மேலும் அறிய

திருவாரூரில் கன மழையால் 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் நாசம்!

கல்யாண மகாதேவி, கீழமணலி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன. விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் கன மழையால் 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. விவசாயிகள் கவலை.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் குறுவை சாகுபடி செய்யாத நிலையில் ஒருபோக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு இலக்கு நினைத்திருந்தது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு விவசாயிகள் சாதனை படைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்டத்தில் மேட்டூர் அணை தண்ணீரை நம்பி 70 சதவீத விவசாய பணிகளும், மேலும் ஆழ்துளை கிணறுகளை நம்பி 30 சதவிகித விவசாய பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெல் பயிர்களை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாயத் தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் கன மழையால் 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் நாசம்!
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி, ராதாநல்லூர், வடகரை, கருக்கங்குடி, கல்யாண மகாதேவி, கீழமணலி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் மழை தொடர்ந்து பெய்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் முற்றிலும் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும். ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்பொழுது அறுவடை நேரத்தில் மழை பெய்து நெல் பயிர்களை முற்றிலும் பாதிப்படையச் செய்துள்ளது எங்களை மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவாரூரில் கன மழையால் 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் நாசம்!
மேலும் இந்த ஆண்டு நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு இல்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை என்றால் அடுத்து செய்யக்கூடிய சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் பொருளாதார நஷ்டம் காரணமாக பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை நில வழிகாட்டி மதிப்பில் முரண்பாடா? வரைவுப் பட்டியல் வெளியீடு – 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க ஆட்சியர் ரேவதி அழைப்பு!
தஞ்சை நில வழிகாட்டி மதிப்பில் முரண்பாடா? வரைவுப் பட்டியல் வெளியீடு – 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க ஆட்சியர் ரேவதி அழைப்பு!
சூறாவளி காற்றால் முறிந்து விழுந்த வாழைமரங்கள்... கடும் வேதனையில் தஞ்சாவூர் விவசாயிகள்
சூறாவளி காற்றால் முறிந்து விழுந்த வாழைமரங்கள்... கடும் வேதனையில் தஞ்சாவூர் விவசாயிகள்
5,680 மாணவ, மாணவிகள் உற்சாகப் பங்கேற்பு: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
5,680 மாணவ, மாணவிகள் உற்சாகப் பங்கேற்பு: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளாரில் அச்சுறுத்தும் பன்றிகள்... தொற்றுநோய் பரவும் அபாயம்?
தஞ்சை நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளாரில் அச்சுறுத்தும் பன்றிகள்... தொற்றுநோய் பரவும் அபாயம்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?
விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?
CM Vijay: முன்னாள் தலைமை செயலாளர் உதயநிதி அரெஸ்டில் உதவினாரா? IPS மாற்றம், புதிய பதவி - விஜய் ப்ளான்
முன்னாள் தலைமை செயலாளர் உதயநிதி அரெஸ்டில் உதவினாரா? IPS மாற்றம், புதிய பதவி - விஜய் ப்ளான்
TN Weather News: 8 மாவட்டங்களுக்கு இன்று மழை வார்னிங், சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
8 மாவட்டங்களுக்கு இன்று மழை வார்னிங், சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
Vijay Ajith:
Vijay Ajith: "மகிழ்ச்சியா இருக்கு.." லண்டனில் நடக்கப்போகும் விஜய் - அஜித் சந்திப்பு! ஏகே என்ன சொன்னார் தெரியுமா?
PAK vs ENG: ஆர்ச்சர், அட்கின்சன் எல்லாம் ஓரம்போ.. 8வது விக்கெட்டிற்கு இறங்கி 9 சிக்ஸர் விளாசிய பாகிஸ்தான் இளம் பவுலர்!
PAK vs ENG: ஆர்ச்சர், அட்கின்சன் எல்லாம் ஓரம்போ.. 8வது விக்கெட்டிற்கு இறங்கி 9 சிக்ஸர் விளாசிய பாகிஸ்தான் இளம் பவுலர்!
CNG MPV SUV: 26KM மைலேஜ்..! 2 எஸ்யுவி, 2 எம்பிவி என வரிசை கட்டும் சிஎன்ஜி கார்கள் - பட்ஜெட்டிற்கான மாடல்
26KM மைலேஜ்..! 2 எஸ்யுவி, 2 எம்பிவி என வரிசை கட்டும் சிஎன்ஜி கார்கள் - பட்ஜெட்டிற்கான மாடல்
PAK vs SL: இறுதிவரை த்ரில்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை.! தனி ஆளாக போராடிய பாகிஸ்தான் கேப்டன்!
PAK vs SL: இறுதிவரை த்ரில்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை.! தனி ஆளாக போராடிய பாகிஸ்தான் கேப்டன்!
Modi Pezeshkian Meet: போருக்கு நடுவே இந்தியா வந்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன்; பிரதமர் மோடியுடன் விவாதித்தது என்ன.?
போருக்கு நடுவே இந்தியா வந்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன்; பிரதமர் மோடியுடன் விவாதித்தது என்ன.?
Embed widget