மேலும் அறிய

Thiruvarur : மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..

தேரோட்டதிற்கு பிறகு அம்பாள் தேரோட்டத்திற்காக 4 மாதங்கள் கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுகிறது. இதனால் மழையில் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.  

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது. ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டது, அதன்படி கடந்த 2019 ஆண்டு ஆழத்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.


Thiruvarur : மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்ட விழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி ஆழித்தேரின் கூரைகள் பிரிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி, தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடைபெற்றது. தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடைபெற்றது. இதனையடுத்து ஆடிப்பூர விழா அம்பாள் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் ஆழித்தேரை கடந்து செல்ல வேண்டும்.

இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து செல்லும்போது இடையூராக அமையும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் லேசாக உரசினால், கண்ணாடி சேதமடையும் நிலை உள்ளது. இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதிக்காக ஆழித்தேருக்கு தற்காலிக இரும்பு தகடுகளால் மூடப்பட்டது. இதனையடுத்து ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி தற்காலிக கூரை பிரிக்கப்பட்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கியது.


Thiruvarur : மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..

சுமார் 2 மாதங்கள் ஆன நிலையில் இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதில் மேற்பகுதி கூரை போடப்பட்ட நிலையில் நான்கு புறங்களில் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் சரிவர கண்ணாடி கூண்டுகள் பொறுத்தாததால் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ரூ.40 லட்சம் மதிப்பில் அழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேரோட்டத்திற்கு கண்ணாடி கூண்டு பிரிக்கப்பட்ட நிலையில், தேரோட்டதிற்கு பிறகு அம்பாள் தேரோட்டத்திற்காக 4 மாதங்கள் கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த கண்ணாடி கூண்டு ஆழித்தேருக்கு ஆண்டிற்கு 5 மாதங்கள் கூட பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த கண்ணாடி கூண்டு அமைப்பதில் சிரமங்கள் இருந்து வருகிறது. பிரதான சாலை ஆழித்தேர் உள்ளதாலும், கண்ணாடி கூண்டிற்கான வடிவமைப்பு சரிவர திட்டமிடப்படவில்லை. இதனால் கண்ணாடி கூண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியாத நிலை இருஎனவே வரலாற்று சிறப்புமிக்க தேரை பாதுகாத்திட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி
Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி
இடைக்காட்டூர் கிராமத்தில் கொடூர தாக்குதல்: விளம்பரப் பணிகளில் மும்முரம் காட்டும் திமுக - தினகரன் கண்டனம்
இடைக்காட்டூர் கிராமத்தில் கொடூர தாக்குதல்: விளம்பரப் பணிகளில் மும்முரம் காட்டும் திமுக - தினகரன் கண்டனம்
Anbumani : ’மாணவர்களுக்கு சான்று கிடைக்கல’ திமுக அரசுக்கு அக்கறை இல்லையா?- அன்புமணி சரமாரி கேள்வி
'திமுக அரசுக்கு மாணவர்கள் மீது அக்கறை இல்லையா?’ அன்புமணி கேள்வி..!
ஹோலி கொண்டாட்டம்.. பேரன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய பாட்டி!
ஹோலி கொண்டாட்டம்.. பேரன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய பாட்டி!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Embed widget