மேலும் அறிய

’மன்னார்குடியை தனி மாவட்டம் ஆக்குங்கள்’ தீர்மானம் போட்ட சங்கங்கள்..!

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும். 150 ஆண்டுகள் பழமைமிக்க கட்டமைப்புகளை கொண்ட மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது

ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சியினர் சேவை சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியை தலைநகரமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் இதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மீண்டும் மறுவரையறை செய்ய வேண்டும் என மன்னார்குடியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

’மன்னார்குடியை தனி மாவட்டம் ஆக்குங்கள்’ தீர்மானம் போட்ட சங்கங்கள்..!
 
மன்னார்குடி நகரம் 155 ஆண்டு கால நகராட்சியை கொண்ட பழமையான நகரம். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திரப்போராட்ட வீரர்கள் பங்கேற்ற நகரம். தேசியம், திராவிடம், பொதுவுடமை, கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் இந்த பகுதியில் உருவாகி தமிழக அரசியலுக்கு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய சூழலில் மன்னார்குடி நகரத்தை மாவட்டத் தலைநகரமாக தரம் உயர்த்த வேண்டுமென கடந்த 25 ஆண்டுகளாக மன்னார்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கை பரிசீலிக்க படாமல் உள்ளது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், மன்னார்குடியில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து ஆலோசனை கூட்டம் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக  செயல்படும் நேசக்கரம் அமைப்பின் தலைவர் காவிரி எஸ்.  ரங்கநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள்z, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர்  மற்றும் பல்வேறு சேவை சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

’மன்னார்குடியை தனி மாவட்டம் ஆக்குங்கள்’ தீர்மானம் போட்ட சங்கங்கள்..!
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய, 10 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்கின்ற அடிப்படையில், குறைந்தபட்சம் இதனை 6 மாவட்டங்களாக தற்போது உருவாக்க முடியும். அதன்படி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும். 150 ஆண்டுகள் பழமைமிக்க கட்டமைப்புகளை கொண்ட மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். அந்த மாவட்டத்தில் மன்னார்குடி நீடாமங்கலம் திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் வருவாய் வட்டங்கள், அதுபோல் நிலுவையில் உள்ள முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தையும் இணைப்பதோடு,  பட்டுக்கோட்டை வருவாய் வட்டத்திலுள்ள மதுக்கூர் நகரத்தையும்,  வட்டம்  ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி நகரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் வட்டங்களை உருவாக்கி, மேற்கண்ட வட்டங்களை இணைத்து, மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
’மன்னார்குடியை தனி மாவட்டம் ஆக்குங்கள்’ தீர்மானம் போட்ட சங்கங்கள்..!
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாக தமிழக அரசை பல்வேறு வகையிலும் வலியுறுத்துவது எனவும்,  இந்த தீர்மானத்தை தமிழக அரசு அனுப்பி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மன்னார்குடி மக்கள் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!
 
 
 

தலைப்பு செய்திகள்

போக்சோ வழக்கில் சிறை கைதி சாவு: மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார்; உடலை வாங்க மறுத்து போராட்டம்
போக்சோ வழக்கில் சிறை கைதி சாவு: மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார்; உடலை வாங்க மறுத்து போராட்டம்
கிலோ ரூ.75-ஐ தொட்ட சர்க்கரை... அதிர்ச்சியில் உறைந்துள்ள  தஞ்சை மக்கள்
கிலோ ரூ.75-ஐ தொட்ட சர்க்கரை... அதிர்ச்சியில் உறைந்துள்ள  தஞ்சை மக்கள்
35 ஆண்டுகளாக விவசாய நிலத்தில் உடலை சுமந்து செல்லும் அவலம்! வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்
35 ஆண்டுகளாக விவசாய நிலத்தில் உடலை சுமந்து செல்லும் அவலம்! வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்
நேதாஜி பூங்கா பெயர் பலகை எங்கே? மீண்டும் வைத்து சிலை நிறுவ கோரிக்கை
நேதாஜி பூங்கா பெயர் பலகை எங்கே? மீண்டும் வைத்து சிலை நிறுவ கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
Tambaram to Chengalpattu : டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! -தவெக அரசின் மாஸ் பிளான்
டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! - தவெக அரசின் மாஸ் பிளான்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!
பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
Land registration : ஆன்லைன் பத்திரப்பதிவில் புது ரூல்ஸ்.! LOAN தொகை விடுவிப்பு- வங்கிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
ஆன்லைன் பத்திரப்பதிவில் புது ரூல்ஸ்.! LOAN தொகை விடுவிப்பு- வங்கிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
Embed widget