மேலும் அறிய

திருவாரூர்: ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் பாலம் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை

கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த ஒற்றை பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான சிமெண்ட் பாலம் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓடம்போக்கி ஆறு இருக்கிறது. மடப்புரம் என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே இந்த ஒற்றை பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருவாரூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட வெளியூருக்கு சென்று வருபவர்கள் மடப்புரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இந்த ஒற்றை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பாலம் மூலம் இரு சக்கர வாகனம் உட்பட எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த பாலம் இருந்து வருகிறது.

திருவாரூர்: ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் பாலம் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை
 
திருவாரூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒற்றை பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக கும்பகோணம் சாலைக்கு செல்வதற்கு இந்த பகுதியை கடந்து சென்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சென்று விடலாம். அதே நேரத்தில் தற்போது பாலம் வசதி இல்லாத காரணத்தினால் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த ஒற்றை பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான சிமெண்ட் பாலம் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆகையால் தினமும் உயிருக்கு ஆபத்தான பயணத்தை மாணவர்களும் பொதுமக்களும் மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மரண பாலம் உள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்து இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் பாலம் மரண பாலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர்: ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் பாலம் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை
 
குறிப்பாக இந்த ரயில்வே மேம்பாலமாக இருந்து வருவதால் இந்த பாலத்தை கடந்து தான் தினமும் திருவிக அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் வேலைக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 100 அடி தூரத்தில் செங்குத்தாக உள்ள இந்த பாலத்தில் பொது மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பல ஆண்டுகளாக இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுவரை இதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கும்பொழுது ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என காரணம் கூறுகிறார்களே தவிர புதிய பாலம் கட்டுவதற்கான பணி இதுவரை தொடங்காமல் இருப்பதால் தினமும் அச்சத்துடன் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். உடனடியாக திருவாரூர் நகர்ப்பகுதிகளில் உள்ள இந்த இரண்டு முக்கியமான பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget