மேலும் அறிய

மயிலாடுதுறை: மூன்றடியில் காய்த்து குலுங்கும் தென்னை மரம்! ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

மயிலாடுதுறை அருகே மூன்று அடி உயரத்தில் தென்னை மரம் காய்த்து குலுங்கி வருகிறது.

நம் வாழ்வில் பிரிக்கமுடியாத வகையில் பிணைந்துவிட்ட மரம், தென்னை. தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிக பழங்காலத்தில் இருந்தே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். மலேசிய பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும், மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்கு தீவுக்கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகளில் தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 லட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி தேங்காய்கள் விளைகின்றன.


மயிலாடுதுறை: மூன்றடியில் காய்த்து குலுங்கும் தென்னை மரம்! ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

நெட்டை தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7-வது ஆண்டில் இருந்து 10-வது ஆண்டுக்குள் காய்க்க தொடங்கும். குட்டை வகைகள், நட்டு 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் காய்க்க தொடங்கும். இவற்றின் ஆயுள் 30 முதல் 35 ஆண்டுகள். தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்கு பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணெய் கொடுக்கிறது. தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக, மனிதனுக்கு இயற்கையின் வரம் தென்னை. இத்தகைய சிறப்பு மிக்க தென்னை மயிலாடுதுறை அருகே மூன்று அடி உயரத்தில் காய்த்து குலுங்குகிறது. 


மயிலாடுதுறை: மூன்றடியில் காய்த்து குலுங்கும் தென்னை மரம்! ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சிவக்குமார். இவர் தனது வீட்டின் வாசலில் 12 வருடங்களுக்கு முன்பு வைத்த தென்னைமரம் 22 அடி உயரம் வளர்ந்து 5 வருடங்களாக நன்றாக காய்த்து குலுங்கியது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இந்த மரத்தில் காய்த்த தேங்காயை எடுத்து வீட்டின் கொல்லையில் பதியம் செய்து உள்ளார். வாசலில் இருந்த தாய் மரம் நன்றாக காய்த்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போது இடி தாக்கியதில் கருகி மரம் பட்டுப்போய்விட்டது. இதனால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் தான் பதியம் போட்டு வைத்த மரம் 2 அடி உயரத்தில் வளர்ந்த நிலையில் தேங்காய் காய்க்க தொடங்கியது கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மயிலாடுதுறை: மூன்றடியில் காய்த்து குலுங்கும் தென்னை மரம்! ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

சிறிய மரத்தில் தேங்காய்  காய்க்கும் செய்தியறிந்து கிராமமக்கள் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் அந்த மரத்தை சென்று பார்த்து வருகின்றனர். தற்பொது 3 அடி உயரமுள்ள இந்த தென்னை மரத்தில் குலைகுலையாய் தேங்காய் காய்த்து தொங்குகிறது. இந்த மரத்தில் உள்ள தேங்காய், இளநீரை பறித்து கோயில் அபிஷேகத்திற்கு கொடுப்பதாகவும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட தேங்காய் பறித்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறும் சிவக்குமார் குலைகுலையாய் காய்க்கும் தென்னை மரத்தை பார்க்க வரும் கிராமமக்களிடம் டேப்பை வைத்து அளந்து காண்பித்து வருகிறார். சிறிய மரத்தில் காய்க்கும் தேங்காய் பெரிய மரத்தில் காய்க்கும் தேங்காய் போன்று உள்ளதால் இளநீர் தண்ணி அதிகமாக உள்ளதால் உற்சாகத்துடன் மரத்தை பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
"தூய்மை தஞ்சை" எனும் உன்னத சுகாதார இயக்கம்... தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி தொடக்கி வைத்தார்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget