மேலும் அறிய

தொடர் சோதனையில் மாநகராட்சி அதிகாரிகள்... பிளாஸ்டிக், புகையிலைப் பொருட்கள் விற்பனை கடைகளுக்கு அபராதம்

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில்  அதிரடி சோதனை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில்  அதிரடி சோதனை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழிகாட்டுதலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நகர் பகுதி முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர் சோதனையில் மாநகராட்சி அதிகாரிகள்... பிளாஸ்டிக், புகையிலைப் பொருட்கள் விற்பனை கடைகளுக்கு அபராதம்

மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு வருவதோடு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.

அந்தவகையில் நேற்று தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றியுள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 50க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும் இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். சோதனையின் போது பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி துப்புரவு அலுவலர் ராமச்சந்திரன் தெரிவித்தார். 


தொடர் சோதனையில் மாநகராட்சி அதிகாரிகள்... பிளாஸ்டிக், புகையிலைப் பொருட்கள் விற்பனை கடைகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. கார்பன் அணுக்களின் இந்த நீண்ட சங்கிலிகள் வேதியியல் ரீதியாக நிலையானவை, அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  மலிவு விலையாக இருந்தபோதிலும், பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்பது தெளிவான ஒன்றாகும்.

பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டால் மக்காத கழிவுகள் தற்போது காற்று, நீர், மண் மற்றும் இயற்கையின் அனைத்து பகுதிகளிலும் மாசு ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பைகள் சிதைவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும், இது உலகளவில் நிலம் மற்றும் நீர் மாசுபாட்டிற்கு பங்களிக்கிறது. பிளாஸ்டிக்கின் அதிகப்படியான பயன்பாடு நமது உணவுச் சங்கிலியில் உறுப்பு செயலிழப்பு மற்றும் சுவாசக் கோளாறு போன்ற ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்துகிறது.

நிலத்திலும், நீரிலும் உள்ள விலங்குகள், பிளாஸ்டிக்கைத் தெரியாமல் உட்கொள்வதால், அடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளில் சிக்கி அடிக்கடி இறக்கின்றன. கூடுதலாக, பிளாஸ்டிக் பைகள் நீர்வழிகளில் குவிந்து, வடிகால் மற்றும் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுகின்றன, இதன் விளைவாக நோய் பரப்பும் மற்றும் நீர்வாழ் விலங்குகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் குறைகிறது.

பிளாஸ்டிக் மாசுபாடு நமது பெருங்கடல்களில் பரவுகிறது, ஆண்டுதோறும் 8 மில்லியன் டன்கள் நுழைகிறது. பிளாஸ்டிக் குப்பைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன, கடல் ஆமைகளை மூச்சுத் திணற வைக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 

மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நல அபாயங்களில் எண்டோகிரைன் அமைப்பில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் வெளிப்பாட்டின் நீண்டகால விளைவுகள் ஆகியவை அடங்கும்.  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான போராட்டம் என்பது சுற்றுச்சூழலுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, நமது பூமியின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்திற்கான போராட்டமாகும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கான தடையை ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒரு ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் வழி வகுக்கிறோம்.

பிளாஸ்டிக் இல்லாத நாளை நோக்கி நாம் நகர்ோம். பிளாஸ்டிக் தடை என்பது வசதிக்கு எதிரான போராட்டம் அல்ல; இது ஒரு நிலையான எதிர்காலத்திற்கு தேவையான மாற்றமாகும்.  பிளாஸ்டிக்கின் பிடியில் இருந்து விடுபட்டு, வாழ்க்கை துடிப்பான, கெட்டுப்போகாத பெருமையுடன் வெளிப்படும் எதிர்காலத்தை மீட்டெடுப்போம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Embed widget