மேலும் அறிய

புதுக்கோட்டையில் 3,696 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியது - பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 696 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியது. பல்லவன் குளத்தில் தண்ணீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதற்கிடையே மழைக்கு முன்னதாக பல குளங்கள் 100 சதவீதம் நிரம்பி இருந்தன. அந்த குளங்களில் மேலும் தண்ணீர் சேர்ந்தால், அவற்றை பாதுகாப்பாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் கோட்டத்தில் 170 குளங்களில் நேற்று வரை 149 குளங்கள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. மேலும் 13 குளங்கள் 76 முதல் 99 சதவீதம் வரையும், 8 குளங்கள் 51 முதல் 75 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளன. இதேபோல் தெற்கு வெள்ளாறு கோட்டத்தில் 961 குளங்களில் 9 குளங்கள் 100 சதவீதமும், 54 குளங்கள் 76 முதல் 99 சதவீதம் வரையும், 110 குளங்கள் 51 முதல் 75 சதவீதம் வரையும், 355 குளங்கள் 26 முதல் 50 சதவீதம் வரையும், 433 குளங்கள் 1 முதல் 25 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளது.

மேலும் பேரூராட்சிகளில் உள்ள 62 குளங்களில் 99 முதல் 75 சதவீதம் வரை தலா ஒரு குளமும், 26 முதல் 50 சதவீதம் வரை 8 குளங்களும், 1 முதல் 25 சதவீதம் வரை 35 குளங்களும் நிரம்பி உள்ளன. 17 குளங்கள் தண்ணீரே இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதேபோல் ஊராட்சிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் 1,522 முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 2 ஆயிரத்து 15 ஊரணிகளும் முழுமையாக நிரம்பி காணப்படுகிறது.


புதுக்கோட்டையில் 3,696 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியது - பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை நகராட்சியில் 32 குளங்களில் பல்லவன் குளம் முழுமையாக நிரம்பி உள்ளன. 2 குளங்கள் 76 முதல் 99 சதவீதம் வரையும், 7 குளங்கள் 51 முதல் 75 சதவீதம் வரையும், 10 குளங்கள் 26 முதல் 50 சதவீதம் வரையும், 1 முதல் 25 சதவீதம் வரை 12 குளங்களும் நிரம்பி உள்ளன. அறந்தாங்கி நகராட்சியில் 7 குளங்களில் 76 முதல் 99 சதவீதம் வரை 4 குளங்களும், 51 முதல் 75 சதவீதம் வரை 3 குளங்களும் நிரம்பி உள்ளன. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 10 ஆயிரத்து 666 குளங்களில் 3 ஆயிரத்து 696 குளங்கள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. தொடர்ந்து மழை பெய்கையில் மற்ற குளங்களும் நிரம்பும் வகையில் உள்ளன. இதனால் நீர் நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


புதுக்கோட்டையில் 3,696 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியது - பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த நிலையில் பல்லவன் குளத்தில் தண்ணீர் நிரம்பிய நிலையில் மேலும் உபரிநீர் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் மழை அதிகமாக பெய்யும் போது பல்லவன் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகே உள்ள சாந்தநாத சாமி கோயிலுக்குள் புகுந்துவிடுவது உண்டு. மேலும் தண்ணீர் வெளியேறும் கால்வாய் வழியாக பூ மார்க்கெட்டிற்குள் பாய்ந்தோடும். இதனை தவிர்ப்பதற்காக பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பான முறையில் தண்ணீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பல்லவன்குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாரி வாய்க்கால்களில் இருந்து தண்ணீரை பிரித்து அனுப்பவும், கழிவுநீர் கலக்காமல் இருக்கவும் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தலைமையிலான அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறக்கூடிய பகுதியில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget