Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
வருடத்தின் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது, இந்தியாவிலும் உலகெங்கிலும் பல இடங்களில் வான பார்வையாளர்கள் அந்த அறிய காட்சியைக் காண முடிந்தது.

இரத்த நிலவு என்று பிரபலமாக அழைக்கப்படும் முழு சந்திர கிரகணம் இன்று, மார்ச் 3, 2026 இந்தியா முழுவதும் தெரிந்தது.
சந்திர கிரகணம்:
இன்று வருடத்தின் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது, இந்தியாவிலும் உலகெங்கிலும் பல இடங்களில் வான பார்வையாளர்கள் அந்த அறிய காட்சியைக் காண முடிந்தது.
இந்தியாவில் கடைசியாக சந்திர கிரகணம் செப்டம்பர் 7, 2025 மற்றும் செப்டம்பர் 8, 2025 ஆகிய இடைப்பட்ட இரவில் தெரிந்தது.இந்த சந்திர கிரணத்தை இந்தியாவில் பலரும் கண்டுகளித்தனர், இந்திய நேரப்படி பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:46 மணிக்கு முடிவந்தடைந்தது, இது 3 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடிக்கும்
அடுத்த சந்திர கிரகணம் ஜூலை 6-7, 2028 அன்று இந்தியாவில் தெரியும், இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028 அன்று இந்தியாவில் தெரியும்.

சந்திர கிரகணம் என்றால் என்ன?
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் இன்று நிகழவுள்ளது. சூரியனின் கதிர்கள் பூமியில் விழும்போது, அதன் நிழல் நிலவின் மீது விண்வெளியில் விழுகிறது. சந்திரன் நிழலின் திட்டுக்குள் நுழையும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இரத்த நிலவு தெரிந்த நேரங்கள்:
பெங்களூரு - மாலை 6:32
ஹைதராபாத் - மாலை 6:26
மதுரா - மாலை 6:25
சண்டிகர் - மாலை 6:27
நொய்டா - மாலை 6:20
போபால் - மாலை 6:21
சென்னை - மாலை 6:21

இரத்த நிலவு எப்படி உருவாகிறது?
சந்திர கிரகணத்தின் போது பூமி, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் சரியாக நேர்க்கோட்டில் வரும். அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். சூரிய ஒளி நேரடியாக நிலவின் மீது படாத போதிலும், நிலவு முழுமையாக இருட்டாகாமல் சிவப்பு நிறத்தில் மின்னும்.

சென்னையில் தெரிந்த இரத்த நிலவின் புகைப்படங்கள்
























