மேலும் அறிய

காப்பீடு தொகை வந்தவுடன் பணத்தை கொடுக்க மறுக்கும் தனியார் மருத்துவமனை - ஆட்சியரிடம் பெண் புகார்

தாங்கள் ஏற்கனவே பணம் கட்டிய நிலையில் காப்பீட்டு தொகையை தங்களுக்கு தர வேண்டும் என கேட்டதற்கு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை எனக் கூறி அலைக்கழித்துள்ளனர்.

காப்பீட்டு தொகை வரும் முன்பே பணத்தை வாங்கி கொண்டு காப்பீடு தொகை வந்தவுடன் பணத்தை கொடுக்க மறுக்கும் தனியார் மருத்துவமனை. கையில் கட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் புகார் கொடுத்த பெண். 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடியை சேர்ந்தவர் குமரகுரு இவரது மனைவி கஸ்தூரி. குமரகுரு அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் குமரகுருவுக்கு தினசரி அவரது மனைவி கஸ்தூரி தனது வீட்டில் இருந்து சன்னாநல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று மதிய சாப்பாடு கொடுத்து வருவார். இந்தநிலையில் கடந்த 21ம் தேதி மதிய சாப்பாடு கொடுத்து விட்டு வந்து கொண்டிருந்த போது பின்புறம் வந்த இருசக்கர வாகனம் அவரது பைக் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி அவரது வலது கை முறிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 23ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து திருவாரூரில் உள்ள டி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கஸ்தூரி அனுமதிக்கப்பட்டார். அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு உள்ளதால் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு தனியார் மருத்துவமனையிடம் விண்ணப்பித்தார். 


காப்பீடு தொகை வந்தவுடன் பணத்தை கொடுக்க மறுக்கும் தனியார் மருத்துவமனை - ஆட்சியரிடம் பெண் புகார்

காப்பீடுத் தொகை வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால், மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி முன் தொகையாக  45 ஆயிரம் ரூபாய்  செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அறை வாடகை மருந்து மாத்திரை என 20,000 ரூபாய் கட்டியுள்ளனர். இதில் 20,000 ரூபாய்க்கு மட்டும் மருத்துவமனை தரப்பில் பில் கொடுத்ததாக கூறப்படுகிறது. மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி இரவு 8 மணிக்கு ரூ.67,140 காப்பீடு நிறுவனத்தில் இருந்து டி.எம்சி மருத்துவமனைக்கு செலவுத் தொகையாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தாங்கள் ஏற்கனவே பணம் கட்டிய நிலையில் காப்பீட்டு தொகையை தங்களுக்கு தர வேண்டும் என கேட்டதற்கு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை எனக் கூறி அலைக்கழித்துள்ளனர். வேண்டுமென்றால் 18,000 ரூபாயை வாங்கி கொண்டு பிரச்சனை செய்யாமல் சென்று விடுமாறு பேரம் பேசியதாக குமரக்குரு குற்றம் சாட்டுகிறார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை நடத்தி உரிய தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என விபத்துக்குள்ளான கஸ்தூரி தனது கணவருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து மருத்துவ காப்பீட்டு துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, அரசு ஊழியர்களுக்கு அரசின் சார்பில் அவர்களின் ஊதியத்திலிருந்து மருத்துவ காப்பீட்டுக்கு என பணம் பிடித்தம் செய்யப்பட்டு அவர்களுடைய குடும்பத்தில் யாரேனும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் அந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு அதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது அந்த மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு சிகிச்சை பெற்றால் அதற்குரிய பணத்தை பெறக்கூடாது அப்படி பெற்றால் அது தவறு. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலச்சந்திரனிடம் கேட்ட பொழுது, பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் மனுவாக கொடுத்துள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனை சார்பில் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget