மேலும் அறிய

Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு: அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி

வருவாய்த்துறையினரை அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் சிறப்புப் பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் பத்தாம் நாளாக இன்றும் தொடரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேச திமுக அரசு இன்றுவரை முன்வரவில்லை.

திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இந்தப் போராட்டத்தால் தேவையான சான்றுகள் கிடைக்காமல் மாணவர்களும், உழவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய்த்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

வருவாய்த்துறையினரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதுவரை வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தர வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் காலமுறை ஊதியம், குத்தகை முறை நியமனங்கள் கூடாது என்பன உள்ளிட்ட வருவாய்த்துறை பணியாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை.

அரசு எந்திரம் முடங்கும்

அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழ்பவர்களும், பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்குபவர்களும் வருவாய்த் துறையினர்தான். அவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அரசு எந்திரம் முடங்குவதுடன், பொதுமக்களுக்கு எந்த சேவையும் கிடைக்காது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வருவாய்த்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள 42,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவர்களை அழைத்து அரசு பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை திமுக அரசு செய்யவில்லை. வருவாய்த்துறையினரின் போராட்டத்தால் மாணவர்களுக்கும், உழவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கடந்த 28ஆம் தேதி விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதா?

அப்போதும் திமுக அரசு விழித்துக் கொள்ளவில்லை. அதனால், போராட்டத்தைத் தீவிரப்படுத்திய வருவாய்த்துறை பணியாளர்கள் நேற்று முதல் சாலை மறியல் போராட்டத்தையும் நடத்தத் தொடங்கியுள்ளனர். அப்போதும் அவர்களை அழைத்துப்  பேசாத திமுக அரசு, அவர்களை கைது செய்வது உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

வருவாய்த் துறையினரின் போராட்டத்திற்கு திமுக அரசு தீர்வு காணாததால் மாணவர்களுக்கும், உழவர் பெருமக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 8ஆம் தேதி கடைசி நாளாகும்.

இன்னும் வழங்கப்படவில்லை

அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கும் தேவையான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை வருவாய்த்துறையினர் தான் வழங்க வேண்டும். இதற்காக பல நாள்களுக்கு முன்பே அவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும், வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அந்தச் சான்றிதழ்கள் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

அதேபோல், உழவர்கள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் போது, தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தான் அந்த நெல் விளைவிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான அடங்கல் ஆவணத்தை  கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்றுத்  தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகளின் போராட்டத்தால் இந்த சான்றிதழ்களை உழவர்கள் தாக்கல் செய்ய முடியாததால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 10 ஆயிரம் மூட்டைகள் வீதம் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால், இவை குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டத்தை திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

வருவாய்த்துறை பணியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை திமுக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இக்கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வருவாய்த்துறை பணியாளர்களுடன் அத்துறையின் அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் மற்றும் துறையின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். அப்போது இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட ஆட்சியாளர்கள், இப்போது அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது அநீதியானது.

நம்ப வைத்து ஏமாற்றுவதா?

திமுக ஆட்சியால் நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், யாருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றாத திமுக அரசு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற வெற்று முழக்கத்தை மட்டும் எழுப்பி வருகிறது. திமுக அரசு மக்களுக்கு மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கும் எதையும் செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது.

வருவாய்த்துறை பணியாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பது ஒருபுறமிருக்க, மாணவர்கள், உழவர்கள் ஆகியோரின் நலன்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, வருவாய்த்துறையினரை அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Exam Result Date: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எங்கு, எப்படி?
CBSE Exam Result Date: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எங்கு, எப்படி?
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs EPS: “அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
“அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
தமிழ்நாடு உள்துறை செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமனம் ஏன்.? பரபரப்பு தகவல்கள்...
தமிழ்நாடு உள்துறை செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமனம் ஏன்.? பரபரப்பு தகவல்கள்...
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
Zelensky Vs America: இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
Toyota Innova Hycross: 2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
Car Tips: பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
Embed widget