முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு - விழுப்புரம் நீதிமன்றத்தில் அதிமுக எம்பி சி.வி. சண்முகம் ஆஜர்
தமிழக அரசையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்தது.
![முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு - விழுப்புரம் நீதிமன்றத்தில் அதிமுக எம்பி சி.வி. சண்முகம் ஆஜர் Case of defamation of Chief Minister C.V. Shanmugam appier in Villupuram court TNN முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு - விழுப்புரம் நீதிமன்றத்தில் அதிமுக எம்பி சி.வி. சண்முகம் ஆஜர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/23/f068dccbb3dfb0ed90bb6251e4b4a6ec1721723325174113_original.avif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: தமிழக முதலமைச்சரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆஜராகியதை தொடர்ந்து வழக்கு விசாரனையை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் மே மாதம் 1 ஆம் தேதியும், ஆரோவில் 10 ஆம் தேதியும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும், தரக்குறைவாகவும் அவதூறாக விமர்சித்து பேசியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பரமணியம், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் ஏற்கனவே ஆறு முறைகளுக்கு மேல் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ஆஜராகிய நிலையில் மீண்டும் இன்று விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிவி சண்முகம் நேரில் ஆஜராகினார். அப்போது இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் மூலம் தடையானை பெற்றுள்ளதாக சிவி சண்முகம் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த போது அதற்கான ஆணை எங்களிடம் வரவில்லை என்பதால் பிராமண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என கூறி நீதிபதி ராதிகா வழக்கு விசாரனையை 18.08.2024 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)