மேலும் அறிய

திருவாரூர்: ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் பாலம் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை

கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த ஒற்றை பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான சிமெண்ட் பாலம் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓடம்போக்கி ஆறு இருக்கிறது. மடப்புரம் என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே இந்த ஒற்றை பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருவாரூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட வெளியூருக்கு சென்று வருபவர்கள் மடப்புரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இந்த ஒற்றை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பாலம் மூலம் இரு சக்கர வாகனம் உட்பட எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த பாலம் இருந்து வருகிறது.

திருவாரூர்: ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் பாலம் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை
 
திருவாரூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒற்றை பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக கும்பகோணம் சாலைக்கு செல்வதற்கு இந்த பகுதியை கடந்து சென்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சென்று விடலாம். அதே நேரத்தில் தற்போது பாலம் வசதி இல்லாத காரணத்தினால் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த ஒற்றை பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான சிமெண்ட் பாலம் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆகையால் தினமும் உயிருக்கு ஆபத்தான பயணத்தை மாணவர்களும் பொதுமக்களும் மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மரண பாலம் உள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்து இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் பாலம் மரண பாலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர்: ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் பாலம் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை
 
குறிப்பாக இந்த ரயில்வே மேம்பாலமாக இருந்து வருவதால் இந்த பாலத்தை கடந்து தான் தினமும் திருவிக அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் வேலைக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 100 அடி தூரத்தில் செங்குத்தாக உள்ள இந்த பாலத்தில் பொது மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பல ஆண்டுகளாக இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுவரை இதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கும்பொழுது ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என காரணம் கூறுகிறார்களே தவிர புதிய பாலம் கட்டுவதற்கான பணி இதுவரை தொடங்காமல் இருப்பதால் தினமும் அச்சத்துடன் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். உடனடியாக திருவாரூர் நகர்ப்பகுதிகளில் உள்ள இந்த இரண்டு முக்கியமான பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பின்னலாடை நகரான திருப்பூரில் சேவையை விரிவுபடுத்தும் KVB: புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்
பின்னலாடை நகரான திருப்பூரில் சேவையை விரிவுபடுத்தும் KVB: புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்
“ஐஸ் க்ரீம் சாப்பிடுவர்களே
“ஐஸ் க்ரீம் சாப்பிடுவர்களே" இது உங்களுக்கான எச்சரிக்கை...!
80 ஆண்டுகளுக்கு பின் அரியலூரில் ஆனந்த அலை… 5,000 பக்தர்கள் கலந்து கொண்ட தெப்ப உற்சவம்
80 ஆண்டுகளுக்கு பின் அரியலூரில் ஆனந்த அலை… 5,000 பக்தர்கள் கலந்து கொண்ட தெப்ப உற்சவம்
தென்னை மகசூல் மேம்பாட்டுக்கு வழிகாட்டி: விவசாயிகளுக்கு உதவும் ஆலோசனை!
தென்னை மகசூல் மேம்பாட்டுக்கு வழிகாட்டி: விவசாயிகளுக்கு உதவும் ஆலோசனை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Congress:
Congress: "DMK-வுக்கு டஃப் கொடுக்கணும், செல்வப்பெருந்தை மாதிரி வேண்டாம்" புதிய தலைவரை தேடும் காங்கிரஸ்
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
Puducherry liquor : புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா.? கூடாதா.? திடீர் ட்விஸ்ட் கொடுத்த போலீஸ்
புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா.? கூடாதா.? திடீர் ட்விஸ்ட் கொடுத்த போலீஸ்
ஜனநாயகனால் சிறைக்கு சென்ற தேர்தல் ஊழியர்.! வாக்கு இயந்திர அறையில் சிக்கிய நபர்- நடந்தது என்ன.?
ஜனநாயகனால் சிறைக்கு சென்ற தேர்தல் ஊழியர்.! வாக்கு இயந்திர அறையில் சிக்கிய நபர்- நடந்தது என்ன.?
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
Embed widget