மேலும் அறிய

விதையே விதைக்காமல் மீண்டும் முளைத்த மாப்பிள்ளை சம்பா - இன்னும் 5 மாதங்களில் அறுவடைக்கு தயார்

’’விவசாயி பொன்முடி கடந்த பிப்ரவரி மாதத்தில் மாப்பிள்ளை சம்பா ரகத்தை அறுவடை செய்து வயலை காலியாக விட்டிருந்த நிலையில் தொடர் மழை காரணமாக பயிர்கள் மீண்டும் முளைக்கத் தொடங்கி உள்ளது’’

திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூரில் இயற்கை விவசாயி பொன்முடி கடந்த ஆண்டு  இரண்டு மா விவசாய நிலத்தில் மாப்பிள்ளை சம்பா வகை நெல்லை இயற்கை முறையில் நேரடி விதைப்பு செய்தார். 160 நாட்களில் 6 அடி உயரம் வளர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மாப்பிள்ளை சம்பா அறுவடைக்கு தயாரான போது 8 மூட்டை விளைச்சல் கிடைத்தது. இந்த நிலையில் விவசாயி பொன்முடி தனது நிலத்தில் எந்த விதைப்பையும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக மாப்பிள்ளை சம்பா மீண்டும் முளைக்கத் தொடங்கி அறுவடைக்கு தயாராகி வருகிறது. 

விதையே விதைக்காமல் மீண்டும் முளைத்த மாப்பிள்ளை சம்பா - இன்னும் 5 மாதங்களில் அறுவடைக்கு தயார்
 
இதுகுறித்து இயற்கை விவசாயி பொன்முடி கூறுகையில், கடந்த ஆண்டு  இதே இடத்தில் இரண்டு மா நிலத்தில்  மாப்பிள்ளை சம்பா நேரடி விதைப்பு சாகுபடி செய்து கடந்த பிப்ரவரி மாதம் அறுவடை செய்தேன். இந்த ஆண்டு சாகுபடி செய்வதற்காக சென்று பார்த்தபோது மழையினால்  மீண்டும் பயிர்கள் முளைத்து செழித்து வளர்ந்துள்ளது அதனால் அந்த பயிருக்கு இயற்கை உரமிட்டு  இரண்டாவது போகமாக இன்னும் ஐந்து மாதங்களில் அறுவடை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
 
மாப்பிள்ளை சம்பா சிறப்புகள்: சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா ரக அரிசியில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது.  இந்தவகை நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்கவும், உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு. 

விதையே விதைக்காமல் மீண்டும் முளைத்த மாப்பிள்ளை சம்பா - இன்னும் 5 மாதங்களில் அறுவடைக்கு தயார்
 
தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்த இயற்கை நெல் மீட்ப்பாளர் ஜெயராமன் ஆகியோர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தில் உற்பத்தி ஆகும் நெல்களை தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக கொள்முதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு அரசு கண்டிப்பாக விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் பணியை தொடங்க வில்லை உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நெல்மணிகளை கொள்முதல் செய்யவேண்டும் என அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சாம்பாரில் பல்லி.. மருத்துவமனையில் மாணவர்கள்.. ஜாலியா இருக்காங்க என பதிவிட்ட வைஷ்ணவி!
சாம்பாரில் பல்லி.. மருத்துவமனையில் மாணவர்கள்.. ஜாலியா இருக்காங்க என பதிவிட்ட வைஷ்ணவி!
ஆஹா... மதுரை விமான நிலையம் பன்னாட்டு அந்தஸ்து - புதிய திட்டங்கள், பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
ஆஹா... மதுரை விமான நிலையம் பன்னாட்டு அந்தஸ்து - புதிய திட்டங்கள், பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !
Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Embed widget