மேலும் அறிய

திருவாரூர் : இரண்டு நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்பு..!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஓதுக்கீடு செய்யப்படுகின்ற தடுப்பூசி மருந்துகளை கொண்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதிலும் முகாம்களிலும் அந்த பகுதி மக்களின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்து இல்லாததால், முன் கூட்டியே ஊசிக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட்டு, மற்றவர்களுக்கு ஊசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் போதிய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடும் முகாம் குறித்து முன்கூட்டிய அறிவிப்பு செய்திட அனைவரும் பயன் அடைந்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை
 
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு நிலவுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.  தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவாரூர் உள்பட 11 மாவட்டங்ளில் புதிய தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக அவசியம் என அரசு வலியுறுத்தி வருகிறது.
 
ஆனால் அச்சத்தின் காரணமாக ஊசி போட்டு கொள்வதை மக்கள் தவிர்த்தனர். தற்போது கொரோனா 2-வது அலையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாலும், அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி அவசியம் என்பதை உணர்ந்து மக்கள் ஆர்வத்துடன் ஊசியை போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் கொரோனா தடுப்பூசி தேவைக்கு ஏற்ப கிடைக்காத நிலை இருந்து வருகிறது. 

திருவாரூர் : இரண்டு நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்பு..!
இதனால் திருவாரூர் மாவட்டத்திற்கு ஓதுக்கீடு செய்யப்படுகின்ற தடுப்பூசி மருந்துகளை கொண்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதிலும் முகாம்களிலும் அந்த பகுதி மக்களின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்து இல்லாததால், முன் கூட்டியே ஊசிக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட்டு, மற்றவர்களுக்கு ஊசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் போதிய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடும் முகாம் குறித்து முன்கூட்டிய அறிவிப்பு செய்திட அனைவரும் பயன் அடைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தினால் நேற்றும், இன்றும் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்படாமல் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 92 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 22 ஆயிரம் நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும், செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்துவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும், தட்டுப்பாடின்றி தடுப்பூசியை மாவட்டத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 

தலைப்பு செய்திகள்

பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Embed widget