மேலும் அறிய

தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

’’வெண்ணாற்றை துார் வார வேண்டும், உடையும் நிலையிலுள்ள பகுதியில் சிமெண்டால் ஆன நிரந்தரமான கான்கீரிட் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை’’

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வெண்ணாறு பிரிகின்றது. இதில் தென்பெரம்பூரில் வெட்டாறு பிரிந்து விடுகிறது. வெண்ணாறு, பள்ளியக்கிரஹாரம் வழியாக மன்னார்குடி, திருவாரூர், நாகை மாவட்டங்கள் வழியாக சுமார் 100  கிலோ மீட்டர் துாரத்திற்கு மேல் சென்று கடலில் கலக்கிறது. வெண்ணாறு ஆற்றில் வரும் தண்ணீர் பல ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவாயத்திற்கும் பயன்பெற்று வருகிறது. தஞ்சை பகுதிக்கு தேவையான குடிநீர் ஆதாரத்திற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு, கூடலுார் வெண்ணாறில் படுகை அணை கட்டப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக துார் வாராததால், வெண்ணாற்றில் கோரைகள், காட்டாமணக்கு செடிகள் மண்டி  காடுபோல் காட்சியளிக்கிறது.  மேலும் ஆற்றின் நடுவில் கட்டந்தரையாக மாறி, அதில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது.  மேட்டூரிலுள்ள,  காவிரி ஆற்றில் அபரிதமாக தண்ணீர் வந்தால், அந்த தண்ணீரை, காவிரி ஆற்றிலும், வெண்ணாற்றில் தான் அதிகமாக திறந்து விடுவார்கள். ஆற்றில் தண்ணீர் வந்தாலும், துார் வாராததால் வரும் தண்ணீரின் போக்கு மாறி, பக்கவாட்டு கரைகளை உடைத்து, வெண்ணாற்றின் கரையோரங்களில் உள்ள சுங்கான்திடல், பள்ளியக்கிரஹாரம், குலமங்கலம், கூடலுார் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நிலை கேள்வி குறியாகும். மேலும் கூடலுாரிலுள்ள படுகை அணை உடையும் அபாயம் நிலை உள்ளது என விவசாயிகள் அறிவுறுத்தி வந்தனர்.

தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணலோடை கிராமம், பைபாஸ் சாலை வெண்ணாறு தென்கரையில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு கரையில் அரிப்பு ஏற்பட்டது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்ற உத்தரவிட்டதையடுத்து, பொதுப்பணித்துறையினர், வெண்ணாறு தென்கரையில் ஆய்வு செய்த போது, கரை உடையும் அபாய நிலை இருந்தது. இதனையடுத்து, போர்கால அடிப்படையில், சவுக்கு மரத்தை கொண்டு, மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமான அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி மூன்று நாட்களில் முடியும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தள்ளனர். பொதுப்பணித்துறையினர், ஆய்வு செய்து கண்டு பிடித்து துரிதமாக நடவடிக்கை எடுத்ததால், பல ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி காப்பாற்றப்பட்டது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வெண்ணாறு 100 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனத்திற்காகவும் பயனடைந்து வருகிறது, வெண்ணாற்றில் வருடந்தோறும் துார் வாராததால், கோரைகள் மண்டியது. ஆற்றின் நடுவில் கட்டாந்தரையாக மாறி அதில் கருவேல மரங்கள் முளைத்து விட்டன. இதனால் ஆற்றில் தண்ணீர் வரும்போது, போக்கு மாறி, பக்கவாட்டு கரையை உடைத்து கொண்டு கிராமங்களில் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றில் வெள்ளம் வந்த போது, குலமங்கலம், கூடலுார் இடையில் கரையை உடைத்து கொண்டு சாலை துண்டிக்கப்பட்டதால், 5 கிராமங்கள் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.  கடந்த 2018 ஆம் ஆண்டு கல்விராயன்பேட்டையிலுள்ள கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், பல நுாறு ஏக்கர் நாசமானது. இதே போல் வெண்ணாற்றை தரமான முறையில் துார் வாராததால், கரைகள் உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கண்காணித்ததால், கரை உடையாமல் இருக்க கரையை பலப்படுத்தும் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் பல நுாறு ஏக்கர் சம்பா சாகுபடி, வீணாகாமல் காப்பாற்றப்பட்டது.


தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

தற்போது வெண்ணாறு தென்கரையில் ஏற்பட்டுள்ள 50 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்படும் அபாய நிலை இருந்தது. இதனை 5 டன் சவுக்கு மரத்தை கொண்டு, சுமார் 5 ஆயிரம் மணல் மூட்டைகள், 25 கூலி தொழிலாளர்கள் கொண்டு கரையைபலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.  தற்போது வெண்ணாறு கரையை தற்காலிகமாக பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதி லேசான திருப்பமாக இருப்பதால், எந்நேரத்திலும் கரைகள் உடைய வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், போர்கால அடிப்படையில் வெண்ணாற்றை துார் வார வேண்டும், உடையும் நிலையிலுள்ள அப்பகுதியில் சிமெண்டால் ஆன நிரந்தரமான கான்கீரிட் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என விவசாயிகள் சார்பில் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget