மேலும் அறிய

திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புதிய பேருந்து நிலையம் விரைவாக செல்வதற்கு பழுதடைந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

திருவாரூரில் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள ஆபத்தான மடப்புரம் பாலத்தை சீரமைத்து விரிவுப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்கிற இடத்தில் ஒடம்போக்கியாற்றின் குறுக்கே ஒற்றை வழி சிறிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தினை மோட்டார் சைக்கிள், சைக்கிள், நடந்து செல்பவர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மட்டுமே பயன்படுத்தும் அளவிற்கு குறுகிய பாலமாக அந்த பாலம் உள்ளது. இந்த பழமையான குறுகிய பாலத்தின் கைப்பிடிகள் இடிந்தும் பாலத்தின் தூண்கள் செல்லரித்தும் காணப்படுகிறது. மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பாலத்தின் இரு புறத்தின் தடுப்புகள் கட்டைகள் இடிந்து விழுந்து வருவதால் சாலைகளில் போக்குவரத்தினை சீரமைப்பதற்கு வைக்கப்படும் இரும்பு தடுப்புகளை கொண்டு அடைத்துள்ளனர். 


திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அவ்வப்போது தற்காலிக சீரமைப்பு பணிகளை செய்தாலும் பாலம் தொடர்ந்து வலுவிழந்து பலவீனப்பட்டு வருகிறது. இதனால் பாலத்தை மக்கள் அச்சத்துடன் கடந்து செல்லக் கூடிய சூழல் நிலவுகிறது. நாகை-தஞ்சை சாலையில் திருவாரூர் விளமல் கல்பாலம் அருகில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இதனால் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குறிப்பாக மடப்புரம் சித்தி விநாயகர் கோவில் தெரு காட்டுகாரத்தெரு பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய பேருந்து நிலையம் விரைவாக செல்வதற்கு பழுதடைந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற மடப்புரம் தெட்சிணாமூர்த்தி மடத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களும் குறுகிய பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.


திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மடப்புரம் அருகில் தான் தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்களும் எளிதாக வருவதற்கு பழுதடைந்த மடப்புரம் பாலத்தை கடந்து வருவது வழக்கம். இந்த பாலத்தில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருவது வழக்கம்.  இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலத்தை கடந்து செல்லும் போது எதிரில் சைக்கிளில் கூட வர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த பழுதடைந்த பாலம் இடிந்ததால் மடப்புரம் பகுதிக்கு வருபவர்கள் இங்கிருந்து வெளியில் செல்பவர்களும் வெகுதூரம் சுற்றி செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த பாலத்தை புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள ஆபத்தான பாலத்தை இடித்து அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் புதிதாக அகலமான பாலத்தை கட்டிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget