மேலும் அறிய

வேலியே பயிரை மேய்ந்த கதை... பாடம் கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியருக்கு பாடம் கற்றுக்கொடுத்த போலீஸ்

போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ரமேஷை நேற்று கைது செய்தனர். பாடம் கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியருக்கு இப்போது போலீசார் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்: வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை தஞ்சை மாவட்டத்தில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்,56,. இவர் திருவாரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டில் டியூசன் வகுப்பு எடுத்து வருகிறார்.  தனது டியூசனில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் சிலருக்கு ஆசிரியர் ரமேஷ் வட்டிக்கு பணமும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இவர், டியூசனில் 11ம் வகுப்பு படிக்கும், 16 வயது பள்ளி சிறுமியின் பெற்றோரும் கடனாக பணம் பெற்றுள்ளனர். இதனால், கடன் தொகையை கேட்பதுபோல் மாணவியிடம் டியூசனில் பலமுறை ஆசிரியர் ரமேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், நேற்றுமுன்தினம் பணம் கேட்க சென்ற போது வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியை ஆசிரியர் ரமேஷ் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதுகுறித்து மாணவி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாய், ஆடுதுறை அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில், ரமேஷிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ரமேஷை நேற்று கைது செய்தனர். பாடம் கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியருக்கு இப்போது போலீசார் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். தங்களிடம் பாடம் கற்க வரும் மாணவியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் வேலியாக இருக்க வேண்டிய ஆசிரியர் இப்படி கள்ள ஆடாக மாறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், இப்படி போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வீடுகளில் குழந்தைகள் இருக்கும் நேரத்தை விட ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். தங்களை நம்பி வரும் குழந்தைகளை தங்களின் குழந்தைகளாக நினைக்காமல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, கருப்பு ஆடாக ஆசிரியர்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதுபோன்ற ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தஞ்சாவூர் அருகே 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.

காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை மாவட்டம் அரியாணிப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் விக்னேஷ் (19). ஜேசிபி ஆபரேட்டர். இவர் பணி காரணமாக தஞ்சாவூர் அருகே ஒரு கிராமப்பகுதிக்கு வந்த போது அந்த பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி காதலிப்பதாக விக்னேஷ் தெரிவித்து நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி செவ்வாய்கிழமை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான அந்த சிறுமி தனக்கு நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அந்த சிறுமியின் பெற்றோர் தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் விக்னேசை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் விக்னேஷ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Embed widget