மேலும் அறிய

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு

2020ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2020ம் ஆண்டுக்குப் பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக பணியாளர்கள் நியமனம் ரத்து

பணி வரன்முறை கோரி ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் சத்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கில் பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என 2020ம் ஆண்டு நவம்பர் 298ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஊரகவளர்ச்சித்துறை பதில் அளித்தது. 

வழக்கு தொடங்கியது எப்படி?

அரியலூர் மாவட்டம் 1997ம் ஆண்டு ஊரக வளர்ச்சித்துறையில் கணினிப்பிரிவு உதவியாளராக நியமிக்கப்பட்டவர் சத்யா. இவர்தான் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். தன்னுடைய பணி வரன்முறைக்காக அவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. 

நீதிமன்றம் கேள்வி:

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்காலிக நியமன அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என்று தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வாரா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

இந்த வழக்குதான் நீதிமன்றம் ஆர்.சுப்பிரமணியன், அருள்முருகன் அடங்கிய அமர்வின் முன்பு விசாரைணக்கு வந்தது. இதில், தலைமைச் செயலாளர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என 202ம் ஆணடு நவம்பர் 28ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஊழியர்கள் அதிர்ச்சி:

இதையடுத்து, நீதிபதிகள் 2020ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக பணியாளர்களையும் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை குறித்து வரும் மார்ச் 17ம் தேதி தாக்கல் செய்யும் அறிக்கையுடன், தற்காலிக பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் இந்த உத்தரவால் 2020ம் ஆண்டுக்குப் பின் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. 

தலைப்பு செய்திகள்

Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(08-07-2026) எங்கெல்லாம் மின் தடை ஏற்படும்? எத்தனை மணி நேரம்? - லிஸ்ட் வந்தாச்சு
தமிழகத்தில் நாளை(08-07-2026) எங்கெல்லாம் மின் தடை ஏற்படும்? எத்தனை மணி நேரம்? - லிஸ்ட் வந்தாச்சு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Erode power cut: ஈரோட்டில் நாளை (08-07-2026) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
ஈரோட்டில் நாளை (08-07-2026) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Embed widget