மேலும் அறிய

தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

’’வெண்ணாற்றை துார் வார வேண்டும், உடையும் நிலையிலுள்ள பகுதியில் சிமெண்டால் ஆன நிரந்தரமான கான்கீரிட் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை’’

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வெண்ணாறு பிரிகின்றது. இதில் தென்பெரம்பூரில் வெட்டாறு பிரிந்து விடுகிறது. வெண்ணாறு, பள்ளியக்கிரஹாரம் வழியாக மன்னார்குடி, திருவாரூர், நாகை மாவட்டங்கள் வழியாக சுமார் 100  கிலோ மீட்டர் துாரத்திற்கு மேல் சென்று கடலில் கலக்கிறது. வெண்ணாறு ஆற்றில் வரும் தண்ணீர் பல ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவாயத்திற்கும் பயன்பெற்று வருகிறது. தஞ்சை பகுதிக்கு தேவையான குடிநீர் ஆதாரத்திற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு, கூடலுார் வெண்ணாறில் படுகை அணை கட்டப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக துார் வாராததால், வெண்ணாற்றில் கோரைகள், காட்டாமணக்கு செடிகள் மண்டி  காடுபோல் காட்சியளிக்கிறது.  மேலும் ஆற்றின் நடுவில் கட்டந்தரையாக மாறி, அதில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது.  மேட்டூரிலுள்ள,  காவிரி ஆற்றில் அபரிதமாக தண்ணீர் வந்தால், அந்த தண்ணீரை, காவிரி ஆற்றிலும், வெண்ணாற்றில் தான் அதிகமாக திறந்து விடுவார்கள். ஆற்றில் தண்ணீர் வந்தாலும், துார் வாராததால் வரும் தண்ணீரின் போக்கு மாறி, பக்கவாட்டு கரைகளை உடைத்து, வெண்ணாற்றின் கரையோரங்களில் உள்ள சுங்கான்திடல், பள்ளியக்கிரஹாரம், குலமங்கலம், கூடலுார் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நிலை கேள்வி குறியாகும். மேலும் கூடலுாரிலுள்ள படுகை அணை உடையும் அபாயம் நிலை உள்ளது என விவசாயிகள் அறிவுறுத்தி வந்தனர்.

தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணலோடை கிராமம், பைபாஸ் சாலை வெண்ணாறு தென்கரையில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு கரையில் அரிப்பு ஏற்பட்டது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்ற உத்தரவிட்டதையடுத்து, பொதுப்பணித்துறையினர், வெண்ணாறு தென்கரையில் ஆய்வு செய்த போது, கரை உடையும் அபாய நிலை இருந்தது. இதனையடுத்து, போர்கால அடிப்படையில், சவுக்கு மரத்தை கொண்டு, மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமான அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி மூன்று நாட்களில் முடியும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தள்ளனர். பொதுப்பணித்துறையினர், ஆய்வு செய்து கண்டு பிடித்து துரிதமாக நடவடிக்கை எடுத்ததால், பல ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி காப்பாற்றப்பட்டது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வெண்ணாறு 100 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனத்திற்காகவும் பயனடைந்து வருகிறது, வெண்ணாற்றில் வருடந்தோறும் துார் வாராததால், கோரைகள் மண்டியது. ஆற்றின் நடுவில் கட்டாந்தரையாக மாறி அதில் கருவேல மரங்கள் முளைத்து விட்டன. இதனால் ஆற்றில் தண்ணீர் வரும்போது, போக்கு மாறி, பக்கவாட்டு கரையை உடைத்து கொண்டு கிராமங்களில் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றில் வெள்ளம் வந்த போது, குலமங்கலம், கூடலுார் இடையில் கரையை உடைத்து கொண்டு சாலை துண்டிக்கப்பட்டதால், 5 கிராமங்கள் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.  கடந்த 2018 ஆம் ஆண்டு கல்விராயன்பேட்டையிலுள்ள கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், பல நுாறு ஏக்கர் நாசமானது. இதே போல் வெண்ணாற்றை தரமான முறையில் துார் வாராததால், கரைகள் உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கண்காணித்ததால், கரை உடையாமல் இருக்க கரையை பலப்படுத்தும் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் பல நுாறு ஏக்கர் சம்பா சாகுபடி, வீணாகாமல் காப்பாற்றப்பட்டது.


தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

தற்போது வெண்ணாறு தென்கரையில் ஏற்பட்டுள்ள 50 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்படும் அபாய நிலை இருந்தது. இதனை 5 டன் சவுக்கு மரத்தை கொண்டு, சுமார் 5 ஆயிரம் மணல் மூட்டைகள், 25 கூலி தொழிலாளர்கள் கொண்டு கரையைபலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.  தற்போது வெண்ணாறு கரையை தற்காலிகமாக பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதி லேசான திருப்பமாக இருப்பதால், எந்நேரத்திலும் கரைகள் உடைய வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், போர்கால அடிப்படையில் வெண்ணாற்றை துார் வார வேண்டும், உடையும் நிலையிலுள்ள அப்பகுதியில் சிமெண்டால் ஆன நிரந்தரமான கான்கீரிட் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என விவசாயிகள் சார்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
இன்ஜினியரிங் முடித்தவர்கள் கவனத்திற்கு... செம வேலை வாய்ப்பு உங்களுக்காக!!!
இன்ஜினியரிங் முடித்தவர்கள் கவனத்திற்கு... செம வேலை வாய்ப்பு உங்களுக்காக!!!
திருச்சிக்கு வரும் 11ம் தேதி வருகை புரியும் பிரதமர் மோடி... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
திருச்சிக்கு வரும் 11ம் தேதி வருகை புரியும் பிரதமர் மோடி... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
“உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
Ration Shop Employees Salary : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget