மேலும் அறிய

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் ..." - முன்னாள் ராணுவ தளபதி கருத்தால் சர்ச்சை...

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் இவ்வாறு  பைத்தியகாரத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் இவ்வாறு  பைத்தியகாரத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என முன்னாள் ராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் திருடர்களே என அவர் விமர்சித்துள்ளார்.இவ்வாறு ஊடகங்களுக்கு பதில் அளித்துள்ள சரத் பொன்சேகா  தற்போதைய இலங்கை அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் பிரபாகரன் இருந்திருந்தால் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்திருக்கும் என கூறியுள்ளார். இலங்கை அரசியல்வாதிகள் பதவிக்காக தற்போது பைத்தியக்காரர்களைப் போல செயல்படுவதாகவும் பிரபாகரன் என்றொருவர் இருந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பிரபாகரன் இருந்திருந்தால் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் இப்படி மேலும் கீழும் குதித்து பைத்தியக்காரர்களைப் போல் நடந்து கொள்ள மாட்டார்கள் என சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களை சரி செய்யாமல் பதவியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டால், இந்த நாடு வறியவர்கள் இருக்கும் நாடாக தொடர்ந்து இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டுக்காக தாம் செய்த அர்ப்பணிப்புகளின் பிரதிபலன்கள் இதுவரை கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து இருக்கும் சரத் பொன்சேக்கா நாட்டை கட்டி எழுப்ப போராடாமல் இந்த அரசியல்வாதிகள் பதவிக்காகவும் கட்சிக்காகவும் நடந்து கொள்ளும்  விதம் பற்றி செய்தியாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

தான் அதிபர் பதவிக்கோ பிரதமர் பதவிக்கோ போட்டியிடவில்லை என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா  நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் திருட்டு அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளார்.


பிரபாகரன் மட்டும் இருந்திருந்தால் இந்த அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொண்டிருப்பார்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார். தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மூவர் இந்த அதிபர், பிரதமர்  பதவிக்கு போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள சில அரசியல் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகள்  சிலரின் நடவடிக்கைகளை தான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் வெளிப்படையாகவே பேசி இருக்கும் சரத்பொன்சேகா தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ராஜபக்சவினரின் சுதந்திர கட்சி யாருக்குமே வாக்களிக்காமல் நடுநிலையாக இருப்பது நல்லது எனவும் , அது நல்ல தலைவர்களை நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாவது கட்சித் தலைவர்களை மடக்கி இந்த திருட்டு அரசியல்வாதிகள் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் தான் முனைப்பு காட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 
நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு அதிகளவான வாக்குகள் சுமார் 150 வாக்குகள் இருப்பதாக சரத்பொன்சேகா  சுட்டி காட்டியுள்ளார்‌. தற்போது அந்தக் கட்சிக்குள்ளும் அதிபர் பதவி விஷயத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் இருதரப்புகளாக பிரிந்து இருப்பதாகவும், வாக்குகள் ஒரு தரப்புக்கு அதிகமாகவும் ஒரு தரப்புக்கு குறைவான அளவில் வாக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். வாக்குகள் சரிசமமாக பிரிந்தால்  மட்டுமே சஜித் பிரேமதாசவுக்கு அது சாதகமாக அமையும் எனவும் அதுவும் நியாயமாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை ரணில் விக்ரமசிங்க அதிபராக தேர்வாகி,  பிரதமர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டால் அது இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள 19 வது திருத்தச் சட்டத்தின் படி, அதிகார மாற்றங்களை செய்து பகிர்ந்து அளிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் திருடர்கள் எனவும் நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை அழித்து விட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் இன்னும் இந்த அரசியல்வாதிகளின் பின்னால் உள்ள திருட்டுத்தனத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். மக்களின் இந்தப் போராட்டத்தின் மூலம் முழுமையான மாற்றம் நாட்டில் ஏற்படுமா என்பதில் சந்தேகமே என சரத்பொன்சேகா  குறிப்பிட்டுள்ளார். சிறந்ததொரு நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும், பதவி தனது நோக்கம் இல்லை எனக் கூறியுள்ள சரத்பொன்சேகா,  12 ஆண்டுகள் பதவி ஆசை இல்லாமல் தான் அரசியலில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

ராணுவத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை அடக்குவதற்கு இது 1989 ஆம் ஆண்டு அல்ல என ரணில் விக்ரமசிங்க புரிந்து கொள்ள வேண்டுமென சரத் பொன்சேக்கா தெரிவித்திருக்கிறார். இவற்றை  தற்போது உள்ள உலகம் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தவறான அரசியல் கலாச்சாரமே இன்று நாட்டை  சீரழித்திருப்பதாக சரத்பொன்சேகா கூறியுள்ளார். ஆகவே மக்கள் முன்னெடுத்து உள்ள இந்தப் போராட்டமானது சிறந்ததொரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதையே தானும் எதிர்பார்த்து இருப்பதாக அவர் கூறப்பட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Cuba Crisis: இருளில் தத்தளிக்கும் கியூபா.. கைகொடுத்த புதின்.. கச்சா எண்ணெயுடன் வந்திறங்கிய ரஷ்ய கப்பல்
Cuba Crisis: இருளில் தத்தளிக்கும் கியூபா.. கைகொடுத்த புதின்.. கச்சா எண்ணெயுடன் வந்திறங்கிய ரஷ்ய கப்பல்
Trump warns Iran:
Trump warns Iran: "ஹார்முசை திறங்க.. இல்லையேல் போர்!" ஈரானை மிரட்டும் டொனால்ட் டிரம்ப்
Watch Video: துபாய் கடற்கரையில் ட்ரோன் தாக்குதல்; பற்றி எரிந்த குவைத் எண்ணெய் கப்பல்; ஈரான் காரணமா.?
துபாய் கடற்கரையில் ட்ரோன் தாக்குதல்; பற்றி எரிந்த குவைத் எண்ணெய் கப்பல்; ஈரான் காரணமா.?
Strait Of Hormuz Toll: சும்மா இருந்தவர்களை சொறிஞ்சு விட்ட ட்ரம்ப்; ஹார்முஸை கடக்க இனி சுங்கக் கட்டணம்; ஈரான் அதிரடி
சும்மா இருந்தவர்களை சொறிஞ்சு விட்ட ட்ரம்ப்; ஹார்முஸை கடக்க இனி சுங்கக் கட்டணம்; ஈரான் அதிரடி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
ஏதர் எடுக்கப்போகும் புது அவதாரம்! கம்மி விலையில் கலக்க வரும் Ather EL01 இ ஸ்கூட்டர்!
ஏதர் எடுக்கப்போகும் புது அவதாரம்! கம்மி விலையில் கலக்க வரும் Ather EL01 இ ஸ்கூட்டர்!
"ஆட்சி அமைக்கவே முடியாது!" - இண்டியா கூட்டணிக்கு 'முற்றுப்புள்ளி' ... புதுச்சேரி அரசியலை அலறவிட்ட அண்ணாமலை!
Cuba Crisis: இருளில் தத்தளிக்கும் கியூபா.. கைகொடுத்த புதின்.. கச்சா எண்ணெயுடன் வந்திறங்கிய ரஷ்ய கப்பல்
Cuba Crisis: இருளில் தத்தளிக்கும் கியூபா.. கைகொடுத்த புதின்.. கச்சா எண்ணெயுடன் வந்திறங்கிய ரஷ்ய கப்பல்
Kerala Election 2026: மகளிருக்கு மாதாமாதம் ரூ.2500, 3ஆயிரம் ஓய்வூதியம்- இலவச வாக்குறுதிகளை அள்ளிவீசிய பாஜக!
Kerala Election 2026: மகளிருக்கு மாதாமாதம் ரூ.2500, 3ஆயிரம் ஓய்வூதியம்- இலவச வாக்குறுதிகளை அள்ளிவீசிய பாஜக!
Embed widget