மேலும் அறிய

திருவாரூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

தன் வீட்டில் உள்ளவர்  உயிரிழந்து விட்டார் என்ற துக்க நிலையிலும் அவருடைய உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு கொடுத்து பலரை வாழ வைக்கும் அவரது குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசல் அண்ணாமன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (38). இவரது மனைவி சோபியா (32 ). இவருக்கு மூன்று வயதிலும் 10 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெயசீலன் திருவாரூர் அருகே புலிவலத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு கடையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது பின்னவாசல் என்ற இடத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி படுகாயம் அடைந்தார். 
 
அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயசீலன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் மூளை சாவு அடைந்து விட்டதாக  மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்ததனர்.
 
அதன் பின்னர் குடும்பத்தாரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதற்காக திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் உரிய சான்றுகள் பெறப்பட்டது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நேரில் சென்று சென்னை, திருச்சி மற்றும் இதர மருத்துவமனைகளில் இருந்து வந்திருந்த மருத்துவ குழுவினருடன் இணைந்து ஜெயசீலனின் கல்லீரல், இதயம், கண், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகளை பிரித்து எடுத்து உரிய மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் வீட்டில் உள்ளவர்  உயிரிழந்து விட்டார் என்ற துக்க நிலையிலும் அவருடைய உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு கொடுத்து பலரை வாழ வைக்கும் அவரது குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
 
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயிலாடுதுறை சேர்ந்த நபர் ஒருவர் சாலை விபத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார். இந்த நிலையில் அவருடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் முன்வந்த நிலையில் மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் இருந்து மருத்துவர்கள் வருகை தந்து அவருடைய இதயம், கண், சிறுநீரகம் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்து பல நபர்களை இன்று வாழவைத்து வருகின்றார். இதேபோன்று உடல் உறுப்புகளை தானம் செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரையும் மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டி வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு நபர் சாலை விபத்தில் மூளைச்சாவடந்த நிலையில் அவருடைய உடல் உறுப்புகள் தானம் கொடுத்திருப்பது சக மனிதர்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget