மேலும் அறிய

திருவாரூர்: ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் பாலம் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை

கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த ஒற்றை பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான சிமெண்ட் பாலம் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓடம்போக்கி ஆறு இருக்கிறது. மடப்புரம் என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே இந்த ஒற்றை பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருவாரூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட வெளியூருக்கு சென்று வருபவர்கள் மடப்புரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இந்த ஒற்றை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பாலம் மூலம் இரு சக்கர வாகனம் உட்பட எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த பாலம் இருந்து வருகிறது.

திருவாரூர்: ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் பாலம் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை
 
திருவாரூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒற்றை பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக கும்பகோணம் சாலைக்கு செல்வதற்கு இந்த பகுதியை கடந்து சென்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சென்று விடலாம். அதே நேரத்தில் தற்போது பாலம் வசதி இல்லாத காரணத்தினால் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த ஒற்றை பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான சிமெண்ட் பாலம் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆகையால் தினமும் உயிருக்கு ஆபத்தான பயணத்தை மாணவர்களும் பொதுமக்களும் மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மரண பாலம் உள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்து இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் பாலம் மரண பாலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர்: ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் பாலம் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை
 
குறிப்பாக இந்த ரயில்வே மேம்பாலமாக இருந்து வருவதால் இந்த பாலத்தை கடந்து தான் தினமும் திருவிக அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் வேலைக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 100 அடி தூரத்தில் செங்குத்தாக உள்ள இந்த பாலத்தில் பொது மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பல ஆண்டுகளாக இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுவரை இதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கும்பொழுது ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என காரணம் கூறுகிறார்களே தவிர புதிய பாலம் கட்டுவதற்கான பணி இதுவரை தொடங்காமல் இருப்பதால் தினமும் அச்சத்துடன் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். உடனடியாக திருவாரூர் நகர்ப்பகுதிகளில் உள்ள இந்த இரண்டு முக்கியமான பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Nagappttinam power cut:  நாகப்பட்டினம் மக்கள் கவனத்திற்கு - நாளை (20-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
Nagappttinam power cut:  நாகப்பட்டினம் மக்கள் கவனத்திற்கு - நாளை (20-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
ABP Nadu Impact: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! வாகன ஓட்டிகள் நிம்மதி
ABP Nadu Impact: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! வாகன ஓட்டிகள் நிம்மதி
மும்முனை மின்சார தட்டுப்பாடு: ஏக்கருக்கு ரூ.22,000 நஷ்டமடையும் அபாயத்தில் டெல்டா விவசாயிகள்
மும்முனை மின்சார தட்டுப்பாடு: ஏக்கருக்கு ரூ.22,000 நஷ்டமடையும் அபாயத்தில் டெல்டா விவசாயிகள்
உலகத்தமிழ் மாநாட்டு அடையாளம்: தஞ்சை புதிய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் நிறுத்தமா?
உலகத்தமிழ் மாநாட்டு அடையாளம்: தஞ்சை புதிய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் நிறுத்தமா?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Today: காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
Top 10 News Headlines: தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Tamilnadu Roundup: செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Embed widget