மேலும் அறிய

தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

’’வெண்ணாற்றை துார் வார வேண்டும், உடையும் நிலையிலுள்ள பகுதியில் சிமெண்டால் ஆன நிரந்தரமான கான்கீரிட் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை’’

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வெண்ணாறு பிரிகின்றது. இதில் தென்பெரம்பூரில் வெட்டாறு பிரிந்து விடுகிறது. வெண்ணாறு, பள்ளியக்கிரஹாரம் வழியாக மன்னார்குடி, திருவாரூர், நாகை மாவட்டங்கள் வழியாக சுமார் 100  கிலோ மீட்டர் துாரத்திற்கு மேல் சென்று கடலில் கலக்கிறது. வெண்ணாறு ஆற்றில் வரும் தண்ணீர் பல ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவாயத்திற்கும் பயன்பெற்று வருகிறது. தஞ்சை பகுதிக்கு தேவையான குடிநீர் ஆதாரத்திற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு, கூடலுார் வெண்ணாறில் படுகை அணை கட்டப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக துார் வாராததால், வெண்ணாற்றில் கோரைகள், காட்டாமணக்கு செடிகள் மண்டி  காடுபோல் காட்சியளிக்கிறது.  மேலும் ஆற்றின் நடுவில் கட்டந்தரையாக மாறி, அதில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது.  மேட்டூரிலுள்ள,  காவிரி ஆற்றில் அபரிதமாக தண்ணீர் வந்தால், அந்த தண்ணீரை, காவிரி ஆற்றிலும், வெண்ணாற்றில் தான் அதிகமாக திறந்து விடுவார்கள். ஆற்றில் தண்ணீர் வந்தாலும், துார் வாராததால் வரும் தண்ணீரின் போக்கு மாறி, பக்கவாட்டு கரைகளை உடைத்து, வெண்ணாற்றின் கரையோரங்களில் உள்ள சுங்கான்திடல், பள்ளியக்கிரஹாரம், குலமங்கலம், கூடலுார் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நிலை கேள்வி குறியாகும். மேலும் கூடலுாரிலுள்ள படுகை அணை உடையும் அபாயம் நிலை உள்ளது என விவசாயிகள் அறிவுறுத்தி வந்தனர்.

தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணலோடை கிராமம், பைபாஸ் சாலை வெண்ணாறு தென்கரையில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு கரையில் அரிப்பு ஏற்பட்டது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்ற உத்தரவிட்டதையடுத்து, பொதுப்பணித்துறையினர், வெண்ணாறு தென்கரையில் ஆய்வு செய்த போது, கரை உடையும் அபாய நிலை இருந்தது. இதனையடுத்து, போர்கால அடிப்படையில், சவுக்கு மரத்தை கொண்டு, மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமான அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி மூன்று நாட்களில் முடியும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தள்ளனர். பொதுப்பணித்துறையினர், ஆய்வு செய்து கண்டு பிடித்து துரிதமாக நடவடிக்கை எடுத்ததால், பல ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி காப்பாற்றப்பட்டது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வெண்ணாறு 100 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனத்திற்காகவும் பயனடைந்து வருகிறது, வெண்ணாற்றில் வருடந்தோறும் துார் வாராததால், கோரைகள் மண்டியது. ஆற்றின் நடுவில் கட்டாந்தரையாக மாறி அதில் கருவேல மரங்கள் முளைத்து விட்டன. இதனால் ஆற்றில் தண்ணீர் வரும்போது, போக்கு மாறி, பக்கவாட்டு கரையை உடைத்து கொண்டு கிராமங்களில் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றில் வெள்ளம் வந்த போது, குலமங்கலம், கூடலுார் இடையில் கரையை உடைத்து கொண்டு சாலை துண்டிக்கப்பட்டதால், 5 கிராமங்கள் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.  கடந்த 2018 ஆம் ஆண்டு கல்விராயன்பேட்டையிலுள்ள கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், பல நுாறு ஏக்கர் நாசமானது. இதே போல் வெண்ணாற்றை தரமான முறையில் துார் வாராததால், கரைகள் உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கண்காணித்ததால், கரை உடையாமல் இருக்க கரையை பலப்படுத்தும் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் பல நுாறு ஏக்கர் சம்பா சாகுபடி, வீணாகாமல் காப்பாற்றப்பட்டது.


தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

தற்போது வெண்ணாறு தென்கரையில் ஏற்பட்டுள்ள 50 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்படும் அபாய நிலை இருந்தது. இதனை 5 டன் சவுக்கு மரத்தை கொண்டு, சுமார் 5 ஆயிரம் மணல் மூட்டைகள், 25 கூலி தொழிலாளர்கள் கொண்டு கரையைபலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.  தற்போது வெண்ணாறு கரையை தற்காலிகமாக பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதி லேசான திருப்பமாக இருப்பதால், எந்நேரத்திலும் கரைகள் உடைய வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், போர்கால அடிப்படையில் வெண்ணாற்றை துார் வார வேண்டும், உடையும் நிலையிலுள்ள அப்பகுதியில் சிமெண்டால் ஆன நிரந்தரமான கான்கீரிட் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என விவசாயிகள் சார்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Embed widget