Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மதுரையில் தேனீர் கடைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். - சங்க நிர்வாகிகள் பேட்டி

தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மதுரையில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதே போல் மதுரையில் முக்கிய உணவுப் பொருளாக பார்க்கப்படும் டீ - காபி கடைகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டீ - காபி சங்கத்தினர் பேட்டி
மதுரையில் மிகப்பெரிய வணிகமாக இருக்கும் டீ & காபி விற்பனையின் சிரமம் குறித்து மதுரை காபி, டீ வர்த்த சங்கம் துணைச் செயலாளர் எம்.கே செல்வகுமார் நம்மிடம் தெரிவிக்கையில்..," உணவுப் பொருட்களில் அடிப்படையானது டீ காபி தான் ஏனெனில் பொதுமக்கள் காலை எழுந்தவுடன் டீ காபி கடைகள் எல்லாம் தேடுவார்கள் குறிப்பாக மதுரையில் எல்லா தெருக்களிலும் டீ காபி கடைகள் தான் அதிகமாக இருக்கும் அவர்களின் வேலையை டீ காபி கடைகளில் இருந்து தான் துவங்கும். இந்த சூழ்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எங்களை டீக்கடை உரிமையாளர்களை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நேற்று வணிக சிலிண்டர் 1980 ரூபாய்க்கு தருவோம் என இருந்த சிலிண்டர் 2200 க்கு தான் தருவோம் என தெரிவித்தார்கள் சரி கொடுங்கள் என கேட்டபோதும் கூட சிலிண்டர் கிடைக்கவில்லை. கூடுதல் விலைக்கு கூட சிலிண்டர் கிடைக்காததால் மிகவும் சிரமாக உள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் உடனடியாக சரி செய்து வணிகர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் இதையினை சரி செய்யவில்லை என்றால் மிகப்பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும். நேரடியாக மறைமுகமாக பலரும் இதனால் பாதிப்படைவார்கள்" எனவும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















