மேலும் அறிய

Thiruvarur : மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..

தேரோட்டதிற்கு பிறகு அம்பாள் தேரோட்டத்திற்காக 4 மாதங்கள் கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுகிறது. இதனால் மழையில் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.  

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது. ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டது, அதன்படி கடந்த 2019 ஆண்டு ஆழத்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.


Thiruvarur : மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்ட விழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி ஆழித்தேரின் கூரைகள் பிரிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி, தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடைபெற்றது. தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடைபெற்றது. இதனையடுத்து ஆடிப்பூர விழா அம்பாள் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் ஆழித்தேரை கடந்து செல்ல வேண்டும்.

இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து செல்லும்போது இடையூராக அமையும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் லேசாக உரசினால், கண்ணாடி சேதமடையும் நிலை உள்ளது. இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதிக்காக ஆழித்தேருக்கு தற்காலிக இரும்பு தகடுகளால் மூடப்பட்டது. இதனையடுத்து ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி தற்காலிக கூரை பிரிக்கப்பட்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கியது.


Thiruvarur : மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..

சுமார் 2 மாதங்கள் ஆன நிலையில் இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதில் மேற்பகுதி கூரை போடப்பட்ட நிலையில் நான்கு புறங்களில் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் சரிவர கண்ணாடி கூண்டுகள் பொறுத்தாததால் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ரூ.40 லட்சம் மதிப்பில் அழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேரோட்டத்திற்கு கண்ணாடி கூண்டு பிரிக்கப்பட்ட நிலையில், தேரோட்டதிற்கு பிறகு அம்பாள் தேரோட்டத்திற்காக 4 மாதங்கள் கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த கண்ணாடி கூண்டு ஆழித்தேருக்கு ஆண்டிற்கு 5 மாதங்கள் கூட பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த கண்ணாடி கூண்டு அமைப்பதில் சிரமங்கள் இருந்து வருகிறது. பிரதான சாலை ஆழித்தேர் உள்ளதாலும், கண்ணாடி கூண்டிற்கான வடிவமைப்பு சரிவர திட்டமிடப்படவில்லை. இதனால் கண்ணாடி கூண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியாத நிலை இருஎனவே வரலாற்று சிறப்புமிக்க தேரை பாதுகாத்திட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget