மேலும் அறிய

மயிலாடுதுறை: மூன்றடியில் காய்த்து குலுங்கும் தென்னை மரம்! ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

மயிலாடுதுறை அருகே மூன்று அடி உயரத்தில் தென்னை மரம் காய்த்து குலுங்கி வருகிறது.

நம் வாழ்வில் பிரிக்கமுடியாத வகையில் பிணைந்துவிட்ட மரம், தென்னை. தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிக பழங்காலத்தில் இருந்தே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். மலேசிய பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும், மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்கு தீவுக்கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகளில் தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 லட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி தேங்காய்கள் விளைகின்றன.


மயிலாடுதுறை: மூன்றடியில் காய்த்து குலுங்கும் தென்னை மரம்! ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

நெட்டை தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7-வது ஆண்டில் இருந்து 10-வது ஆண்டுக்குள் காய்க்க தொடங்கும். குட்டை வகைகள், நட்டு 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் காய்க்க தொடங்கும். இவற்றின் ஆயுள் 30 முதல் 35 ஆண்டுகள். தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்கு பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணெய் கொடுக்கிறது. தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக, மனிதனுக்கு இயற்கையின் வரம் தென்னை. இத்தகைய சிறப்பு மிக்க தென்னை மயிலாடுதுறை அருகே மூன்று அடி உயரத்தில் காய்த்து குலுங்குகிறது. 


மயிலாடுதுறை: மூன்றடியில் காய்த்து குலுங்கும் தென்னை மரம்! ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சிவக்குமார். இவர் தனது வீட்டின் வாசலில் 12 வருடங்களுக்கு முன்பு வைத்த தென்னைமரம் 22 அடி உயரம் வளர்ந்து 5 வருடங்களாக நன்றாக காய்த்து குலுங்கியது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இந்த மரத்தில் காய்த்த தேங்காயை எடுத்து வீட்டின் கொல்லையில் பதியம் செய்து உள்ளார். வாசலில் இருந்த தாய் மரம் நன்றாக காய்த்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போது இடி தாக்கியதில் கருகி மரம் பட்டுப்போய்விட்டது. இதனால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் தான் பதியம் போட்டு வைத்த மரம் 2 அடி உயரத்தில் வளர்ந்த நிலையில் தேங்காய் காய்க்க தொடங்கியது கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மயிலாடுதுறை: மூன்றடியில் காய்த்து குலுங்கும் தென்னை மரம்! ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

சிறிய மரத்தில் தேங்காய்  காய்க்கும் செய்தியறிந்து கிராமமக்கள் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் அந்த மரத்தை சென்று பார்த்து வருகின்றனர். தற்பொது 3 அடி உயரமுள்ள இந்த தென்னை மரத்தில் குலைகுலையாய் தேங்காய் காய்த்து தொங்குகிறது. இந்த மரத்தில் உள்ள தேங்காய், இளநீரை பறித்து கோயில் அபிஷேகத்திற்கு கொடுப்பதாகவும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட தேங்காய் பறித்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறும் சிவக்குமார் குலைகுலையாய் காய்க்கும் தென்னை மரத்தை பார்க்க வரும் கிராமமக்களிடம் டேப்பை வைத்து அளந்து காண்பித்து வருகிறார். சிறிய மரத்தில் காய்க்கும் தேங்காய் பெரிய மரத்தில் காய்க்கும் தேங்காய் போன்று உள்ளதால் இளநீர் தண்ணி அதிகமாக உள்ளதால் உற்சாகத்துடன் மரத்தை பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget