி.பி. ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர்களும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.                                                       

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
’’எடப்பாடிதான் எங்களின் ஒரே எதிரி; சசிகலா வராதது ஏன்?’’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டாகப் பேட்டி!
’’எடப்பாடிதான் எங்களின் ஒரே எதிரி; சசிகலா வராதது ஏன்?’’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டாகப் பேட்டி!
ஈபிஎஸ்-க்கு எதிராக ஒன்றிணைந்த மூவர் கூட்டணி; இணைத்த தேவர் ஜெயந்தி- என்ன சம்பவம்?
ஈபிஎஸ்-க்கு எதிராக ஒன்றிணைந்த மூவர் கூட்டணி; இணைத்த தேவர் ஜெயந்தி- என்ன சம்பவம்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள்: நவ.7 முதல் சான்றிதழ் பதிவேற்றம்- எப்படி? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வழிமுறைகள்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள்: நவ.7 முதல் சான்றிதழ் பதிவேற்றம்- எப்படி? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வழிமுறைகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சட்டை இல்லாமல் ATROCITY தட்டிக்கேட்ட கனி தகாத முறையில் பேசிய திவாகர் | Big Boss 9 issue
2 லட்சம் செலவில் Bench!மாணவர்களுக்கு farewell பரிசு-அசத்திய அரசு பள்ளி ஆசிரியை | Villupuram News
‘ADVANCED STROKE NETWORK’ பக்கவாத நோய் பயமா?அப்போலோவின் புதிய முயற்சி | Apollo Advanced Stroke Network
Vijay vs Bussy Anand|போர்க்கொடி தூக்கிய Virtual Warriorsபுஸ்ஸி ஆனந்துக்கு செக்அதிரடி காட்டும் விஜய்
சினிமாவுக்கு GOOD BYE ரஜினி திடீர் முடிவு! இதுதான் கடைசி படமா? | Rajini Retirement Kollywood

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
’’எடப்பாடிதான் எங்களின் ஒரே எதிரி; சசிகலா வராதது ஏன்?’’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டாகப் பேட்டி!
’’எடப்பாடிதான் எங்களின் ஒரே எதிரி; சசிகலா வராதது ஏன்?’’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டாகப் பேட்டி!
ஈபிஎஸ்-க்கு எதிராக ஒன்றிணைந்த மூவர் கூட்டணி; இணைத்த தேவர் ஜெயந்தி- என்ன சம்பவம்?
ஈபிஎஸ்-க்கு எதிராக ஒன்றிணைந்த மூவர் கூட்டணி; இணைத்த தேவர் ஜெயந்தி- என்ன சம்பவம்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள்: நவ.7 முதல் சான்றிதழ் பதிவேற்றம்- எப்படி? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வழிமுறைகள்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள்: நவ.7 முதல் சான்றிதழ் பதிவேற்றம்- எப்படி? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வழிமுறைகள்!
நாமக்கல் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள் பலி? வைரலாகும் பதிவுகள்- உண்மை என்ன?
நாமக்கல் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள் பலி? வைரலாகும் பதிவுகள்- உண்மை என்ன?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Joy Crizildaa Vs Rangaraj: ஒரு மாசத்துக்கு இவ்வளவு ஜீவனாம்சமா.?! மாதம்பட்டி ரங்கராஜை அலறவிட்ட ஜாய் கிரிசில்டா.! - வழக்கு
ஒரு மாசத்துக்கு இவ்வளவு ஜீவனாம்சமா.?! மாதம்பட்டி ரங்கராஜை அலறவிட்ட ஜாய் கிரிசில்டா.! - வழக்கு
US Trump: H1B வரிசையில்.. வர்க் பெர்மிட்டில் கைவைத்த அமெரிக்கா - 540 நாள் ஆஃபர் காலி, கலக்கத்தில் இந்தியர்கள்
US Trump: H1B வரிசையில்.. வர்க் பெர்மிட்டில் கைவைத்த அமெரிக்கா - 540 நாள் ஆஃபர் காலி, கலக்கத்தில் இந்தியர்கள்
Embed widget