மேலும் அறிய

கரிகால் சோழனின் கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு

இந்த திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகத்தையே வியக்கவைத்த அணை கரிகால சோழனால் கட்டபட்ட கல்லணை ஆகும். தமிழரின் சிறப்பினை உலகத்திற்கு எடுத்துகாட்டிய  கல்லணையை நவீனபடுத்தும் பணியில்  தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி கல்லணை கால்வாய் நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் குறுவை சாகுபடி முடிந்தவுடன் பணிகள் தீவிரமாக நடைபெறும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள்னார்.

கல்லணை மற்றும் அதன் கால்வாய் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 1928ஆம் ஆண்டு வெட்டபட்ட கல்லணை கால்வாயில் 148 கி.மீ தொலைவுக்கு முதன்மை வழித்தடம் உள்ளது. இதில் 636 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிளை வாய்கால்களும், 694 நீர் பிடிப்பு பகுதிகளும் வெட்டப்பட்டுள்ளது. இதன்படி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக கடைமடை வரை சென்று சேரும். இதற்கிடையில் கால்வாய் கட்டி நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால் கரைகளில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து கல்லனை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


கரிகால் சோழனின் கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு

இதனைத் தொடர்ந்து கல்லணை கால்வாய் விரிவாக்குதல் மற்றும் புனரமைக்கும் திட்டமானது 6.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தயார் செய்யப்பட்டது. இதன்படி ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 2963 கோடி செலவில் கல்லணை கால்வாய் சீரமைக்கும் பணி முதல் கட்டமாக தொடங்கப்பட்டது. திருச்சி மண்டல நீர் வளத்துறையின் தலைமை பொறியாளர் கண்காணிப்பில் இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தில் 1232 கி.மீ நீளமுள்ள கல்லணை கால்வாய் வாயக்கால்களை அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற வகையில் சீரமைப்பது, புதிதாக 1,714 மதகுகளை திரும்ப கட்டுவது, 29 மதகுகள் சீரமைப்பது, 26 கால்வாய் பாலங்கள் திரும்ப கட்டுவது, 16 கால்வாய் பாலங்களை சீரமைப்பது, 24 நீரொழுங்கிகளை திரும்பக் கட்டும் பணி, ஒரு நீரொழுங்கி புதிதாக அமைக்கும் பணி, 20 பாலங்கள் திரும்ப கட்டும் பணி, 10 பாலங்களை சீரமைக்கும் பணி, 403 ஏரிகளை புனரமைக்கும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 5 தொகுதிப்புகளாக இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.


கரிகால் சோழனின் கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு

குறிப்பாக தற்போது திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பூதலூர், திருவெரும்பூர் வட்டங்களில் கல்லணை பிரதான வாய்க்காலில் 12.624 கி.மீ மற்றும் கிளை வாய்க்கால் ஆகிவற்றில் மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் கான்கீரிட் தளம் அமைத்தல், அட்டப்பன் பள்ளம் வடி குழாய் சீரமைத்தல், மணல் பொறி அமைத்தல் உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது வரை 25 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget