மேலும் அறிய

திருச்சி-தஞ்சை இடையே ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்க கோரிக்கை

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ரயில் பயணிகளுக்கான வசதிகள் குறித்த ஆய்வுக் குழுவின் தலைவர் பி.கே.கிருஷ்தாஸ் தலைமையில் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ரயில் பயணிகளுக்கான வசதிகள் குறித்த ஆய்வுக் குழுவின் தலைவர்  பி.கே.கிருஷ்தாஸ் தலைமையில் ஆய்வு செய்தனர். அப்போது, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர், பயணிகளுக்கான முதலுதவி மருத்துவ மையம்,  நகரும் படிக்கட்டுகள், பிளாட்பார பயணிகளின் இருக்கைகள், மேற்கூரைகள், நிழற்குடைகள் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா,  கண்காணிப்பு கேமராக்களின் தெளிவாக தெரிகிறது, ரயில் நிலையம் முழுவதும் உள்ளதா, தரமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா, துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக  கழிவறை வசதிகள் பராமரிக்கப்படுகிறதா, கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என அனைத்து ரயில் நிலையத்தில் உள்ள பகுதிகள் முழுவதையும் நேரில் பார்வையிட்டு இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.


திருச்சி-தஞ்சை இடையே ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்க கோரிக்கை

அப்போது அந்த குழுவின் தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸிடம், தஞ்சாவூர் - திருச்சி ரயில் பயணிகள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வெ.ஜீவக்குமார் கோரிக்கை மனுவை வழங்கி அவர்களிடம் கூறுகையில், கொரோனா தளர்வுக்கு பின் பல பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பயணிகள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை காலை நேரத்தில் இயக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்பட்டால் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அலுவலக பணிகளுக்கு செல்வோர், பொதுமக்களுக்கு பயன் தரக்கூடியதாகும். இந்த ரயிலை உடனடியாக இயக்கப்பட வேண்டும்.  இதனால் ரயில் சென்று வந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


திருச்சி-தஞ்சை இடையே ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்க கோரிக்கை

அதே, போல் சாலை  போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டும், வாகனங்களின் பயன்பாட்டால் காற்று மாசுபடுவதும் அதிகரித்து வருவதால், தஞ்சாவூர்-திருச்சி இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும்.  தினமும் வேலைக்கு சென்று வரும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் சீசன் டிக்கெட்டை அனுமதிக்க வேண்டும். ரயிலில் பெரும்பாலான ஏழைகள் சென்று வரும் நிலையில், பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டும், சில ரயில்களில் முன்பதிவு என உள்ளதால் பஸ்சில் செல்லுகின்ற நிலை உள்ளது.


திருச்சி-தஞ்சை இடையே ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்க கோரிக்கை

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை மீண்டும் இயக்கவதோடு, அந்த ரயில்கள் ஏற்கெனவே நிறுத்தப்பட்ட இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரும் படிக்ட்டுக்களை இயக்க வேண்டும், பிளாட்பாரம் 2,3,4 மேற்கூரை இல்லாமல் உள்ளது. குடிநீர் வசதிகள் குறைவாக உள்ளது, டிஜிட்டில் தகவல் பலகை மற்றும் கூடுதல் டிஜிட்டல் டிக்கெட் கவுண்டர்கள் வேண்டும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட சென்னை சென்ற 110 என்ற பெயர் கொண்ட ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்பதை வலியுத்தி கோரிக்கை மனுவை வழங்கினார். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட  ஆய்வுக்குழுவினர் ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
"தூய்மை தஞ்சை" எனும் உன்னத சுகாதார இயக்கம்... தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி தொடக்கி வைத்தார்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget