மேலும் அறிய

திருவாரூர்: கனமழையால் 1000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின - விவசாயிகள் வேதனை

கானூர், கல்லிக்குடி, தென்ஓடாச்சேரி, பாலியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. பாசன வாய்க்காலை தூர்வாராதது இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாலடி என மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் ஒரு போக சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் 3 போக சாகுபடி பணிகளை டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு 25 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை மே மாதம் 24 ஆம் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மீண்டும் மூன்று போக சாகுபடி பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளிலும் அதே போன்று தற்போது வரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவாரூர்: கனமழையால் 1000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின - விவசாயிகள் வேதனை

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கானூர், கல்லிக்குடி, தென்ஓடாச்சேரி, பாலியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கானூர் பாசன வாய்க்காலை தூர்வாராததே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து விவசாய நிலத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


திருவாரூர்: கனமழையால் 1000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின - விவசாயிகள் வேதனை

இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 8422 ஹெக்டர் பரப்பளவில் குறுவை நெல் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. மேலும் 52 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் இதுவரை அறுவடை செய்யாமல் உள்ள நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக கூத்தாநல்லூர், மன்னார்குடி ,நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர்களும் மழை நீரில் சாய்ந்து உள்ளன. தற்பொழுது மழை நீரை வடிய வைத்தால் மட்டுமே அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்மணிகளை எந்த ஒரு காரணமும் சொல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Nagappttinam power cut:  நாகப்பட்டினம் மக்கள் கவனத்திற்கு - நாளை (20-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
Nagappttinam power cut:  நாகப்பட்டினம் மக்கள் கவனத்திற்கு - நாளை (20-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
ABP Nadu Impact: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! வாகன ஓட்டிகள் நிம்மதி
ABP Nadu Impact: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! வாகன ஓட்டிகள் நிம்மதி
மும்முனை மின்சார தட்டுப்பாடு: ஏக்கருக்கு ரூ.22,000 நஷ்டமடையும் அபாயத்தில் டெல்டா விவசாயிகள்
மும்முனை மின்சார தட்டுப்பாடு: ஏக்கருக்கு ரூ.22,000 நஷ்டமடையும் அபாயத்தில் டெல்டா விவசாயிகள்
உலகத்தமிழ் மாநாட்டு அடையாளம்: தஞ்சை புதிய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் நிறுத்தமா?
உலகத்தமிழ் மாநாட்டு அடையாளம்: தஞ்சை புதிய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் நிறுத்தமா?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
பெண்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் Okinawa Ridge 100! சிங்கிள் சார்ஜில் 149 கி.மீட்டர் மைலேஜ் கேர்ள்ஸ்
பெண்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் Okinawa Ridge 100! சிங்கிள் சார்ஜில் 149 கி.மீட்டர் மைலேஜ் கேர்ள்ஸ்
Embed widget