மேலும் அறிய

திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புதிய பேருந்து நிலையம் விரைவாக செல்வதற்கு பழுதடைந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

திருவாரூரில் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள ஆபத்தான மடப்புரம் பாலத்தை சீரமைத்து விரிவுப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்கிற இடத்தில் ஒடம்போக்கியாற்றின் குறுக்கே ஒற்றை வழி சிறிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தினை மோட்டார் சைக்கிள், சைக்கிள், நடந்து செல்பவர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மட்டுமே பயன்படுத்தும் அளவிற்கு குறுகிய பாலமாக அந்த பாலம் உள்ளது. இந்த பழமையான குறுகிய பாலத்தின் கைப்பிடிகள் இடிந்தும் பாலத்தின் தூண்கள் செல்லரித்தும் காணப்படுகிறது. மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பாலத்தின் இரு புறத்தின் தடுப்புகள் கட்டைகள் இடிந்து விழுந்து வருவதால் சாலைகளில் போக்குவரத்தினை சீரமைப்பதற்கு வைக்கப்படும் இரும்பு தடுப்புகளை கொண்டு அடைத்துள்ளனர். 


திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அவ்வப்போது தற்காலிக சீரமைப்பு பணிகளை செய்தாலும் பாலம் தொடர்ந்து வலுவிழந்து பலவீனப்பட்டு வருகிறது. இதனால் பாலத்தை மக்கள் அச்சத்துடன் கடந்து செல்லக் கூடிய சூழல் நிலவுகிறது. நாகை-தஞ்சை சாலையில் திருவாரூர் விளமல் கல்பாலம் அருகில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இதனால் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குறிப்பாக மடப்புரம் சித்தி விநாயகர் கோவில் தெரு காட்டுகாரத்தெரு பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய பேருந்து நிலையம் விரைவாக செல்வதற்கு பழுதடைந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற மடப்புரம் தெட்சிணாமூர்த்தி மடத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களும் குறுகிய பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.


திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மடப்புரம் அருகில் தான் தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்களும் எளிதாக வருவதற்கு பழுதடைந்த மடப்புரம் பாலத்தை கடந்து வருவது வழக்கம். இந்த பாலத்தில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருவது வழக்கம்.  இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலத்தை கடந்து செல்லும் போது எதிரில் சைக்கிளில் கூட வர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த பழுதடைந்த பாலம் இடிந்ததால் மடப்புரம் பகுதிக்கு வருபவர்கள் இங்கிருந்து வெளியில் செல்பவர்களும் வெகுதூரம் சுற்றி செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த பாலத்தை புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள ஆபத்தான பாலத்தை இடித்து அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் புதிதாக அகலமான பாலத்தை கட்டிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Nagappttinam power cut:  நாகப்பட்டினம் மக்கள் கவனத்திற்கு - நாளை (20-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
Nagappttinam power cut:  நாகப்பட்டினம் மக்கள் கவனத்திற்கு - நாளை (20-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
ABP Nadu Impact: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! வாகன ஓட்டிகள் நிம்மதி
ABP Nadu Impact: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! வாகன ஓட்டிகள் நிம்மதி
மும்முனை மின்சார தட்டுப்பாடு: ஏக்கருக்கு ரூ.22,000 நஷ்டமடையும் அபாயத்தில் டெல்டா விவசாயிகள்
மும்முனை மின்சார தட்டுப்பாடு: ஏக்கருக்கு ரூ.22,000 நஷ்டமடையும் அபாயத்தில் டெல்டா விவசாயிகள்
உலகத்தமிழ் மாநாட்டு அடையாளம்: தஞ்சை புதிய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் நிறுத்தமா?
உலகத்தமிழ் மாநாட்டு அடையாளம்: தஞ்சை புதிய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் நிறுத்தமா?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
Embed widget