மேலும் அறிய

திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த நிலையில்,  நேற்று முன்தினம் காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதற்கிடையில் சுங்கத்துறையில் டிரைவராக பணியாற்றி வரும் குமார் என்பவர் விமான நிலையத்தில் இருந்து வேகமாக வெளியேறினார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவரை சோதனை செய்ததில், அவரிடம் 1 கிலோ தங்கம் இருந்தது. அதனை அவர் வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். பின்னர் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த நடராஜன் (வயது 43) என்ற பயணி கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை டிரைவர் குமார் விமான நிலையத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வரும் பாதை வழியாக வெளியே கொண்டுவர உதவி செய்தது தெரியவந்தது.

சுங்கத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை அதிகாரிகள் சோதனை செய்வதில்லை. இதனை பயன்படுத்தி குமார் தங்கத்தை வெளியே கொண்டுவர முயற்சித்துள்ளார். மேலும் டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் தங்கத்தை பெறுவதற்காக விமான நிலைய வாகன நிறுத்தத்தில் காத்திருந்த புதுக்கோட்டையை சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை குமார் பலமுறை வெளியே கொண்டு வந்து கொடுத்ததாக தெரியவந்தது.


திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது

மேலும் சுங்கத்துறையின் உயர் அதிகாரிகள் மட்டுமே செல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை டிரைவர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் யாரேனும் தங்கம் கடத்தலுக்கு உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து இந்த கடத்தலில் ஈடுபட்ட சுங்கத்துறை டிரைவர் குமார், புதுக்கோட்டையை சேர்ந்த டேனியல், மைக்கேல், அறந்தாங்கியை சேர்ந்த நடராஜன் ஆகிய 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அதே நேரத்தில் குமார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 56 லட்சம் ஆகும். மேலும் கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. ஆகையால் சுங்கதுறை அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது திருச்சி விமானநிலையம் தங்கம் கடத்தும் கூடாரமாக மாறி- வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் இத்தகைய குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget