மேலும் அறிய

திருவாரூரில் கன மழையால் 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் நாசம்!

கல்யாண மகாதேவி, கீழமணலி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன. விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் கன மழையால் 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. விவசாயிகள் கவலை.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் குறுவை சாகுபடி செய்யாத நிலையில் ஒருபோக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு இலக்கு நினைத்திருந்தது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு விவசாயிகள் சாதனை படைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்டத்தில் மேட்டூர் அணை தண்ணீரை நம்பி 70 சதவீத விவசாய பணிகளும், மேலும் ஆழ்துளை கிணறுகளை நம்பி 30 சதவிகித விவசாய பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெல் பயிர்களை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாயத் தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் கன மழையால் 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் நாசம்!
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி, ராதாநல்லூர், வடகரை, கருக்கங்குடி, கல்யாண மகாதேவி, கீழமணலி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் மழை தொடர்ந்து பெய்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் முற்றிலும் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும். ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்பொழுது அறுவடை நேரத்தில் மழை பெய்து நெல் பயிர்களை முற்றிலும் பாதிப்படையச் செய்துள்ளது எங்களை மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவாரூரில் கன மழையால் 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் நாசம்!
மேலும் இந்த ஆண்டு நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு இல்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை என்றால் அடுத்து செய்யக்கூடிய சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் பொருளாதார நஷ்டம் காரணமாக பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TTV Statement : விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
Embed widget