மேலும் அறிய

பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்

. நாங்க எல்லாம் 'பெரு'கனூர், பஞ்சப்பூர். பஞ்சப்பூதங்கள் மாதிரி வளர்ந்துகிட்டே இருப்போம். பஞ்சம் என்பதில் நல்ல விஷயத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் நயினார் நாகேந்திரன்.

பஞ்சப்பூதங்கள் போல் வளர்வோம்... வித்தியாசமான பதில் அளித்த பாஜக தலைவர்

தஞ்சாவூர்: வரவிருக்கிற தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும். நாங்கள் பஞ்சப்பூதங்கள் போன்று வளர்ந்து கொண்டே இருப்போம் என்று திருச்சி பஞ்சப்பூரில் மாநாடு பகுதிக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருச்சி பஞ்சப்பூரில் நடந்த என்டிஏ கூட்டணி மாநாட்டில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

நேற்று பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி, பஞ்சப்பூர் பகுதிக்கு வருகை தந்து 5,000 கோடி ரூபாய்க்கு மேலான நலத்திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதே வேளையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகவும் பங்கேற்று, வரவிருக்கிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு உரையாற்றினார்.

அதிமுகவின் அனைத்து தலைவர்களும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அனைவரும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, தோழமைக் கட்சிகள் என அனைவரும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முடித்துள்ளனர். இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும்.

திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் மட்டும் இல்ல, மக்களோடு சேர்ந்து இந்த மாநாடு அமையும். திமுக மாநாடு நடத்திய ஊர் பெயரை பார்த்தீங்கன்னா 'சிறு'கனூர். அது சிறுகிகிட்டே போகும். நாங்க எல்லாம் 'பெரு'கனூர், பஞ்சப்பூர். பஞ்சப்பூதங்கள் மாதிரி வளர்ந்துகிட்டே இருப்போம். பஞ்சம் என்பதில் நல்ல விஷயத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு வித்தியாசமான பதிலை அளித்தார் அவர்.

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு... எந்த ஒரு கூட்டணியும் வலுப்படுவது சிறப்பாக இருக்கும் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். எந்த ஒரு கூட்டணியும், மேலும் கட்சிகள் வந்து பலப்படுவது ஒரு சிறப்பான விஷயம்.

திமுகவில் போற வரவங்கள எல்லாம், ரோட்டுல போறவங்க, தபால் போட வந்தவங்க, ஸ்விக்கியில் கொண்டு வந்து கொடுக்க வந்தவங்க என எல்லாரையும் கட்சியில் சேர்த்து அவங்களுக்கெல்லாம் சீட் கொடுக்குறாங்களே கூட்டணியில் சேர்த்து. அதே மாதிரி புரட்சித் தலைவி அம்மா காலத்துல மந்திரி பதவிகள், பொருளாதார வளர்ச்சிகளை பெற்றவர்கள் எல்லாம், காலாவதியானவங்களை எல்லாம் திமுகவில் சேர்த்து சீட் கொடுக்கிறார்கள். அவர்களே அப்படி செய்யும்பொழுது, எங்கள் கூட்டணி வலுப்படுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.

இது போன்ற தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். அது ஒரு விஷயம்தான். மற்றபடி ஒரே கொள்கை இருக்கிறவங்க எல்லாம் ஒரே கட்சியாகவே இருந்திருப்பார்களே. அப்புறம் எப்படி காங்கிரஸ்-ம், கம்யூனிஸ்ட்-ம் சேர்கிறார்கள் கூட்டணியில்? அது மாதிரிதான் இதுவும்.

அதிகாரத்தை பகிர்ந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு... நான் எங்க கூட்டணி இன்னும் பலப்பட வேண்டும் என்ற விருப்பத்தில் சொல்கிறேன். மற்ற விஷயங்களை அண்ணன் ஈ.பி.எஸ் அவர்களும், பாஜகவின் டெல்லி தலைவர்களும் பார்த்துக் கொள்வார்கள். எங்கள் விருப்பம், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். அதேநேரத்தில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று சொல்கிறேன்.

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரே சொல்லியிருக்கிறார்கள். போனமுறை ‘அதிமுக கூட்டணி வெற்றி பெறும்’ என்று சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை (27-05-2026) பவர்கட் அறிவிப்பு! - எங்கெல்லாம் கரண்ட் இருக்காது?
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை (27-05-2026) பவர்கட் அறிவிப்பு! - எங்கெல்லாம் கரண்ட் இருக்காது?
திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்
திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்
Bengaluru-Trichy Travel : ரூட் கிளியரா இருக்கு பாஸ்! பெங்களூரு - திருச்சி பயணத்தை செம ஈஸியாக்கும் 'சீக்ரெட்' வழித்தடங்கள்!
Bengaluru-Trichy Travel : ரூட் கிளியரா இருக்கு பாஸ்! பெங்களூரு - திருச்சி பயணத்தை செம ஈஸியாக்கும் 'சீக்ரெட்' வழித்தடங்கள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
Embed widget