மேலும் அறிய

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு

2020ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2020ம் ஆண்டுக்குப் பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக பணியாளர்கள் நியமனம் ரத்து

பணி வரன்முறை கோரி ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் சத்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கில் பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என 2020ம் ஆண்டு நவம்பர் 298ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஊரகவளர்ச்சித்துறை பதில் அளித்தது. 

வழக்கு தொடங்கியது எப்படி?

அரியலூர் மாவட்டம் 1997ம் ஆண்டு ஊரக வளர்ச்சித்துறையில் கணினிப்பிரிவு உதவியாளராக நியமிக்கப்பட்டவர் சத்யா. இவர்தான் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். தன்னுடைய பணி வரன்முறைக்காக அவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. 

நீதிமன்றம் கேள்வி:

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்காலிக நியமன அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என்று தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வாரா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

இந்த வழக்குதான் நீதிமன்றம் ஆர்.சுப்பிரமணியன், அருள்முருகன் அடங்கிய அமர்வின் முன்பு விசாரைணக்கு வந்தது. இதில், தலைமைச் செயலாளர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என 202ம் ஆணடு நவம்பர் 28ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஊழியர்கள் அதிர்ச்சி:

இதையடுத்து, நீதிபதிகள் 2020ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக பணியாளர்களையும் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை குறித்து வரும் மார்ச் 17ம் தேதி தாக்கல் செய்யும் அறிக்கையுடன், தற்காலிக பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் இந்த உத்தரவால் 2020ம் ஆண்டுக்குப் பின் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget